ஈரோடு தம்பதி கொலை வழக்கு; சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை: ஈரோடு சிவகிரியில் வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி ராக்கியப்பன் (75), பாக்கியம் (60) வசித்து வந்தனர். தனியாக வசித்து வந்த வயதான தம்பதி, மே 2ம் தேதி மர்மநபர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலை தெடர்பாக, 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான, அறச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 09) வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.