உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் ஜூன் 1ல் கூடுகிறது தி.மு.க., பொதுக்குழு!

மதுரையில் ஜூன் 1ல் கூடுகிறது தி.மு.க., பொதுக்குழு!

சென்னை: மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ''சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தலைமை முடிவு செய்யும்'' என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார். சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=48o19yxt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர், மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் செய்யும் மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தலைமை முடிவு!

தி.மு.க., மா.செ., கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தலைமை முடிவு செய்யும். நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்வது உங்கள் கடமை. சட்டசபை தேர்தலில் திறமையானவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விட தங்கள் மாவட்டத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல் மூலம் அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். பா.ஜ., எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. பா.ஜ.,வை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம். பயத்தில் தான் பா.ஜ., கூட்டணியை இ.பி.எஸ்., ஏற்றுக்கொண்டார். நமது பலமே கட்சியின் கட்டுமானம் தான். இந்த கட்டமைப்பு எந்த கட்சிக்கும் இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rengaraj
மே 03, 2025 17:08

பொதுக்குழு கூடி என்ன பண்ணப்போறாங்க எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே வழக்கம் போல உங்களை இந்திரன், சந்திரன், சூரியன், அக்னி, இமய மலை , வங்க கடல் , அரபிக்கடல் , அப்படின்னு வாய்க்கு வந்தபடி குடுக்குற காசுக்கு மேல கூவப்போறாங்க வோட்டுக்கு எவ்வளவு பண பட்டுவாடா ன்னு முடிவு எடுக்கப்போறீங்க வேற என்ன செய்யப்போறீங்க முதல்ல கொடுத்த வாக்குறுதியை லிஸ்ட் போட்டு பாருங்க என்னவெல்லாம் விட்டுப்போச்சுன்னு


BC SUBRAMANIAN
மே 03, 2025 16:37

மக்களுக்கு சேவை செய்வதை விட்டு விட்டு நன்றாக கொள்ளை அடிக்க அறியாமையில் வாக்களிக்கும் அறியா ஜனங்கள். கொஞ்சம் கூட சுயமரியாதை சுய கட்டுப்படி இல்லை. முக்யமாக ஒழுக்கம் இல்லை. மிக மிக கேவலமான்னு அரசு. தினமும் பாலியல் தொல்லையில் கைதானவர்கள் பட்டியல், கொலை செய்தவர்கள் பட்டியல் இன்னும் நெறய. ஒரு ஊர்ல கூட நல்ல பேருந்து நிலையம், சுகாதாரம் இல்லை. மிகவும் கேட்ட நாத்தத்தோடு இருக்கிறது. இதுல மிக மோசமானது உருப்படாத தீர்மானம். ஒரு பிரயோஜனமும் இல்லை. மக்கள் சிந்திக்கும் திறன் பெற்று இவர்களை புறந்தள்ள வேண்டும். செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கு. நன்றி.


I Sathik Ali
மே 03, 2025 14:39

மக்கள் மரண அடி கொடுபது உருதி


Seekayyes
மே 03, 2025 13:12

பொது குழு கூடி மொத்தமா குழில விழுவதற்கா ?


பாமரன்
மே 03, 2025 12:42

இவனுவ தான் கூலா பொதுக்குழு பப்ளிக் குழு பிரைவேட் குழுன்னு ஜாலியா...‌2014ல் பாஜக ஜல்லியடிச்ச மாதிரி செஞ்சிட்டு இருக்கானுவ... எதிரி கட்சியினர் ஒருத்தரை பார்த்து ஒருத்தர் முறைச்சிக்கிட்டு ராப்பூரா ...சங்கீத ஸ்வரங்கள்....பாட்டு முடிஞ்சு டோடடொடடொயங்குன்னு தொல்லைக்காட்சி மியூசிக் வர்றவரை நின்னுட்டு கலைஞ்சு போற காமெடி பண்றாய்ங்க... நடத்துங்க... நடத்துங்க


vivek
மே 03, 2025 13:14

இவன் ரெண்டும்கெட்டான் பரம்பர்யோ பாமரன்


sridhar
மே 03, 2025 12:31

நாசமா போக .


karupanasamy
மே 03, 2025 11:44

கோபால்சாமி பொதுக்குழுவ கூட்டுன்னு கத்தி கதறி அழுது புரண்டு போராடியபோது கூட்டாத பொதுக்குழுவை இப்ப என்ன கூந்தலுக்கு கூட்டணம்ன்னு வைகோ கேட்டா எண்ண பதில்


sridhar
மே 03, 2025 12:32

கேட்கும் நிலையில் அவர் இல்லை . அறிவாலயத்தில் கூலி வேலை செய்கிறார் .


V Venkatachalam
மே 03, 2025 18:03

வைகோ கேட்க மாட்டார். தாயகத்தை பினாமிகள் அடிமாட்டு விலைக்கு நேரம் பேசுவதாக பேச்சு அடிபடுகிறது. அதனால் வைகோ பேச மாட்டார். அப்புறமா நேஷனல் ஹெரால்டு கேஸ் மாதிரி ஆனாலும் ஆயிடும். பார்லிமென்ட்டில் கர்ஜிக்காலாம்.


ஆரூர் ரங்
மே 03, 2025 11:26

1972 பொதுக்குழு கூட்டத்தில் தனிநபர் சொத்துக்கு உச்சவரம்பு 5 லட்சம். அதற்கு மேல் வைத்திருப்பதை lப் பிடுங்கி அரசுடைமையாக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டீங்க . இப்படி 5 கோடி ன்னு ஆக்கி நிறைவேற்றுங்கள். முக்கியமாக பாதிப்பு உங்க கட்சி ஆளுங்களுக்குதானே?