வாசகர்கள் கருத்துகள் ( 105 )
பழனி நோ சான்ஸ். நிச்சயம் உன்னை அப்பா வெற்றி கொள்ள விட மாட்டார். உன் தொகுதியில் ஏராள பணம் புரளும் விளையாடும். சாமா பேத தண்ட அதனையய வழிகளும் கையாளப்படும் உன் ஆணவ திமிரை அடக்க. சுய நலமியான உன் அரசில் எதிர் காலம் அஸ்தமனம் எதிர் பார்க்கலாம். அல்லது ஸ்டாலின் மேடையில் பேசும் போது வேட்டிக்குள் தவழ்ந்து சென்று பிடிக்கவும். பின் அஞ்சேல் என்று அபயம் அளிப்பார்.
அப்புறம் எதற்கு கூட்டணினு உதார் உடுற. தில்லியிருந்தா தனியா நில்லு. ஊர்ந்து போயி பதவி வாஙகினது மறந்துடுச்சா. தனியா நினா டெபொசியிட்டுக்கென மொலாசம் ஆயிடும் தானே பயம். அப்போ கூட்டணிக்கு ஜெ ஜெ சொன்னபோது தொண்டார்களை குண்டர்களாக நினைத தீர்களா? ஞ்யாபகம் வர வில்லையா? திறமையை மிக்க தலைவர் தான் ஒரு கட்சிக்கு வேண்டும். பேச்சு வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகா இருக்க வேண்டும். விளக்கெண்ணெய்யை மக்கள் விரும்ப மாட்டார்கள். தீர்வு காண முடிய வில்லையா வேறு மூத்த தலையவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டும். கூழுக்கு ஆசை மீசைக்கும் ஆசையா? அரசியலை துரோக அரசியலில் அல்ல நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலையிடம் கற்று கொள்ளுங்கள் துரோகம் நிலையக்காது. அவர் எப்படி மக்களிடம் இப்படி செல்வாக்கு மிக்க வராக மாறினார் என்று.
. ஏற்கனவே அதிமுக 20% வோட்க்கும் கீழே வந்தாச்சு. இப்படி பேசினால் இன்னும் கீழே போகும்
“ வாரிசை முதல்வர் ஆக்குவதற்காக, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற துடிப்பான நிலையில் அ.தி.மு.க., இல்லை.” - வாரிசை அமலாக்கத்துறையிடமிருந்து காப்பாத்துறதுக்கு பாஜாக்கா கூட்டணி என்ற நிலைமை என்கிறீரா? உங்கள் சம்பந்தியை பிடித்தால் கர்நாடக மாநில பாஜக தலையும் உருளுமே, பிறகும் உமக்கு என்ன பயம்? அதனால் தான் துள்ளுகிறீர்களா? ஒருவேளை கொடநாடு வழக்கில் உங்களையே சாச்சுட்டா? ஆத்தீ, நெனைச்சாலேபகீர்ன்னு இருக்கா?
இது தான் அய்யா திமிர் பேச்சு. மொதல்ல நீங்க ஜெயிக்க முடியுமா என்று பாருங்கள் அதுக்கு அப்புறம் ஆட்சி பத்தி பேசுங்க. இப்போவே இப்படி பேசினால் ஒரு ஒட்டு கூட கிடைக்காது. நீங்கள் ஒன்னும் தி மு க வுக்கு சளைத்தவர்கள் அல்லவே. காலில் விழுந்து மேலே வந்தவர்கள் தானே.
ஏதோ ஆட்சியே வந்த மாதிரி பேசறாரு.
வரப்போறதில்லைன்னு தெரிஞ்சே அமீத்சா சொன்னாருன்னு அண்ணமலே எதுக்கு இந்த குதி குதிக்கணும்?
EPS அவர்களே, நீங்கள் சொல்வதும் நடக்காது, அமித் ஷா சொல்வதும் நடக்காது. நீங்கள் இருவரும் அஞ்சும் ஒரு முடிவுதான் வரும்.
Of course, only if they win, this question arises. So, dont bother.
திருட்டு ஆட்சியில் பங்கு தேவையில்ல ஆனால் 30 சதவீத சீட் பெறணும்.
நினைப்பு தான் சில நேரம் பிழைப்பை கெடுக்குமாம் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருது ஒரு ஊரில், பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். வீடு வீடாக போய் பிச்சையெடுத்து உண்பதே அவன் வேலை. ஒரு முறை, அவன் பிச்சையெடுக்கும் போது, ஒரு வீட்டில், அவனுக்கு, ஒரு பானை நிறைய பாலை கொடுத்தார்கள். பானை நிறைய, பால் கிடைத்த சந்தோஷத்தில், அவன் அதை வீட்டுக்கு கொண்டுவந்து, காய்ச்சி, அதில் கொஞ்சம் குடித்துவிட்டு, மீதியை தயிராக்கும் பொருட்டு, உறையூற்றி ஒரு உறியில் தொங்கவிட்டான். தனது குடிசையில் உள்ள கயிற்று கட்டிலில் சாய்ந்தவன் மெல்ல கண்ணயர்ந்தான். கனவில், யோசிக்க ஆரம்பித்தான். “காலை இந்த பானையில் உள்ள பால் முழுதும் தயிராகியிருக்கும். தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பேன். வெண்ணையை காய்ச்சினால் நெய் கிடைக்கும். அதை பக்கத்து ஊர் சந்தைக்கு கொண்டு சென்று விற்று நல்ல லாபம் பார்ப்பேன். பின்னர் அதை வைத்து ஒரு ஜோடி ஆடுகள் வாங்குவேன். ஆடுகளை வீட்டுக்கு கொண்டு வந்து வளர்ப்பேன். இரண்டு விரைவில் நான்காகும். நான்கு அப்படியே எட்டாகும். ஒரு ஆட்டுப் பண்ணையே வைக்கும் அளவிற்கு என்னிடம் ஆடுகள் பல்கி பெருகும். ஆடுகளை அப்படியே சந்தையில் விற்றுவிட்டு, இரண்டு பசுக்கள் வாங்குவேன். பசுக்கள் மூலம் பால் வியாபாரம் செய்து நன்கு பொருளீட்டுவேன். பசுக்கள் பல்கி பெருகும். அடுத்து அதை வைத்து குதிரைகளை வாங்குவேன். குதிரைகளும் பல்கி பெருக, குதிரை லாயம் அமைப்பேன். குதிரைகளை அக்கம் பக்கத்து ஊர்களுக்கும், சமஸ்தானங்களுக்கும் விற்பேன். இப்படி நான் செல்வந்தனானவுடன், எனக்கு, பெண் தர, பலர் முன்வருவார்கள். ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அவளுடன் குடும்பம் நடத்துவேன். எனக்கு ஒரு மகன் பிறப்பான். அவனை நான் கொஞ்சி மகிழ்வேன். மகன் தவழும் பருவத்தில், தவழ்ந்துகொண்டே குதிரைகளுக்கு அருகே செல்வான். குதிரைகள் குழந்தையை மிதித்துவிட்டால் என்ன செய்வது? எனக்கு கோபம் தலைக்கேறும். “குழந்தை குதிரைக்கு அருகே செல்வதை கூட பார்க்காமல் என்னடி செய்துகொண்டிருக்கிறாய்?” என்று என் மனைவியை எட்டி உதைப்பேன்.” கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவன், தன்னை மறந்து எழுந்து கால்களை தூக்கி உதைக்க, மேலே உறியில் தொங்கவிடப்படிருந்த பால், பானையில் கால்பட்டு, பானை உடைந்து கீழே விழுந்து, எல்லா பாலும் கொட்டிவிடுகிறது. பிச்சையாக கிடைத்த எல்லா பாலும் வீணாக போய்விடுகிறது. நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள் அல்லவா? அதன் அர்த்தம் இது தான். இலக்குகளை அடைய உழைக்காமல் செயலாற்றாமல் வெறும் கனவு மட்டுமே காண்பவர்களுக்கும், மேற்கூறிய கதையில் உள்ள பிச்சைக்காரனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. மேலே நான் குறிப்பிட்டுள்ள பிச்சைகாரன் உதாரணம், தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுப்பதில் கவனத்தை செலுத்தாமல், அதற்கு உழைக்காமல், எதிர்காலத்தில், வெற்றி பெற்றால், மீண்டும் படியுங்கள் வெற்றி பெற்றால் ? வெற்றி பெற்றால் ? என்பது இங்கே Question Mark தான் ? அவ்வாறு இருக்கும் போது, வெற்றி பெற்றால் ? கூட்டணி ஆட்சி தான் என்று, முக்கிய கூட்டணி கட்சியான, அ.தி.மு.க வை சீண்டுவது போல், கருத்து தெரிவிக்கும் பா.ஜ.க வா ? திரு. அமித்ஷா அல்லது, அந்த கருத்தில், தங்களுக்கு உடன்பாடில்லை, வெற்றி பெரும் முன்னே, இவ்வாறெல்லாம் பேசினால், அ.தி.மு.க. தொண்டர்கள் சோர்வடைவார்கள். திரு.அமித்ஷா அவர்கள், இவ்வாறு பேச வேண்டாம் என்று கூறுங்கள் என்று, பா.ஜ.க தேசிய தலைவர் திரு.நட்டா மற்றும், Prime Minister திரு.மோடி அவர்களிடம் நாசூக்காக கூறுவதை விட்டு விட்டு, பொதுவெளியில், வெளிப்படையாக எதிர்த்து, கருத்து கூறி வரும், அ.தி.மு.க வா ? அல்லது இருவருமேவா ? என்பதை, அறிவார்ந்த, சக தினமலர் வாசகர் நண்பர்கள் இங்கே குறிப்பிடலாம், என வேண்டுகிறேன். யார் மீது தவறு ? வாசகர்கள் தீர்ப்பு என்ன ? தீர்ப்பு-1 திரு.அமித்ஷா மீது தவறு தீர்ப்பு-2 திரு.பழனிசாமி மீது தவறு தீர்ப்பு-3 உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட ? என்ற பழமொழிக்கேற்ப இருவருமே, தேவையற்ற வார்த்தைகளை வெளியிடுகின்றனர் ?
1.amit shah started this OPENLY AND IN PUBLIC.He did it with Modis approval...it is obvious
தீர்ப்பு 1 மற்றும் தீர்ப்பு 2 கூடவே தீர்ப்பு 3