உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு: ஊட்டியில் தொடங்கியது கடையடைப்பு போராட்டம்

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு: ஊட்டியில் தொடங்கியது கடையடைப்பு போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வாகனங்களுக்கான இ-பாஸ் நடைமுறை நேற்று முதல் ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது. ஐகோர்ட் ஆணையின்படி, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் இ-பாஸ் வழங்கி முடிக்கப்பட்டுவிட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=16b4v6a2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சுற்றுலா வாகனங்களுக்கான நீதிமன்ற கட்டுப்பாட்டை நீலகிரியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வணிகர்கள் எதிர்த்து வருகின்றனர். இதை எதிர்த்து அவர்கள் இன்று (ஏப்.2) கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தபோராட்டம் தொடங்கி உள்ளது. ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய தாலுகாக்களிலும் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கி நாளை காலை 6 மணி வரை போராட்டம் நீடிக்க உள்ளது. போராட்டம் காரணமாக நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பால் மற்றும் மருந்து கடைகள் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

rama adhavan
ஏப் 02, 2025 17:55

மூடட்டும். அவர்களுக்கு தான் நட்டம்.


Amar Akbar Antony
ஏப் 02, 2025 15:08

இஸ்லாமிய நாடான துபாயில் கூட நடன மது கூடங்களுக்கு இரவு முழுவதும் அனுமதியுண்டு. ஒரே காரணம் சுற்றுலா வாதிகளினால் வருமானம். அப்படியிருக்கையில் நீலகிரிக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? மாற்றுவழி கொடுங்கள்.


rama adhavan
ஏப் 02, 2025 17:53

துபாய் 2000 ச. கிமீ.குட்டி நாடு. இப்போது கடலை தூர்த்து 5000 ச. கிமீ ஆக்க போகிறார்கள். அங்கு வெய்யில்.அது பாலைவனம். இயற்கை வளம் இல்லை. எனவே அதையும் நீலகிரியையும் ஒப்பிடவேண்டாம்.


சோழநாடன்
ஏப் 02, 2025 11:47

நீதிமன்ற உத்தரவின்படியே இ-பாஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளுக்கு வணிகம் இல்லை என்ற வருத்தம். சுற்றுச்சூழலைவிட வணிகம்தான் முக்கியம் என்றால் இதை யாரும் ஏற்கமுடியாது. வணிகர்கள் சீசனில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்றால் அதற்கு சுற்றுச்சூழல்தான் கிடைத்ததா?


Nagarajan D
ஏப் 02, 2025 14:45

நண்பரே நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் அங்கே இருக்கும் வாழ்வாதாரமே சுற்றுலாவை நம்பி தான். அவர்கள் சாப்பிட கூட சுற்றுலாவை நம்பித்தான் ஆக வேண்டும்.. தேயிலை தவிர வேறு தொழில் வாய்ப்பில்லாததே இந்த நிலைமைக்கு காரணம். சுற்று சூழல் காக்கப்படவேண்டும் மாற்று கருத்தில்லை அதற்க்கு வேறு உபாயமிருக்கிறதா என்று ஆராய்ந்து செயல்படுத்த படவேண்டும்... இதனால் அடுத்து என்ன நடக்கும் TN 43 பதிவு கொண்ட வாகனங்களுக்கு டிமாண்ட் கூடும் tn 43 வண்டிகளுக்கு கட்டுப்பாடு இல்லை..


Ananthram
ஏப் 02, 2025 10:20

1. அதிகமான வாகனங்கள் வருவதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கக்கூடும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. 2. அதிகமாக சுற்றுலா பயணிகள் வரவில்லையென்றால் இந்த கோடை பருவத்தில் எதிர்பார்த்த வியாபாரம் நடக்காதே என்பது வணிகர்களின் நிலைப்பாடு. உங்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும். E பாஸ் மூலம் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருவார்கள்.. உங்கள் வியாபாரம் சிறக்கும்.


Nagarajan D
ஏப் 02, 2025 10:20

தேவையான விஷயத்தில் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்குவதில்லை... இப்படி ஒரு மாற்று வழியோ விதியோ விதிக்காமல் அவசரகதியில் ஒரு உத்தரவை போட்டுள்ளது..


பெரிய ராசு
ஏப் 02, 2025 12:05

சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கும் போது பூகம்பம் வந்து புதைந்து சாவாய் பரவலய


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை