உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறியியல் கல்லுாரிகளில் போலி பேராசிரியர்கள்

பொறியியல் கல்லுாரிகளில் போலி பேராசிரியர்கள்

சென்னை : போலி பேராசிரியர்களுடன் பொறியியல் கல்லுாரிகள் இயங்குவதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழகத்தில், ஓராண்டிற்கு முன், அண்ணா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், 295 பொறியியல் கல்லுாரிகளில், 2,000க்கும் அதிகமான போலி பேராசிரியர்கள் இருப்பதும், ஒரே பேராசிரியர் 33 கல்லுாரிகளில் பணிபுரிவதும், உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, உயர் கல்வித்துறை சார்பில், அமைக்கப்பட்ட குழு, அபராதம் விதிப்பது; பணியில் இருந்து நீக்குவது; கல்லுாரியின் அங்கீகாரம் ரத்து செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளை முன்வைத்தது. ஆனால், அதை செயல்படுத்த, அண்ணா பல்கலை இதுவரை முன்வரவில்லை. இதனால், போலி பேராசிரியர்களுடன், பொறியில் கல்லுாரிகள் இயங்குவது தொடர்கிறது. தி.மு.க., வின் செயலற்ற தன்மை, போலி பேராசிரியர்களை ஊக்குவிப்பது போல் உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, உயர் கல்வித்துறை குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதோடு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் விதிமுறைக்கு ஏற்ப பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கல்யாணராமன்
ஜூலை 14, 2025 00:13

அஜித்குமார் என்ற ஒரு கோவில் காவலாளி போலீசாரால் அடித்து கொல்லப்பட்டாரே அதை பற்றி ஏதாவது வாய் திறந்தாயா? உணர்வு பூர்வமான எந்த விஷயத்திற்கும் எந்த வித கருத்தையும் தெரிவித்து மத்திய மாநில அரசுகளின் கோபத்திற்கு ஆளாக்காமல் இப்படி மேம்போக்காக பிரச்னை இல்லாத விஷயம் குறித்து அறிக்கை விட்டுட்டு முதல்வர் பதவியில் எல்லோரும் சேர்ந்து நம்மை உட்கார வைத்து விட வேண்டும் என்று ஆசை படுகிறீர்.


முக்கிய வீடியோ