அரசு கல்லுாரி மாணவர்களின் சலுகைக்கு அபாயம்
உயர் கல்வியை மேம்படுத்துவதாக கூறும் தனியார் பல்கலை சட்டத்திருத்தம், அரசு உதவிபெறும் கல்லுாரிகளை, முழுமையாக தனியார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லும். இது, அமலுக்கு வந்தால், அரசு உதவிபெறும் கல்லுாரி மாணவர்களுக்கு, கல்வி உதவிக் கட்டணம், இடஒதுக்கீடு ஆகிய சலுகைகள் நிறுத்தப்படும். அறநோக்கத்தோடு துவங்கப்பட்ட கல்லுாரிகள், வியாபாரத்தை நோக்கி நகரும். பணி பாதுகாப்பு, ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு ஆகியவை அறவே ஒழிக்கப்படும். - தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,