உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முஸ்லிம்களை அரணாக நின்று தி.மு.க., அரசு காக்கும்: முதல்வர்

முஸ்லிம்களை அரணாக நின்று தி.மு.க., அரசு காக்கும்: முதல்வர்

சென்னை; ''இஸ்லாமியர்களுக்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போது, அரண் போல் நின்று தி.மு.க., அரசு காக்கிறது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். தி.மு.க., சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில், ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அண்ணாதுரையையும், கருணாநிதியையும் இணைக்கும் பாலமாக இருந்தது, இஸ்லாமியர் சமுதாயம் தான். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தார். அதை, அ.தி.மு.க., அரசு ரத்து செய்தது.

உள் இடஒதுக்கீடு

மீண்டும் முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற பின், மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்தார். முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி. வக்பு வாரிய சொத்துக்களை பராமரிக்க மானியம் வழங்கியவர் கருணாநிதி. வக்பு வாரியத்திற்கு ஆண்டுதோறும் 2.5 கோடி ரூபாய் நிர்வாக மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக, 11,364 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் விதமாக, வக்பு வாரிய திருத்த மசோதாவை பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து, அ.தி.மு.க., ஓட்டு போட்டது. அ.தி.மு.க., ஆதரிக்காமல் இருந்திருந்தால், குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறி இருக்காது.

உறுதுணை

மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதை, காலங்காலமாக தி.மு.க., எதிர்க்கிறது.இஸ்லாமியர்களுக்கு அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போது, அரண் போல் நின்று தி.மு.க., அரசு காக்கிறது. சிறுபான்மையின மக்களின் அரசியல் உரிமையை நிலைநிறுத்த, தி.மு.க., அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Veluvenkatesh
மார் 25, 2025 18:02

வக்பு வாரியத்திற்கு எதற்கு மானியம்? அவர்கள் உண்டியல் காசு, சொத்து வாடகை, இதர வருமானம் அரசுக்கு வருகிறதா? ஏமாளி ஹிந்துக்களின் உண்டியல் பணத்தில் மாற்று மதத்திற்கு சலுகையா? திராவிடம் ஒழிந்தால் தமிழகம் வாழும்.


M Ramachandran
மார் 25, 2025 17:26

ஒரு துரும்பும் கிள்ளி போட்டதில்லை. அதன் காரணாமாக கேரளாவிலிருந்து தீவீரா வாதிகள் கோவைக்குள் ஊடுருவல். போது மக்களுக்கு டேஞ்சர்.


என்றும் இந்தியன்
மார் 25, 2025 17:07

முஸ்லிம்களை அரணாக நின்று தி.மு.க., அரசு காக்கும்: முதல்வர் உண்மை "முஸ்லிம்களை அரணாக வைத்து தி.மு.க., அரசு தன்னை காத்துக்கொள்கின்றது"


Jay
மார் 25, 2025 21:03

Well said


பெரிய ராசு
மார் 26, 2025 10:15

இந்துக்கள் அனைவரும் சோத்துல உப்பு போட்டு சாப்பிடக்க இவனுக்கு எதிரே வாக்களியுங்க ...


Sundaran
மார் 25, 2025 17:06

இதற்க்கு பிறக்காவது மானம் ரோஷம் உள்ள ஹிந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அகதிகளாக ஆகி விடுவீர்கள் ஸ்ரீலங்கன் தமிழர்களை போலவே.


Sridhar
மார் 25, 2025 14:36

உலகமே அவுங்கள பாத்து பயந்து நடுங்கிகிட்டு இருக்கு. அவுங்க வேணா உங்களுக்கு அரணா இருக்கலாம், அவுங்களுக்கு நீங்க அரணா இருக்கமுடியாது.


M.Mdxb
மார் 25, 2025 13:30

ரொம்ப கேவலமான அரசியல் செய்யும் மாடல் அரசு


TRE
மார் 25, 2025 13:23

இந்துக்களுக்கு முரணாக நிட்கும் அரசு அப்பா டாஸ்மாக் அரசு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் அரசு


Iyer
மார் 25, 2025 11:47

60% Polling happens normally in General Elections in India. Who are these 40% who fail to Vote??? Middle Class & Upper Middle Class Hindus do not normally Vote. If these 40% middle class care to vote, BJP will get a comfor majority of 450 in Loksabha.


Madras Madra
மார் 25, 2025 11:41

மூர்கர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றுவது யாரு ?


vbs manian
மார் 25, 2025 11:08

மெஜரிட்டிக்கு யமன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை