உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாம்பழ பிரச்னையை திசை திருப்ப முயற்சி; தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

மாம்பழ பிரச்னையை திசை திருப்ப முயற்சி; தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாம்பழ விலை வீழ்ச்சி பிரச்னையை, மத்திய அரசு மீது திருப்புவதாக, தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தர்மபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்துார், சேலம், வேலுார், மதுரை மாவட்டங்களில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகம். இங்கு, 3.60 லட்சம் ஏக்கரில் மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. ஏக்கருக்கு இரண்டு முதல் 2.50 டன் வரை மாம்பழம் உற்பத்தியாவது வழக்கம்.நடப்பாண்டு ஏக்கருக்கு, 3.50 டன் வரை விளைச்சல் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் அதிகம். இதனால், அறுவடை செய்த மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், நாள்தோறும் பல டன் மாம்பழங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆந்திர மாநிலத்தில், இதேபோன்று பிரச்னை எழுந்த நிலையில், அந்த மாநில அரசு எடுத்த நடவடிக்கையால், விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர். அங்குள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளில், தமிழக மாம்பழங்கள் கொள்முதல் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. தனியார் மாம்பழ கூழ் ஆலைகளை தொடர்ச்சியாக இயங்க செய்து, கொள்முதல் செய்த மாம்பழங்களுக்கு மானியம் வழங்க, ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் மாம்பழ விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில், பிரச்னையை மத்திய அரசு பக்கம் திருப்பும் முயற்சி நடப்பதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:தமிழகத்தில் மாம்பழ விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 'ஒரு டன் மாம்பழத்திற்கு 7766 ரூபாய் என, நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். அதில், மாம்பழ கூழ் ஆலைகள், 5000 ரூபாய் வழங்கியது போக, மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசிடம் இருந்து பதில் வருவதற்குள், மாம்பழ சீசன் முடிந்து விடும். விவசாயிகளும் பெரும் நஷ்டத்தை அடைவர். எனவே, இப்போதே சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்தி, மாநில அரசு தனது பங்களிப்பை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசு மீது பழியை போட்டு காலத்தை கடத்தாமல், விவசாயிகளுக்கு உதவ வேண்டும்இவ்வாறு அவர் கூறினார


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Santhakumar Srinivasalu
ஜூன் 26, 2025 12:50

இந்த அரசு மாம்பழத்தாருக்கும் வஞ்சனை செய்கிறது?


c.k.sundar rao
ஜூன் 26, 2025 09:11

At the time of elections this same group of farmers will form a cartel and vote for thiruthu Dravidian party .


Minimole P C
ஜூன் 26, 2025 07:50

I dont know how TN people elect this type of CM who all the time think of misleading people and do politics in every opportunity. For the loot that DMK makes, the entire mangoes can be purchased by DMK and given to children and seniors who have no means to buy. Sounds strange. What to do our CM doesnt have vision to build cold storage, pulp making etc.


Venkat.M
ஜூன் 26, 2025 07:05

மாம்பழம் விலை குறைந்ததற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய ஒரே முதல்வர் நம் முதல்வர்தான்.எல்லாத்துக்கும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி நம் ஊடகத்திற்கு தகவல் கொடுத்தால் போதும்.


srinivasan
ஜூன் 26, 2025 05:59

நாட்டில் எத்துணையோ குழந்தைகள் காப்பகம் முதியோர் காப்பகம் இருக்கின்றது. இந்த மாம்பழங்களை அங்கு கூட கொடுக்காமல் இப்படி வீதியில் கொட்டுவது ஆற்றில் கொட்டுவது சரியா? விவசாயிகள் விற்பனை செய்ய எவ்வளவோ வழிகள் இன்று இருக்கின்றன அதை விட்டு இப்படி வீணடிப்பது கண்டிக்கதக்கது


kannan sundaresan
ஜூன் 26, 2025 05:07

திமுக அரசின் திறமையற்ற நிர்வாகத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு


சிட்டுக்குருவி
ஜூன் 26, 2025 04:37

காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் விவசாயமந்திரி போனில் பேசி உடனே காரியத்தை முடிகின்றார் .இவருக்கு ஈகோ பிரிச்சினையா ? கடிதம் எழுதி காத்திருக்கின்றார் .மக்களை பற்றியோ விவசாயிகளை பற்றியோ சிந்திக்கநேரமில்லை .மாநிலத்தில் விவசாயம் எப்படி நடக்கின்றது ,என்னென்ன விளைகின்றது ,எப்படி விற்பனையாகின்றது என்பது ஆட்சியாளர்களின் தினசரி மேற்பார்வையாக இருக்கவேண்டும் .பழியகாலத்து மன்னர்கள் எல்லாம் தினசரி மாதம் மும்மாரி பொழிகின்றதா ,விவசாயம் நன்றாக நடக்கின்றதா என்று விசாரிப்பதாக அறிகிறோம் . விவசாயிகள் செழிப்பாக இருந்தால்தான் நாடு செழித்திருக்கும் .


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 10:33

முதலில் திக்கி திணறாமல் பேசத்தெரிய வேண்டும் ...அப்புறம் லெட்டர் தப்பில்லாமல் எழுதவேண்டும் .. இதெல்லாம் தமிழ் நாட்டில் நடக்கிற காரியமா ..எங்களுக்கு டாஸ்மாக் விற்பனை முக்கியம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை