உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நவோதயா பள்ளிகள் துவங்கும் சூழலை தி.மு.க., அரசு ஏற்படுத்தியுள்ளது: பழனிசாமி

 நவோதயா பள்ளிகள் துவங்கும் சூழலை தி.மு.க., அரசு ஏற்படுத்தியுள்ளது: பழனிசாமி

சென்னை: 'உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்கும் சூழலை தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: கல்வி கொள்கையில் இரட்டை நிலைப்பாடு எடுத்து, தமிழக மாணவர்களின் வாழ்வில் முதல்வர் ஸ்டாலின் விளையாடி வருகிறார். வெளியே இருமொழி கொள்கை என பேசிவிட்டு, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் நவோதயா பள்ளிகள் அமைய, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலையை ஏற்படுத்துவது வெட்கக்கேடானது. மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் தி.மு.க., அரசும் இருந்தபோது தான், மாநில பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு சென்றது. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன், மத்திய காங்கிரஸ் அரசு, நவோதயா பள்ளிகளை துவங்க உத்தரவிட்டது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 'தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மாட்டேன்' என தெள்ளத் தெளிவாக அறிவித்து செயல்படுத்தினார். இதைத்தான், 30 ஆண்டு கால அ.தி.மு.க., அரசும் கடைப்பிடித்தது. கடந்த 2017ல் ஒரு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நம் உயிர் மூச்சாம் இருமொழி கொள்கையை பாதிக்கும் என்பதால், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி, தடையாணை பெற்றோம். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை, 2021 வரை அ.தி.மு.க., அரசு கண்காணித்தது. கடந்த 1ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிடாமல், ஜூனியர் வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார். இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாமல், தி.மு.க., வழக்கறிஞர் வில்சன் வாதாடி உள்ளார். சரியான வாதங்கள் வைக்கப்படாததால், கடந்த 15ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற, பல கோடி ரூபாய் அரசு பணத்தை செலவிட்டு, மூத்த வழக்கறிஞர்களை வைத்து தி.மு.க., அரசு வாதிடுகிறது. ஆனால், மொழிப் பிரச்னை தொடர்பான முக்கிய வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடவில்லை. இதனால், இருமொழி கொள்கையில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mennon Kasirajam
டிச 19, 2025 13:33

மூன்று மொழி கல்வித் திட்டமாக தமிழ் ஆங்கிலம் இந்திதிமுக & அதிமுக இரண்டும் பல லட்சம் பள்ளிகளுக்கு தமிழ்நாட்டிவ் அனுமதி . அளித்துள்ளது. அப்புறம் எதற்கு மத்திய‌அரசின் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி மறுப்பு?


subramanian
டிச 18, 2025 20:26

நவோதயா விஷயத்தில் இரு பெரிய கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றே இது வந்தால் சிப்ஸ் சிபி எஸ் இ இலவசமாக கிடைக்கும்


Kannan Venkatraman
டிச 18, 2025 17:46

40 years after AIMIS maruthuvamanai at Madurai.Tamilnad has lost medical hands &puplic has sufferd in geting treatment Central fund not utilzised stating full pledged Like vice educational policies two langauge forgoing central funds , employment and Give 0 result inTwo ministry


GoK
டிச 18, 2025 15:58

படிப்புக்கும் இந்த இரண்டு ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளுக்கும் என்ன சம்பந்தம்


ram
டிச 18, 2025 14:16

இந்த இடப்ஸ் திருட்டு திமுகவுக்கு ஜால்ரா அடிப்பதை பார்த்தால் விஜய் ஆட்சிக்கு வருவார். பிஜேபி, நைனார் நம்பி படுகுழியில் விழ போகுது. நவதோய பள்ளிகள் வந்தால் இந்த இரண்டு திருட்டு திராவிட கட்சியின் ஆட்கள் நடந்து பள்ளிகள் படுத்துவிடும் அதனால்தான்.


Suppan
டிச 18, 2025 16:33

தமிழகத்தில் சுமார் 1500 சி பி எஸ் சி பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு நவோதய பள்ளி அமைக்கப்படும். அதுவும் பின்தங்கிய கிராமங்களில். ஆக இந்த 38 பள்ளிகள் 1500 பள்ளிகளின் மேல் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆகவே திராவிடப் பள்ளிகளுக்கு ஒரு சேதாரமும் ஏற்படாது. அவைகள் வழக்கம்போல கொள்ளை அடிக்கலாம். நவோதய பள்ளிகளுக்கு எதிர்ப்பு என்பது வெறும் அரசியலே. அந்தக்காலத்தில் எம் ஜி ராமச்சந்திரனுக்கு சரியான அறிவுரை கொடுக்கப்படவில்லை என்பதே சரி. இப்பொழுது நவோதய பள்ளிகளை ஆரம்பித்ததாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.


sengalipuram
டிச 18, 2025 10:51

இப்போ புரிகிறதா .. அண்ணாமலை இந்த இரண்டு திராவிட கட்சிகளிலும் வேண்டாம் கூறியது . ஒரே குட்டையில் உரிய மட்டைகள் . இவர்கள் தமிழ் நாடு இந்தியாவில் இருப்பதையே மறந்துவிட்டார்கள் ..


MUTHU
டிச 18, 2025 13:43

மக்களுக்கு கல்வியில் தரம் என்றால் என்னவென்று தெரியாமல் வைத்திருப்பதே இவர்களின் நோக்கம். அதைப்போன்று தான் மருத்துவ துறையில் AIIMS வர விடாமல் முட்டுக்கட்டை போடுவதும். சரியான விலையில் தரமான மருத்துவம் என்றால் என்னவென்று மக்கள் தெரிந்து விடக்கூடாது அல்லவா ?.


Sundar Pas
டிச 18, 2025 09:24

தமிழ்நாட்டு அரசியலை கையாளும் திறமையோ அறிவோ வட இந்த அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதே உண்மை. அதுவும் இந்த பிஜேபி தலைமைக்கு சுத்தமா இல்லை.


Mano
டிச 18, 2025 08:15

வழக்கின் முடிவை தீர்மானிப்பது வழக்கறிஞர்களின் “கலிபர்caliber” அல்ல வழக்கின் உண்மை மற்றும் சட்ட சார்ந்த வலுவே. ஹிந்தியை ஒரு மொழியாகக் கொண்டு CBSE பள்ளிகள் இயங்க அனுமதிக்கப்பட்டபோது, உயர் தரத்துடன், முழுமையாக இலவசமாக ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பயன் தரும் நவோதயா பள்ளிகள் ஏன் வேண்டாம்? இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதற்குப் பதிலாக, கல்வி மற்றும் மாணவர் நலனையே முன்னிலைப்படுத்த வேண்டும். இந்த துறையில் புரிதல் இல்லாத இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளும் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நல்லது.


சாமானியன்
டிச 18, 2025 07:18

கடந்த கால தவறுகளை சரிசெய்தாக வேண்டும். நீதிமன்றத்தின் நிர்பந்தமாக இருந்தாலும் அதுவும் சரியே. தமிழர்கள் கல்வி விஷயத்தில் அரசியல்வாதிகளை நம்பக்கூடாது. மொழி அரசியல் கூடாது என உச்சநீதிமன்றமும் கூறுகிறது. லஞ்ச லாவன்யத்தால் வேலைவாய்ப்பு குறைகிறது. எல்லா ஏழைகளும் அயல்நாடு செல்ல மூடியாது. குறைந்த பட்சம் அண்டை மாநிலங்களிடம் வேலை கிடைத்தால் இந்தி உதவும். சாதி,மதம், மொழி, இனத்தை இயன்ற அளவு சுயநலத்திற்காவது பார்க்க வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை