உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் குறித்து இழிவான பேச்சு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நோட்டீஸ்

பெண்கள் குறித்து இழிவான பேச்சு முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தனின் தனி நபர் மனுவுக்கு, முன்னாள் அமைச்சர் பொன்முடி பதிலளிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் கடந்த ஏப்., 4ல் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்தனர். பின், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டார்; அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. இழிவு பேச்சு தொடர்பாக, சென்னை மாநகராட்சி 134வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில், வழக்கறிஞர்கள் எஸ்.மகேஷ், கே.பிரேம் ஆனந்த் ஆகியோர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த ஜூனில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்தனர். மனுவில், 'வெறுப்பு பேச்சு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகாரை விசாரித்து, மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல், மத உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ், அவரை தண்டிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புகாருக்கு முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து, வரும் 30ம் தேதிக்குள் முன்னாள் அமைச்சர் பொன்முடி பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்பும்படி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த புகார் மனு, வரும் 30ம் தேதி, மூன்றாவது மாஜிஸ்திரேட் சி.சுந்தரபாண்டியன் முன் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே பொன்முடியின் பேச்சுகள், வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருகிறது என கூறி, தாமாக முன் வந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Ramalingam Shanmugam
அக் 25, 2025 10:49

இப்போ தான் நோட்டீஸ் குடுக்கிறீங்களா


Ess Emm
அக் 24, 2025 23:18

பிமுடிக்கு கடுமையான தண்டனை வழங்க vendum


Raghavan
அக் 24, 2025 13:27

இப்போது நீதியை விலை கொடுத்து வாங்கிவிடலாம். கொள்ளை அடித்த காசை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்வார். தாய் 10 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள் அதுபோல் இவருடைய பையனும் இருப்பார். மொத்தத்தில் விடியா மாடலுக்கு சமாதிக்கட்ட இவர்களால் முடிந்ததை செய்கிறார்கள். ஒன்று நிச்சயம் இவன் மறுபடியும் எங்கு நின்றாலும் சூடு சொரணை அற்ற இந்துக்கள் வெகுமதிபெற்று மறுபடியும் தேர்ந்தெடுப்பார்கள். காலத்தின் கோலம்.


C.SRIRAM
அக் 24, 2025 12:46

இவ்வாளவு தாமதத்தை உங்களிடம் வைத்துக்கொண்டு பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் காலவரையறை நிர்ணயிக்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா? இந்த வழக்கு மற்றும் விசாரணையை அடுத்த பத்து வருடங்களுக்கு மேலாக வழக்கம் போல இழுத்துகொன்டே போனால் சம்பத்தப்பட்ட நபர் இல்லாமல் போனாலும் போவார் . உங்கள் நீதிக்கு கிடைக்கும் வெற்றி


sankar
அக் 24, 2025 12:44

பாத்து - வெறும் பத்துவருசம் தான் ஆச்சு பேசி - கொஞ்சம் நாள் போகட்டுமே சார்


Ravi
அக் 24, 2025 12:37

உயர் நீதி மன்றமே இவர ஒண்ணும் பண்ணல ! உள்ளூர் நீதி மன்றம் என்ன பண்ணப் போகுது?


jss
அக் 24, 2025 13:22

கரெக்ட். இவர் உயர்நீதிமன்ற ஆணை அனுப்பி வைத்தார் போதும் கீழ் நீதிமன்றத்தின் கேஸ் பைசலாகிவிடும்.


Anand
அக் 24, 2025 11:18

அதுவே வேற்று மதத்தவரை ஹிந்து எவராவது இதுபோல பேசியிருந்தால் இந்நேரம் காவல்துறை, கோர்ட், அரசியல் கட்சிகள் என ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு தமிழ்நாட்டையே களேபரமாக்கி குளிர் காய்ந்திருப்பார்கள்... ஹிந்துக்கள் சூடு, சொரணையற்ற இளிச்சவாயர்கள் அல்லவா? அதுதான் கேடுகெட்ட இருபத்தி ஒண்ணாம் பக்க திருட்டு கழிசடைகள், திமிர், தெனாவட்டாக வாய்க்கு வந்தபடி பேசி அவர்களால் முடிந்தளவுக்கு நம்மை கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.


sengalipuram
அக் 24, 2025 10:49

இவர் இவரது வாரிசுகளை உருவாக்கியது...? பொது இடத்தில் இந்த கேள்வியை இவரிடம் கேட்க வேண்டும் .


என்னத்த சொல்ல
அக் 24, 2025 10:46

விரைவில் cv சண்முகம் மேல் வழக்கு போடுவார்கள்னு நம்பறேன். ஏன்னா, பிஜேபி மானரோசம் உள்ளதால், கட்சி பாகுபாடு பார்க்கமாட்டார்கள்


angbu ganesh
அக் 24, 2025 09:43

கிழுச்சிங்க அவங்க இப்படித்தான் நம்மள கேவலமா பேசறாங்க ஒரு பொது முதல்வர் கிறிஸ்துவ முஸ்லீம் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் ஹிந்து பண்டிகைகளுக்கு ஊமை ஆகிடாறார் இதுவே நமக்கு பெருத்த அவமானம் அவர் இப்படித்தான் ஹிந்துக்களை கேவல படுத்துகிறார் என்ன பண்ணோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை