உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: சேதமடைந்த பள்ளி கட்டடத்தில், நமது குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.நாமக்கல் மாவட்டத்தில், சேதமடைந்த பள்ளி கட்டடத்தின் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அண்ணாமலை கூறி இருப்பதாவது நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகிலுள்ள விளாங்காட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள், செயல்பாட்டுக்குத் தகுதியே இல்லாத, மிக மிக ஆபத்தான நிலையில், மேற்கூரைகள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மழை பெய்யும்போதெல்லாம், மேற்கூரை ஒழுகும் நிலையில் இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வரும் இந்தப் பள்ளிக்கு, புதிய கட்டடங்கள் கட்டவோ, மாற்று இடம் அமைக்கவோ, பள்ளிக் கல்வித்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தவிர, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளியின் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. எத்தனை ஆபத்தான நிலையில் இந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள்.ஆட்சிக்கு வந்தவுடன், பத்தாயிரம் அரசுப் பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள் கட்டித் தருவோம் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினும், இதுவரை எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டியிருக்கிறார்கள் என்று பல முறை கேள்வி எழுப்பியும், இதுவரை எந்தப் பதிலும் அளிக்காமல் இருக்கிறார்கள். வாரம் ஒரு அரசுப் பள்ளியில், மேற்கூரை இடிந்து விழுவதும், சுவர் இடிந்து விழுவதுமாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர் பாதுகாப்பு என்பது, திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகிவிட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், ஒரு கேள்வி. உங்கள் வீட்டுக் குழந்தைகளை, இப்படிப்பட்ட கட்டடத்தில், கல்வி பயில அனுப்புவீர்களா? தெரிந்தே நமது குழந்தைகளை இத்தனை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Balaa
நவ 21, 2025 18:03

அன்னை ஜோதிகா அன்றே கேட்டார்கள். கோவில்களுக்கு செலவு செய்கிறீர்களே, அந்த பணத்தில் பள்ளிகள் கட்டலாமே என்று. ஆனா, இளையராஜாவுக்கு பாராட்டு விழா மக்கள் வரி பணத்தில் தான். பல கோடி சம்பாதிக்கிற சினிமாக்காரன் ஒரு பைசா தரமாட்டான். கும்பிடு போட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று மது அருந்தியதை பற்றி பேசுவான்.


Balaa
நவ 21, 2025 17:56

அரசு உதவி பெறும் மதம் மாற்றும் பள்ளிக்கூடங்களுக்கு நிதி வேண்டாமா. நல்லா கேக்குறாங்கய்யா டீடெயிலு...


மேலும் செய்திகள்









புதிய வீடியோ