உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு இடைத்தேர்தல் வேண்டாத வேலை: சொல்கிறார் அண்ணாமலை

ஈரோடு இடைத்தேர்தல் வேண்டாத வேலை: சொல்கிறார் அண்ணாமலை

மதுரை: 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம். 9 மாதத்திற்கு எம்.எல்.ஏ., தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை தமிழக அமைச்சர்கள் சொல்ல வேண்டும். தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கி உள்ளோம் என்பது குறித்து லோக்சபா தேர்தலின் போது 36 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தோம். 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.43 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கி உள்ளது.தி.மு.க.,வின் அமைச்சர்கள் காதையும், கண்ணையும் திறந்து, இந்திய அரசியலில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும். பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் இருக்கிறது. அதிலும் தமிழகத்திற்கு பெரிய அளவில் திட்டங்கள், நிதி வரும். இவர்கள் ஆட்சியின் லட்சணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக, தினமும் மத்திய அரசு மீது குறை சொல்வதை முழு நேர வேலையாக தி.மு.க., அரசு வைத்துள்ளது, என்றார்.

ஆட்சி மாறுமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இந்த ஒரு தேர்தல் காரணமாக ஆட்சி மாறுகிறதா? இந்தியாவில் இது போன்ற தேர்தல் நடக்காது. 5 வருடத்தில் ஒரு தொகுதியில் மக்கள் 4 முறை ஓட்டு போட்டால் ஜனநாயகத்திற்கு மீது அவர்களுக்கு மரியாதை வருமா? ஒரே குடும்பத்தில் இரண்டு பேரை நிற்க வைத்து ஓட்டு கேட்பீர்கள். மக்கள் எத்தனை முறை ஓட்டு போடுவார்கள். இப்போது வரும் எம்.எல்.ஏ., 9 மாதம் தான் இருப்பார். இந்த முறை எத்தனை சதவீத மக்கள் ஓட்டு போடுகிறார்கள் என்று பாருங்கள்.

வேண்டாத வேலை

ஜனநாயகத்தின் மீது வெறுப்பு தான் வரும். நியாய படி இது போன்ற தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்த கூடாது. இடைத்தேர்தல் நடத்தலாம். இடைத்தேர்தலுக்கு இடை தேர்தலா? மக்கள் எத்தனை முறை ஓட்டு போடுவார்கள். நாங்கள் போட்டியிட்டால் நேர்மையாக தேர்தல் நடத்துவார்களா? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை வேண்டாத வேலையாக பார்க்கிறோம். 9 மாதத்திற்கு எம்.எல்.ஏ., தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?

முதல்வருக்கு பயம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி., சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கவர்னர் மீதான பயத்தால் ஸ்டாலின் பிதற்றுகிறார். தமிழக அரசின் மீதுள்ள வெறுப்பை மறைக்க கவர்னரை பகடைக்காயாக தி.மு.க., பயன்படுத்துகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

K.n. Dhasarathan
ஜன 19, 2025 22:43

அண்ணாமலைக்கு பயம் வந்துவிட்டது, ஏற்கனவே ஒரு முறை தோற்று, அந்த பயத்தில் பாவம் பிதற்றுகிறார், ஐயா அந்த வேண்டாத வேலையை ஏன் செய்கிறீர்கள் என்று தேர்தல் ஆணையத்தை கேட்க தெம்பு இருக்கா ? அதெல்லாம் வேண்டாம் அண்ணாமலை, உங்களுக்கு தைரியம் இருந்தால் தர்தலில் போட்டி போட முடியுமா ? சும்மா வாய் கிழிய உதார் விட வேண்டாம், அல்லது ஒரு ஆளை தேர்தலில் நிறுத்த முடியுமா ? ?


என்றும் இந்தியன்
ஜன 19, 2025 19:10

எம் எல் ஏ எம்பி ஆனா ஒருவன் இறந்தால் அடுத்தவனை அந்த அத்விக்கு ஒண்டு அந்தவிடலாம் இன்னொரு தேர்தல் இல்லாமல் என்றால் எம் எல் ஏ எம்பி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை 2ஆம் இடத்தில் இருப்பவன் அவர்களைக் கொன்று விடுவான் என்று கூறுவது எம் எல் ஏ எம்பி தேர்தலுக்கு நிற்பவர்கள் அனைவரும் ரவுடிகள் என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர்கள் போல இருக்கின்றது???அப்போ2 வது ஆளை மூன்றாவது ஆள் கொன்று விடுவான் 3ஆவது ஆளாய் 4ஆவது அழ கொன்று விடுவான் இப்படியும் சொல்லிக்கொண்டே போங்களேன். படித்தது பத்தாவது அதுவும் fail ஏதோ பெரிசாஆஆ படிச்சு பட்டம் அங்கி IAS/M.Tech/Ph.D மாதிரி உலரும் திருட்டு திராவிட அறிவிலி அரசு அடிமைகளே நீங்கள் முதலில் மனிதராக மாறுங்கள் பிறகு இந்தியனாக மாறுங்கள் பிறகு நீங்கள் என்னவாக மாறினாலும் அறிவோடு பண்போடு மனிதத்தன்மையோடு நல்லவனாக மட்டுமே இருப்பீர்கள் இல்லையென்றால் இப்படித்தான் ரூ 200 உபிஸ் ஆகா மட்டுமே இருப்பீர்கள்


V RAMASWAMY
ஜன 19, 2025 17:44

ஒட்டு வங்கிக்காக தேவையில்லாத இலவசங்களை கோடிக்கணக்கான இழப்புகளை காட்டி மத்திய அரசிடமிருந்து பணம் வரவில்லை என்று பொய்யாக புலம்பும் மாநில அரசுகளுக்கு பணம் அனுப்பும்பொழுது மத்திய அரசு இம்மாதிரி இழப்புகளுக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று சுட்டிக்காட்டி அந்த நஷ்டங்களை கழித்த மீதமிருந்தால் தான் பணம் கொடுக்கவேண்டும்.


vbs manian
ஜன 19, 2025 15:41

தேர்தல் நாடகம் இனிதே நடந்தேறும். தேர்தல் கமிஷன் என்று இருப்பதாக சொல்கிறார்கள்.


GMM
ஜன 19, 2025 13:54

இடை தேர்தல் தவிர்க்க வழி தான் ஒரே நாடு, ஒரே தேர்தல். இடையில் பிரதிநிதி இறந்தால், அடுத்த குறைந்த வாக்கு பெற்றவர் அல்லது அருகில் உள்ள தொகுதியில் அதிக வாக்கில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கலாம். ஒரு அதிகாரி விடுப்பில் சென்றாலும் , இறந்தாலும் நிர்வாகத்தில் பணியில் உள்ள அதிகாரி பொறுப்பு எடுக்கும் நடைமுறை உண்டு.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 19, 2025 15:44

இப்படி செய்தால், இரண்டாவதாக வந்த வேட்பாளர், அல்லது பக்கத்து தொகுதியில் ஜெயித்தவர், இங்கே வென்றவரைக் கொன்று விட வாய்ப்பிருக்கிறது.


bmk1040
ஜன 19, 2025 13:52

ஒண்ணு பண்ணு நீ போய் படிச்சு பாஸ் பண்ணு அப்ப தெரியும் எப்படி பாஸ் பண்ணாருன்னு. அண்ணாமலை தெளிவாக கருத்தை சொல்லியிருக்கிறார். சொல்லம்போனால் அந்த மோடிஜியும் ஜனாதிபதியும் தானாகவே முன்வந்து இதை 2026 தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும்.எல்லாம் தண்ட செலவு என் மீது தான் சுமை சுமை


Shivam
ஜன 19, 2025 13:44

சைமன் சார் மற்றும் 50சுயேட்சைகளுக்கு உள்ள தில் இந்த ஆளுக்கு இல்லை. ஒரு வேளை புஸ்ஸ் வானமோ? தினம் ஒரு பேச்சு, தினம் ஒரு போராட்டம் எதுவுமே மக்களை டச்/ரீச் பண்ண மாதிரி இல்லையே கேட்க மறந்து விட்டேன் அப்புறம் 20ஆம் தேதி அருப்புக்கோட்டை போராட்டம் என்ன ஆச்சு? நாங்க எல்லாரும் சாட்டையோட ரெடியா கீறோம் .


AMLA ASOKAN
ஜன 19, 2025 13:42

ஈரோடு தேர்தலில் திமுகவும் , நாதாகவும் பிஜேபிக்கு எதிரிகள் . இந்நிலையில் ஈரோட்டில் உள்ள லட்சக்கணக்கான பிஜேபியினர் , அண்ணாமலையின் கூற்றுப்படி வேண்டாத வேலை என்று எண்ணி ஒட்டு போடாமலிருந்தால் தான் திமுக வெற்றிபெறும் என மறை முகமாக தன் ஆதரவை தெரிவிக்கிறார் . அரசியலமைப்புக்கு எதிராக பேசுகிறார் . நேரடியாக தனியாக களமிறங்க முடியாத விரக்தியின் உளறல் .


பாமரன்
ஜன 19, 2025 13:06

இந்த பீஸ்க்கு காண்ட்ராக்ட் எடுத்துட்டு ரொம்ம்ம்ம்ம்ப ஓவரா தலைப்பு மற்றும் நியூஸ் போட்டு மலரை இந்த அளவுக்கு மட்டமாக கொண்டு போகனுமா ஸார் வாள்...?? பெரிய ஜிக்கு கூட கொஞ்சம் டீசண்டா இருந்துச்சு கவரேஜ்...


தியாகு
ஜன 19, 2025 17:53

அண்ணாமலை செய்தியை போட்டாலே உங்களுக்கு ஏன் கோபம் வருது?


அப்பாவி
ஜன 19, 2025 12:59

ஒரு நேசன் ஒரே தேர்தக் அடிப்படையில் டில்லியிலும் பின்வாங்கலாமே. அண்ணாச்சி போய் பேசுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை