உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

காவிரியில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர கரையோர மக்களுக்கு கர்நாடக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.05 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது.தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த ஜூலை 25ம் தேதி நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர்வரத்து ஒரு லட்சத்து 500 கனஅடியாக உள்ளது. கால்வாய்க்கு 500 கனஅடி நீர் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 500 கனஅடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Thangaraju
ஜூலை 28, 2025 13:57

Numerous lakes/ponds in Salem district do not have even a of water..There was a plan to store the excess water discharged from Mettur Dam in these lakes/ponds.. what happened to this scheme? I am from Attur taluk.. the lake in my village has not seen water for nearly two decades! we depend on deep borewells for irrigation.. Diverting the excess water to such areas will help improve the ground water level which will benefit the farmers.. But our leaders do not have any interest in implementing such schemes.. Thanks to British and Kamaraj, we have a few dams in TN..


venugopal s
ஜூலை 28, 2025 12:47

ஒரு லட்சம் கன அடி தண்ணீர் என்பது எவ்வளவு என்பது தெரியாமல் கருத்து பதிவிடுவது அபத்தம்! ஒரு லட்சம் கன அடி தண்ணீர் எட்டு நாட்களில் மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான எண்பது டி எம் சி நீர்.ஒரு தடுப்பணையில் ஒரு டி எம் சி தண்ணீர் மட்டுமே சேமிக்க முடியும்.இவ்வளவு நீரை சேமிப்பது என்பது நடவாத காரியம். அது போக கடல் வாழ் உயிரினங்கள் வாழ நதி நீர் கடலுக்கு செல்வது அவசியம். மேட்டூர் அணைக்கு கீழ் பகுதியில் வேறு பெரிய அணை கட்ட தகுந்த நிலப்பகுதியும் கிடையாது.


Venkataraman
ஜூலை 28, 2025 11:51

கர்நாடகத்திலிருந்து வரும் நீரில் பாதி தமிழ்நாட்டில் கடலில் கலந்து விடும். ஆனால் கடைக்கால் பகுதிகளில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லை. உபரியாக உள்ள நீரை சேமித்து வைக்க அணைகள் இல்லை. அணைகளை கட்ட விவசாயிகள் நிலம் தரமாட்டார்கள். தமிழ்நாட்டுக்குள்ளேயே ஓடும் நதிகளை இணைக்க திட்டம் எதுவும் இல்லை


D Natarajan
ஜூலை 28, 2025 11:49

எல்லா நீரும் கடலுக்கே. லஞ்சம் தவிர வேறு எதையும் இந்த அரசு செய்யாது.


Indhuindian
ஜூலை 28, 2025 11:32

Water Water everywhere but no water to drink- an old folk lore. This is the story year after year for more than sixty seventy years. No political will to harness the surplus water and divert and store. The story will go on for ever. Long live our political tem


Dominic
ஜூலை 28, 2025 10:55

கர்நாடக அரசாங்கத்தை அணைகடட அனுமதியுங்கள். தண்ணீர் veenakathu.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 28, 2025 11:25

இதை சொன்னா நம்மை சாங்கி என்று சொல்வாங்க நம்ம பகுத்தறிவு பகலவன்கள் , சிலை , பேனா வைக்கும் காசில் அணை கட்டலாம் என்று சொல்லும் அறிவு என்று தமிழக வாக்காள பெருமக்களுக்கு வருதோ அன்று தான் தமிழகத்தின் உண்மையான விடியல்


Kogulan
ஜூலை 28, 2025 08:41

ஆமாம், இலவசம் என்பதை விட்டுவிட்டு எந்த அரசாங்கம் நீர் தேக்கம் பற்றி யோசிக்குமோ? தெரியவேயில்லை


பேசும் தமிழன்
ஜூலை 28, 2025 07:46

காவிரியில் தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது.... ஆனால் இவர்கள் அதை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்டாமல்.... கடலில் வீணாக கலக்க விட்டு கொண்டு இருக்கிறார்கள்.....பிறகு மழை இல்லாத போது..... க‌ர்நாடகாக்காரன் தண்ணீர் திறந்து விடவில்லை என்று கூப்பாடு போட வேண்டியது.... அதுவும் கர்நாடகாவில் கூட்டணி கட்சி ஆட்சி நடந்தால்.... அதை கூட கேட்பதில்லை !!!


சமீபத்திய செய்தி