உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொது இடங்களில் தி.மு.க, கொடிகள்: அகற்ற பொதுச்செயலர் உத்தரவு

பொது இடங்களில் தி.மு.க, கொடிகள்: அகற்ற பொதுச்செயலர் உத்தரவு

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ஏற்று, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும்' என, அக்கட்சியினருக்கு பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0q05vl6n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த ஜன., மாதம், 27ம் தேதி உத்தரவிட்டது.அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டு, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விலும், அந்தத் தீர்ப்பு, கடந்த 6ம் தேதி உறுதி செய்யப்பட்டது.எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும்,- பொது இடங்களிலும் வைத்துள்ள தி.மு.க., கொடிக் கம்பங்களை, தாங்களே முன்வந்து, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களின் விபரங்களை, கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், தங்களுக்கு கிடைக்கும் இடங்களில்எல்லாம் கொடி, பேனர் என அமைத்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வந்தன. இது குறித்து பலமுறை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியும் அதை எந்த கட்சியினரும் கண்டுகொண்டதில்லை. கடந்த வாரம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அளித்த தீர்ப்பை அடுத்து, முதன் முறையாக, தி.மு.க., மேலிடம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

தாமரை மலர்கிறது
மார் 20, 2025 21:38

இது வெறும் அறிவிப்பு மட்டும் தான்.


T.SIVAKUMAR
மார் 20, 2025 20:35

அப்படியே திமுககாரனுகளையும் தமிழகத்தை விட்டு அகற்றினால் நன்றாக இருக்கும்


Ram
மார் 20, 2025 19:01

அப்படியே போஸ்டர் ,உங்கள் உடன்பிறப்புகளின் கட்அவுட்டு–களை எடுத்து எறியுங்கள்.


தேவதாஸ் புனே
மார் 20, 2025 17:41

தனக்குன்னா இரத்தம்..... அடுத்தவனுக்குன்னா ... தக்காளி சட்னியா.....????


ஆரூர் ரங்
மார் 20, 2025 14:48

கோர்ட் உ‌த்தரவு எனக்கூறி அதிகாரிகள் எதிரிக் கட்சிகளின் கொடிகளை அகற்றுவர். ஆனால் திமுக கொடிகளில் கைவைக்க மாட்டார்கள்.


ஆரூர் ரங்
மார் 20, 2025 12:01

மூல பத்திரம் எங்கே? அந்தக் கட்டிடத்தை அகற்ற வேண்டும்


R.PERUMALRAJA
மார் 20, 2025 11:45

தேர்தல் வருவதால் ,நீதிமன்றத்திற்கு ,தி மு க வின் ஆட்களே சென்று பொது நல வழக்கு போல கேஸ் போட்டிருப்பார்கள் . நீதிமன்றமும் இது தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று தெரியாமல் தீர்ப்பளிப்பதும் அதை ஏற்று இவர்கள் ஏதோ உடனே நடவடிக்கை எடுப்பது போல தேர்தலுக்காக நடிக்கிறது தி மு க .


pandit
மார் 20, 2025 11:44

அண்ணன் சொல்லிட்டான் திண்ணைய காலிபண்ணு


R.PERUMALRAJA
மார் 20, 2025 11:38

திரும்பும் இடமெல்லாம் கட் -அவுட் மற்றும் பேனர், மக்கள் பல இடங்களில் முகம் சுளித்து செல்ல துவங்கியதாலும், தேர்தலில் இது எதிரொலிக்கும் என்னும் காரணத்தினாலும், 4 வருடம் விட்டுவிட்டு இப்பொழுது தேர்தலுக்காக மட்டுமே கண்துடைப்பு நாடகம் நடத்தும் தி மு க என்னும் நாடக குழு .


R.PERUMALRAJA
மார் 20, 2025 11:31

தேர்தல் நேரத்தில் எதை வேடுமானாலும் செய்வார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை