உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஷமாகும் கல்லணை கால்வாய் தண்ணீர்; பயிர் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை

விஷமாகும் கல்லணை கால்வாய் தண்ணீர்; பயிர் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் : மேட்டூர் அணை கட்டப்பட்ட போது, தஞ்சாவூர் மாவட்டத்தில், வானம் பார்த்த பூமிகளான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி உள்ளிட்ட ஊர்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தன. இதற்கு பாசன வசதிக்காக கல்லணை தலைப்பில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டம், மும்பாலை வரை, 149 கி.மீ., துாரத்திற்கு கல்லணை கால்வாய் வெட்டப்பட்டது. கடந்த, 1934ம் ஆண்டு ஆக., 28ம் தேதி, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கால்வாய் கொண்டு வரப்பட்டது.

இந்த கால்வாயில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே, 'சைபன்' எனப்படும் கீழ்குமிழிகள், மேல்நிலை கால்வாய்கள், பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற நீர்வழிப்பாதைகள், தண்ணீரின் விசையை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் 'டிராப்' எனப்படும் நீரொழுங்கிகள் அமைக்கப்பட்டன.இருப்பினும், தஞ்சாவூர் நகர் பகுதியை கல்லணை கால்வாய் கடக்கும், 15 கி.மீ., துாரத்திற்கு, கால்வாயின் இருபுறமும் உள்ள குடியிருப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலந்து, தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. மேலும், விவசாய நிலத்திற்கு செல்லும் தண்ணீர் ரசாயனம் கலந்தது போல இருப்பதால், சில இடங்களில் பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விவசாயிகள் கூறியதாவது:

கல்லணை கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. கீழ்குமிழி பகுதிகளில் குப்பை அதிகம் தேங்கியுள்ளது. தற்போது தண்ணீர் குறைந்தளவில் திறக்கப்பட்டுள்ள சூழலில், தண்ணீருடன் குப்பையும், இறைச்சிக் கழிவுகளும் வருகிறது. கல்லணை கால்வாய் விஷமாகும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

g.s,rajan
பிப் 18, 2024 22:10

தூய்மை இந்தியான்னு வெறுமனே வாயில சொல்லிட்டா போதுமா...???


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2024 07:20

அதில் மக்களுக்குப் பொறுப்பில்லையா ?


Selvakumar Krishna
பிப் 18, 2024 19:30

நீர்நிலைகளை பயன்படுத்தும் மக்களுக்கு சுற்றுப்புற சூழல் குறித்த புரிதல் வேண்டும்.


Naagarazan Ramaswamy
பிப் 18, 2024 17:28

கால்வாய் செல்லும் இடங்களில் உள்ள நகராட்சிகல் , உயர் நிலை பஞ்சாயத்து இவற்றிலெல்லாம் கழிவு நீர் சுத்தம் செய்யம் கலங்கள் நிறுவ வேண்டும். வரி வசூல் செய்தலும் உரிமைத்தொகை கொடுத்தால் மட்டும் போதாது. நெடுங்கால நடவடிக்கைகளை அரசு திட்டமிட்டு செயல் படுத்த வேண்டும்.


Dharmavaan
பிப் 18, 2024 16:12

இத்தகு விடிவு என்ன


g.s,rajan
பிப் 18, 2024 07:48

இதுதான் வளர்ச்சி அடைந்த பாரதம்.....


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 18, 2024 14:24

மாநில சுற்றுச்சூழல் பொறுப்பு ............


RAMAKRISHNAN NATESAN
பிப் 18, 2024 20:39

கிண்டலு ?? தூய்மை இந்தியா ன்னு அந்த மனுஷன் படிச்சு படிச்சு சொன்னாரே ...... அப்ப நீயி விடியலு கொடுத்ததை சாப்பிட்டுக்கிட்டு இருந்தே .......


அப்புசாமி
பிப் 18, 2024 07:45

விவசாயிகள் எல்லாரும் நல்லவங்க. கால்வாயில் குப்பையே கொட்ட மாட்டாங்க. பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டாங்க.


Ramesh Sargam
பிப் 18, 2024 07:16

முதலில் கழிவுகளை ஆற்றில் போடும் மக்களை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். பிறகு கழிவு நீர் ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எதுவும் எடுக்காத அரசை கண்டிக்கவேண்டும். அரசு எதற்கெல்லாமோ கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கிறது. இதுபோன்ற செயல்களுக்கு செலவழித்தால் ஆற்றின் நீர் சுத்தமாக இருக்கும்.


Dharmavaan
பிப் 18, 2024 07:07

திருட்டு திமுக ஊரை ஏமாற்றி லஞ்சம் கொடுத்து பதவியை பிடித்து கொள்ளை அடிப்பதை தவிர இந்த வகை முன்னேற்ற தெரியாது ஆளுமை தோலை நோக்கு இல்லை மூடர்களின் ஓட்ட காரணம் நல்லவனுக்கு பாதிப்பு


Duruvesan
பிப் 18, 2024 07:00

பாலாறு மொத்தம் நாசமாய் போனது விடியலின் மார்க்க கூட்டத்தின் தோல் தொழிற்சாலை கழிவுகளால். காவேரி வீணா போனால் மணல் அள்ளி காசு பாப்பானுங்க. இவனுக்கு ஓட்டு போடும் அடிமை கூட்டம் வாழ்க


இறைவி
பிப் 18, 2024 06:59

இந்த நிலை கல்லணை கால்வாய்க்கு மட்டும் இல்லை. அன்னை காவிரியே இந்த நிலையில்தான் இருக்கிறாள். 40-50 வருடங்கள் முன்பு காவிரியிலிருந்து நேரடியாக தண்ணீர் எடுத்து குடிக்க முடியும். இன்று மொத்தமாக காவிரி நீர் சீரழிந்து குடிக்க இயலாத நிலையில் உள்ளது. காவிரி நீரில் உயிர் வாழும் பங்களுரு மக்களின் சாக்கடைகள் காவிரியில் சேர்வது முதல் ஈரோடு சாய பட்டறை கழிவுகள், அமராவதி வரும் வழியிலெல்லாம் கொட்டப்படும் குப்பைகளும் இணைக்கப்படும் நகர்புற சாக்கடைகளும், அன்னிய செலாவணியை கூட்டும் திருப்பூர் சாய கழிவுகள் நொய்யல் ஆற்றில் சேர்வதும் (சந்தேகம் இருப்பவர்கள் ஓரத்துபாளையம் அணையை போய் பார்க்கவும்) காவிரி மற்றும் அதன் கிளை நதிகள் வரும் வழியில்லெல்லாம் இணைக்கப் பட்டுள்ள சாக்கடை கழிவுகளும் காவிரி நீரை மொத்தமாக கெடுத்து விட்டன. இவைகளை விட வழியெங்கும் கிராம குப்பைகள் கொட்ட நதிக்கரைகள் தான் இன்று சுலபமான இடம். இவைகள் இல்லாமல் இரண்டு கழக அரசுகளும் கூட்டணி போட்டு மணல் கொள்ளை அடித்ததன் பலனாக வாய்க்கால் தலைப்புகளுக்கு கீழே காவிரி மட்டம் குறைந்து விட்டது. மற்ற இந்திய நதிகளுக்கு இல்லாத சிறப்பு காவிரி நீர் வயல் மட்டத்தில் இருந்தது. வெட்டி விட்டால் தண்ணீர் சுலபமாக வயல்களுக்கு பாயும். இன்று வாய்க்கால்களில் ஏறி பாய்வதே கஷ்டம். அது மட்டுமின்றி, கிராம மக்கள் ஒன்று கூடி வருடா வருடம் கிராம வாய்க்கால்களை மேட்டூர் அணை திறக்கும் முன் அவர்களே குடிமராமத்து என்ற பெயரில் வெட்டி சுத்தம் செய்து கொள்வார்கள். கழக அரசுகள் கொள்ளை அடிக்க வசதியாக நாங்கள் வாய்க்கால்களை சுத்தம் செய்து கொடுக்கிறோம் என்ற பெயரில் கொள்ளை அடிக்க ஆரம்பித்ததும் கிராம மக்களின் குடிமராமத்து மொத்தமாக நின்றுபோனது. மக்களை குடி காரர்களாக ஆக்கி இன்று அவர்கள் கையேந்தும் நிலையில் வைத்ததுதான் இந்த அரசியல் வியாதிகளின் 50 வருட மாபெரும் சாதனை. எந்த ஒரு வாய்க்காலையும் பாருங்கள் கழிவு நீரும் பிளாஸ்டிக் கழிவுகளும்தான் நிறைந்து இருக்கும். இந்த அரசுகள் பிளாஸ்டிக் பைகளையும் தடை செய்யாது. அவ்வப்போது சில கடைகளில் பொய் பிளாஸ்டிக் பை வைத்திருந்தார்கள் என்று வழக்கு போடுவார்கள். பிளாஸ்டிக் பை தயாரிப்பவனை என்றுமே போய் பிடிக்க மாட்டார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை