உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அன்னிய செலாவணி மோசடி வழக்கு: நடிகர்கள் வீடுகளில் ஈ.டி., ரெய்டு

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: நடிகர்கள் வீடுகளில் ஈ.டி., ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, தமிழகம் மற்றும் கேரளாவில், நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோர் வீடு, அலுவலகம் என, 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பூடான் நாட்டு ராணுவ அதிகாரிகள் பயன்படுத்தி வந்த, 'லேண்ட் க்ரூசர், லேண்ட் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ்' உள்ளிட்ட 190 சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டன. தகவல் இக்கார்களை, நம் நாட்டில் உள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு கடத்தி வந்து, புது கார்கள் போல மெருகேற்றி, அதிக விலைக்கு சிலர் விற்று வருவதாக, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தொடர் விசாரணையில், சொகுசு கார்களை, இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாட்டு துாதரகங்களின் முத்திரைகளை பயன்படுத்தி, தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் மறுபதிவு செய்து இருப்பது தெரியவந்தது. மேலும், இக்கார்களை, கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சகலக்கல் மற்றும் தொழில் அதிபர்கள் அதிகளவில் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனால், சொகுசு கார்கள் கடத்தலில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என, சந்தேகம் எழுந்தது. பூடானில் வாகனங்களை, 'நும்கூர்' என அழைப்பதால், 'ஆப்பரேஷன் நும்கூர்' என பெயரிட்டு, சுங்கத்துறை அதிகாரிகள், செப்டம்பரில் துல்கர் சல்மான் வீடு உட்பட, 35 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, வெளிநாட்டு துாதரகங்களின் போலி முத்திரைகளையும், 35 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். மோசடி வழக்கு இந்நிலையில், துல்கர் சல்மான், பிரித்விராஜ், அமித் சகலக்கல் உள்ளிட்டோர், சொகுசு கார்களை கடத்தி, வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள், அன்னிய செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர் . இவ்வழக்கு தொடர்பாக, கேரளாவில் எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் உள்ளிட்ட நகரங்களில், தொழில் அதிபர்கள் மற்றும் இடைத் தரகர்கள் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர். அதேபோல, கேரள மாநிலத்தில் கொச்சி பனம்பிள்ளி மற்றும் எலம்குளம் பகுதியில் உள்ள துல்கர் சல்மான் வீடு, கொச்சி தேவரா பகுதியில் உள்ள பிரித்விராஜ் மற்றும் அமித் சகலக்கல் வீடு, அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை அபிராம புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள துல்கர் சல்மான் வீடு, சினிமா பட தயாரிப்பு அலுவலகம் ஆகியவற்றில், கொச்சி மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் எட்டு பேர் சோதனை நடத்தினர். கோவையிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழகம், கேரளா என 17 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். துல்கர் சல்மான், பிரபல நடிகர் மம்மூட்டியின் மகன். இவர், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரித்விராஜ், தமிழில் மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராஜ்
அக் 09, 2025 09:00

அதெப்படிறா எல்லா திருட்டு பசங்கலும் மோடியை எதிர்க்கிறிங்க.


comman indian
அக் 09, 2025 10:46

எங்களை விட நீங்க சொன்ன விஷயத்தில் பெரிய மாஸ்டர் ஹா இருக்காங்களே அத நினைக்கும் போது பொறாமையா இருக்கு , எப்படினு அவங்களுக்கு சொல்லி தரளயே அதுக்காக எதிர்க்கிறாங்க


ஜெய்ஹிந்த்புரம்
அக் 10, 2025 05:00

மோடி வாஷிங் மெசின் ரொம்ப பேமஸ். ரூ.17,000 கோடி மோசடி கூட ஒரே ராத்திரியிலே வாஷ் பண்ணீடும்.


Vasan
அக் 09, 2025 07:14

நாம் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரிப்பணம் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைகிறது என்பது தெரிந்தும் ஏன் இவர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள்? பல திரையுலக பிரபலங்கள் இதே தவறை செய்திருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் செய்கிறார்கள், பிற்காலத்தில் அவர்கள் அரசியலில் பிரவேசம் செய்யும் பொழுது இந்த நிகழ்வுகள் பேசும் பொருளாகிறது, கரும்புள்ளியாய் நீடிக்கிறது.


Palanisamy Sekar
அக் 09, 2025 05:59

நடிப்பது என்னமோ உலகத்தில் இவர்களால் மட்டுமே முடியும் என்பதுபோல பல கோடிகளை சம்பளமாக வாங்கியும் கூட பணவெறி அடங்காமல் அதிலும் கருப்பு பணம் என்று கணக்கில் காட்டாமல் சுருட்டுகின்ற இந்தமாதிரியான துரோகிகளுக்கு இப்படியும் சம்பாதிக்க பெரிய ஆசை போல. ராணுவத்தின் முத்திரை அயல்நாட்டு தூதரக முத்திரை என்று இல்லீகல் காரியத்தை செய்த இவர்களை ஒருக்காலும் மன்னிக்கவே கூடாது. நம்ம ஊரில் கூட இப்போது ஆளும் கட்சியின் சின்ன ராஜா அரவணைப்பில் இருக்கும் விஜயசேதுபதி என்பவரை கூட விசாரிக்கலாம். அவரது நடவடிக்கைகள் கூட அவ்வளவா சரியில்லை.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 10, 2025 04:57

விஜயசேதுபதி நடவடிக்கைகள் அவ்வளவா சரியில்லை. அதனால அவரை விசாரிக்கலாம். - அப்போ அவங்க, இவிங்க நடவடிக்கை பிடிச்ச மாதிரி இருந்தா இந்த விசாரணை இருக்காது, அப்படி தானே? லேடி ஜால்ராவாக இருந்த நீயி மோடி ஜால்ராவா மாறினதும் உன்னோட நடவடிக்கை காரணமாக தானா? ஒன்னோட நடவடிக்கையும்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 09, 2025 05:57

நீங்களும் இன்னிக்கி கட்சி ஆரம்பிங்க, நாளைக்கி உங்களுக்கும் Y புரிவு பாதுகாப்பு வழங்கிடுவாங்க விஜய்க்கும் இதே ரூட் தான். வெளிநாட்டு கார், ஒன்றிய ரெய்டு, புது கட்சி, Y புரிவு பாதுகாப்பு..


Jay Al
அக் 09, 2025 05:56

இதுதான விஜய் அரசியலில் குதித்தார் ,


Kasimani Baskaran
அக் 09, 2025 04:01

சினிமா மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் அதிகம் ஈடுபட்டு இருக்கும் தொழில் பணச்சலவை. பலர் தனி விமானத்தில் மட்டுமே பறப்பவர்கள்


Ramesh Sargam
அக் 09, 2025 01:09

இவர்கள் இனி பாஜாகவுக்கு எதிராக கொடிபிடிப்பார்கள். மோடிஜியை தூற்றுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை