உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தி.மு.க., இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்துக் கடக்கும் வலிமை கொண்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அவரது கடிதம்: எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஆய்வுக் கூட்டங்களை நான் மேற்கொண்டு வருகிறேன். சாலையில் இறங்கி நடந்து, அவர்களுடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் இருதரப்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடனான சந்திப்புகள் நடைபெறுகின்றன.

காழ்ப்புணர்ச்சி

இது வெறும் ரோடு 'ஷோ' அல்ல. திராவிட மாடல் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகின்ற அன்புக் கூடல். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம்.ஆறாவது முறையாக தி.மு.க., தமிழகத்தை ஆள்கிறது. 7வது முறையும் ஆட்சி அமையும்.மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.

துரோகிகள்

தமிழகத்துக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழக மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுக்கப்படுகிறது. தி.மு.க.,வின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறிடியத்து கடக்கும் வலிமை கொண்டது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

திகழ்ஓவியன்
ஜூன் 28, 2025 22:05

மகளிருக்கு உரிமைத் தொகை திட்டம் – மாதம் ₹1000 Women’s Basic Income. பொதுத்துறை பள்ளிகளில் காலை சிற்றுண்டி Breakfast Scheme – அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை உணவு. இலவச பயண வசதி – பெண்கள், மாணவிகள், மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம். உழைப்பாளர் நலக் காப்பீட்டுத் திட்டம் – கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு. முகாம் மூலமாக சேவைகள் – மக்கள் நேரில் வராமல் நிவாரண முகாம்களில் சேவைகள் வழங்கல். புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் – 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாணவர் ஆனையங்கள் – பள்ளி மாணவர்களுக்கு "இளமையின் கனவுகள்" திட்டத்தின் கீழ் கல்வி வழிகாட்டல். முகாமில் உளவியல் ஆலோசனை சேவை – மனநல சேவைகள் கற்றல் முகாம்கள். இலவச டேப்லெட் வழங்கல் – அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக்காக டேப்லெட் வழங்கல். நலவாழ்வு மாநாடுகள் – மக்கள் நலத்திற்காக மருத்துவ முகாம்கள், ஆலோசனைகள். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டங்கள் – ஊக்கத் தொகைகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள். மீனவர் நலத்திட்டங்கள் – உபதிறைநிலை, கப்பல்கள், நல வாரிய உதவிகள். கைதிகளுக்கான மறுசீரமைப்பு திட்டங்கள் – தொழில்முனைவர் பயிற்சி, கல்வி வாய்ப்பு. பசுமைத் தமிழகம் திட்டம் – மரம் நடல், சூழலியல் பாதுகாப்பு. நீராவி திட்டம் – நகர்ப்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மேம்பாடு. மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி – TNPSC, NEET, UPSC போன்ற தேர்வுகளுக்கான இலவச பயிற்சி. பெண்கள் பாதுகாப்பு உதவி மையங்கள் – "ஒன்லைன் குற்றங்கள்" எதிராக பாதுகாப்பு உதவிகள். புதிய வேலைவாய்ப்புத் திட்டங்கள் – உள்நாட்டு முதலீடு மற்றும் MOU மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம். அரசு மருத்துவம் மேம்பாடு – உடனடி சிகிச்சை மையங்கள், சிறப்பு மருத்துவமனைகள். அனைத்து மாவட்டங்களிலும் அரசு கிராம மருத்துவ மையங்கள் – சுகாதாரம் நெருங்கும் அளவில் மேம்பாடு. இவைத் தவிர பல சமூக நலப் பரிமாணங்களையும் திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்தச் பட்டியல் 2021-2025 காலகட்டத்தில் நடைபெற்ற முக்கியமான நலத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் விரிவாக வேண்டுமா அல்லது போஸ்டர் வடிவில் வேண்டுமா?


V RAMASWAMY
ஜூன் 28, 2025 19:38

எல்லோருக்கும் எல்லாம் என்று அவர் கூறியது தங்களுக்கு என்று மக்கள் நினைத்தால் அவர் என்ன செய்வார்? அவர் சொன்னது யாருக்கென்று அவர் குடும்பத்தினருக்கு தெரியும்.


theruvasagan
ஜூன் 28, 2025 17:31

எல்லார்க்கும் எல்லாம் என்பது காக்கிநாடா எங்களுக்கு. பட்டாபட்டிநாடா மக்களுக்கு என்பதைப் போன்றது.


krishna
ஜூன் 28, 2025 17:05

ENNA KODUMA EERA VENGAAYAM MADHESH IDHU THURU PIDITHU IRUMBU KARAM DAILY ULARAL URUTTU THARPERUMAI PHOTO SHOOT.IDHUDHAAN SAADHANAI.AATCHI USELESS .AALUMAI MAHA KEVALAM.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 28, 2025 16:53

சர்க்காரியாவால் இடையூறு வந்தபோது இந்தியாவிடம் சரண் , ஜெயின் கமிஷன் மூலம் இடையூறு வந்தபோது பாஜகவிடம் சரண் .இடையூறுகளை முறியடிக்கும் திறன் கொண்டது திமுக


பாரத புதல்வன்
ஜூன் 28, 2025 16:23

குடியல் மன்னருக்கே இடையூறாக இருப்பது.... 1அனில்,2 சின்ன தத்தி,3.டையனோசர்4.தங்க முடி,5 மன்மத ராசா 6.மேடை பேச்சாளர்கள்.....இன்னும் நிறையவே இருக்கு விடியல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து 24 மணி நேரமும் குடியை மட்டுமே கொடுக்கும் குடியல் மான்னா... இது தான் இடையூறு.... மக்கள்2026 ல் தகர்த்து விக்கை எறிவார்கள்


பாரத புதல்வன்
ஜூன் 28, 2025 16:07

உன்னோட ஆட்சியே மிகப்பெரிய இடையூறு தான்.... இதுல பெருமை பீற்றிக்கொள்வதால் ஆக ....மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்..... விக் அவர்களே.


Ramalingam Shanmugam
ஜூன் 28, 2025 15:26

மிசா வலியை சொல்றிங்களா


Kjp
ஜூன் 28, 2025 14:52

எல்லோருக்கும் எல்லாம் என்று நீங்கள் சொல்வது நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் உங்கள் கட்சியில் மற்றவர்களுக்கு முதல்வர் துணை முதல்வர் பதவி கிடைக்குமா.அனுபவம் மிக்க துரை முருகனுக்கு கூட துணை முதல்வர் பதவி கொடுக்க உங்களுக்கு மனமில்லையே.நீங்கள் ஜனநாயகம் பற்றி பேசுகிறீர்கள்.நீங்கள் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை எல்லோரையும் கொத்தடிமைகளாகத்தான் வைத்து இருக்கிறீர்கள்.பிறகென்ன திமுக வுக்கு இடையூறு.


Thravisham
ஜூன் 28, 2025 14:47

ஒரேயோர் குடும்பத்துக்கு ஓடா தேஞ்சி ஒழைக்கிறகுத்தான் 100 200 கிராக்கிகளை உருவாக்கி வச்சிருக்கீங்களே எலும்பு துண்ட போட்டா ஓடி வருதுங்க உனக்கும் உழைக்கும் இன்பநிதி பேரனுக்கும் உழைக்கணும்