உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்; ஹோட்டல்களுக்கு இனி கட்டாயம்

உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்; ஹோட்டல்களுக்கு இனி கட்டாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'நடுத்தர மற்றும் பெரிய ஹோட்டல்களில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பெற்றவர்களை, பணி அமர்த்துவது கட்டாயம்' என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h2jnf8di&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உணவு முறை மாற்றத்தால், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய், வயிற்று புண் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு, ஹோட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்வதே பிரதான காரணமாகும்.

காலாவதி பொருள்

குறிப்பாக, ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது; காலாவதியான பொருட்களை பயன்படுத்துதல்; ரசாயனம் கலந்த உணவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஹோட்டல் உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக, உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.எனவே, ஹோட்டல்களில் தரமான உணவு விற்பனையை உறுதி செய்யும் வகையில், 52,520 வணிகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவர், ஹோட்டல்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

அறிவுறுத்தல்

இது குறித்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:பெரிய ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்கள் உள்ளனர்; அவர்கள் தரமான உணவை பொது மக்களுக்கு வழங்குவது குறித்து, சக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர். அதேநேரம், நடுத்தர ஹோட்டல்களில், அத்தகைய பணியாளர்கள் பணி அமர்த்தப்படவில்லை. தற்போது, சாலையோர உணவு வியாபாரிகளுக்கு, தரமான உணவு வழங்குவது குறித்து, பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல, உரிமம் பெற்றுள்ள நடுத்தர ஹோட்டல் உரிமையாளர்கள் அல்லது பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படும். அப்போது தான் நடுத்தர ஹோட்டல்களிலும், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பெற்றவர் பணியாற்றுவதை உறுதி செய்ய முடியும். உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடிய, சுகாதாரமற்ற உணவு விற்பனையையும் தடுக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

kulandai kannan
டிச 24, 2024 19:13

நல்ல நடவடிக்கை


jahir hussain
டிச 24, 2024 16:18

உணவு பாதுகாப்பு supervisor மட்டுமே இதை செய்து விட முடியாது... ஹோட்டல் முதலாளி மனசு வைக்காமல்... ஏனெனில் supervisor க்கு சம்பளம் முதலாளி தானே கொடுப்பார்...


ஆரூர் ரங்
டிச 24, 2024 10:09

கவனிப்பது மிக முக்கியம்.


Sampath Kumar
டிச 24, 2024 09:43

this decision is an welcoming one .Apart from government giving training for FSMS supervisor , the private sector can play a pivotal in ensuring Food Quality and safety of any organization. In foreign country the ISO FOOD SAFETY MANAGEMENT SYSTEM CERTIFICATION IS MANDATORY FOR ANY SIZE OF ORGANIZATION .The government alone can not manage this issue .country like INDIA needs expertise and co operation from private sector to ensure quality and food safety . The government must insist the organization to get ISO FSMS CERTIFICATION which will help the FSMS SUPERVISOR AS WELL


Bhaskaran
டிச 24, 2024 09:14

எல்லா மருந்து கடைகளிலும் லைசென்ஸ் பெற்ற ஒருவர் பெயரில் இருக்கும் அவருக்கு மாதம் குறைந்த தொகை தந்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மை தெரியவில்லை அதேபோல் இனி உணவகங்களிலும் பெயருக்கு ஒருத்தர் இருப்பார்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 08:56

ஃபுட் செக்யூரிட்டி சூப்பர்வைசர் போடலன்னா பெனல்டி.... தேர்தல் வருதே..... செலவுக்குப் பணம் வேண்டாமா ?? கட்சிப்பணத்தையா தேர்தலுக்கு செலவு பண்ண முடியும் ????


visu
டிச 24, 2024 07:57

ஏற்கனவே பயிற்சி கொடுத்துவிட்டு அவர்களை தனியார் வேலைக்கு அமர்த்துவது கட்டாயம் என்று சொல்கிறார்கள் எங்கயோ இடிக்குது .ஏதோ தவறு நடக்குது


Kasimani Baskaran
டிச 24, 2024 07:55

மூலப்பொருள்களின் விலை உயர்வு ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் தனக்குத்தானே சோதித்துத்தான் இப்படி ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். வர்த்தக ரீதியாக வெற்றி பெறவேண்டும் என்றால் தரமான உணவு முக்கியம் என்பதைக்கூட அறியாமல் தொழில் செய்பவர்கள் எப்படி உணவின் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்? நுகர்வோரின் புகார்கள் அல்லது ஆலோசனையின் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டு அபராதம் விதித்தால் திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு.


Ramesh
டிச 24, 2024 07:50

52520 பணியாளர்கள். ஒருத்தருக்கு குறைந்த பட்சம் 2 லட்சம் என்று வாங்கினால் கூட 1050 கோடி. நல்ல ரூம் போட்டு தான் யோசிச்கிறாய்ங்க


GMM
டிச 24, 2024 07:37

தமிழக நிர்வாகம் உணவு மேற்பார்வையாளர் நியமித்து, தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும். சம்பளம் போன்றவை ஓட்டல் நிர்வாகத்திடம் பெற்று உணவு பாதுகாப்பு துறை ஊழியருக்கு வழங்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை