உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரள பா.ஜ., தொண்டர் கொலை வழக்கு: மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள்

கேரள பா.ஜ., தொண்டர் கொலை வழக்கு: மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் பா.ஜ., தொண்டர் சூரஜ் கொலை வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கேரளாவின் கண்ணூர் மாவட்டம் முழப்பிலங்காட்டில் கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி பா.ஜ., தொண்டர் எளம்பிலாய் சூரஜ் (32), மார்க்சிஸ்ட் கட்சியினரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இவர் கடந்த 2003ல் மார்க்சிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி, பா.ஜ.,வில் சேர்ந்த பிறகு இரு தரப்பிலும் விரோதம் வளர்ந்ததால் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் 12 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நடத்திய கண்ணூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஊடக செயலாளரின் சகோதரர் உட்பட 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இன்று தலச்சேரி முதன்மை அமர்வு நீதிபதி கே.டி., நிசார் அகமது அளித்த தண்டனை விபரம் அறிவித்தது.எட்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்ட னையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
மார் 24, 2025 20:45

வெறும் ஆயுள்தண்டனை ? ஹ்ம்ம் நெஞ்சு வலி அணில் அங்கே தோழமையுடன் கரம் நீட்டினால் என்னாகும் ?


என்றும் இந்தியன்
மார் 24, 2025 16:56

சிறை வாசம் எதற்கு???தவறு கண்டேன் சுட்டேன் இது ஒன்று தான் சரியான தீர்வு இந்த மாதிரி கொலை குற்றம் செய்தவர்களுக்கு. தவறுகள் உடனே நின்று விடும்.


ஆரூர் ரங்
மார் 24, 2025 15:20

கண்ணூர் மாவட்டம் முற்காலத்தில் போர் வீரர்கள் நிறைந்திருந்த பகுதி. நமது தென் மாவட்டங்கள் போலவே பழிவாங்கும் கொலைகள் சர்வ சாதாரணம். ஆனால் இப்போது கம்யூனிஸ்டு ஆட்சியில்தான் தினமும் வன்முறை என்றாகிவிட்டது. பினராயி ஆட்சி நாட்டுக்கே கேடு.


புதிய வீடியோ