உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்; அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்; அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந் நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m1iya3xf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது. மேலும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்கவும், அவற்றை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

K.Ramakrishnan
மார் 19, 2025 23:38

அது பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். சம்பளம் என்பது பாக்கெட் மணி மாதிரி. லஞ்சம் தான் அதிகம் வருகிறதே... இன்று கூட ஒரு பெண் விஏஓ கையும் களவுமாக சிக்கி இருக்கிறார்.அவரிடம் கணக்கில் வராத பணம் ரூ.75 ஆயிரம் கைப்பற்றப்பட்டு உள்ளது. விஏஓ ஒரு மாத சம்பளம் கூட அவ்வளவு இருக்காதே... ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.


Ramesh Sargam
மார் 19, 2025 12:56

சம்பளம் கட் ஆனால் என்ன, இந்த அரசு ஊழியர்கள் அவர்கள் வாங்கும் கிம்பளத்தை லஞ்சத்தை வைத்து சரிசெய்துவிடுவார்கள். அடுத்த தேர்தலின்போது திமுக கொடுக்கும் இலவசங்களை வாங்கிக்கொண்டு மீண்டும் திமுகவையே ஆட்சியில் அமர்த்துவார்கள்.


theruvasagan
மார் 19, 2025 12:55

நன்மையும் தீமையும் பிறர் தர வாரா. போன தேர்தலில் நடுநிலைமை வகிக்காமல் பாரபட்சமாக நடந்து கொண்டதற்கு தண்டனை அனுபவித்தே தீரணும். லஞ்சம் வாங்கி மக்களுக்கு தினமும் துரோகம் செய்வது போதாதென்று தேர்தல் நேரத்திலும் மனசாட்சியின்றி அநியாயமாக நடந்து கொண்ட பாவத்துக்கு இந்த தண்டனை போதாது.


Rajarajan
மார் 19, 2025 12:36

மனித மனதிற்கு போதும் என்ற எல்லையே இல்லை. அது அவர்கள் உழைப்பாக இருந்தால் பொருந்தும். அரசின் கஜானாவை எவ்வளவு தான் தூர் வார முடியும் ?? வேலை நிரந்தரம் உள்ளிட்ட எவ்வளவு சம்பளம் சலுகைகள் அள்ளி அள்ளி கொடுத்தாலும், அரசு ஊழியருக்கு போதாது எனில், முக்கிய துறைகளை தவிர மீதியை தனியாருக்கு கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை. இன்னும் சொல்ல போனால், தேவையற்ற / காலத்திற்கு ஒவ்வாத / நஷ்டத்தில் இயங்கும் அரசு துறை நிறுவனங்களை இழுத்து மூடுவதில் தவறில்லை. எப்படியும் இவர்களுக்கு கை நிறைய பணம் கொடுத்து தான் வீட்டுக்கு அனுப்புவர். மேலும் மேலும் தனியார் / வியாபாரிகள் / ஏழை பாழைகளை வயிற்றிலடித்து, அரசு ஊழியருக்கே கொடுத்தால் எப்படி ?? அரசின் கடனை மட்டும் தனியார் சுமக்க வேண்டும், ஆனால் அதீத சம்பளம் மற்றும் சலுகைகள் மட்டும் அரசு ஊழியருக்கா ?? இதில் எந்த ஆளும் / ஆண்ட / ஆளப்போகும் கட்சியாக இருந்தால் என்ன ? தலைக்கு மீறி கடன் வெள்ளம் சென்றபின்னர், நடவடிக்கையில் ஜான் என்ன ? முழம் என்ன ?? இதற்க்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க, பொதுநல வழக்கு தாக்கல் செய்தே ஆக வேண்டும். இல்லையேல், கஜானாவையும், தனியார் வாழ்வையும் யாரும் காப்பாற்ற முடியாது. தெலுங்கானாவில் இதே நிலைமை தான் தற்போது. தமிழகம் அடுத்த நிலையில் உள்ளது.


T.S.SUDARSAN
மார் 19, 2025 11:25

அரசாங்க ஊழியர்களே மீண்டும் தி மு க விற்கு வாக்களித்து வெற்றி பெறவைத்து உங்கள் கடமையை சரியாக நிறைவேறிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதுவே உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் . வாழ்த்துக்கள்.


Vijay
மார் 19, 2025 11:24

2025 முதல் உங்க ஆட்சி கட்


Vijay
மார் 19, 2025 11:24

2025 முதல் உங்க ஆட்சி கட்


sundarsvpr
மார் 19, 2025 11:23

உரிமைக்கு போராடுவது தவறு என்று இருந்தால் பணிக்கு வராவிடில் சம்பளம் கட் செய்வது சரி. உரிமைக்கு போராடும்போது அலுவலகத்திற்கு எழுத்துமூலம் தகவல் கொடுத்து வராமல் இருப்பது தவறு இல்லை. உணர்ச்சி வசப்பட்டு போராட்டம் இல்லை. நியாயமான கோரிக்கைக்கு போராட்டம். எங்களிடம் நிதி இல்லை அரசு வெட்கப்படாமல் கூறவேண்டும். அப்படி என்றால் இலவசம் கொடுப்பதற்கு எங்கு நிதி கிடைத்தது? அரசு ஊழியர் மற்றும் தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் குடும்பத்திற்கு இலவசம் கொடுப்பதை ஏன் கூடாது என்று அரசு கருதவில்லை? அமைச்சர்களின் வீட்டு உறுப்பினர்கள் இலவசம் பெறவில்லை என்று அரசு கூறுமா?


T.S.SUDARSAN
மார் 19, 2025 11:02

இப்போ அரசு ஊழியர்கள் தெரிந்திருப்பார்கள் நாம் ஏன் தீ மு க வுக்கு ஓட்டுபோட்டோம் என்று. மக்களுக்கு தீயவை செய்தால் பின்னர் உங்களுக்கு தீயவை நடக்கும் என்று இப்போ புரிகிறதா? எல்லோர் இடத்திலும் வேலை செய்து அரசியல்வாதியை சொல்லுக்கு மதிப்பளிக்காமல் வேலை செய்தால் அரசாங்க ஊழியர்க்கு நன்மைகள் நடைபெறும் என்று தெரிந்து கொள்.


veeramani hariharan
மார் 19, 2025 10:52

When DMK + were in Opposition they shout as anti democracy. But today simply suppressing against any demogratic pros in this Government. Thanks to T.N. People and all Government employees and teachers for voting for Dravida parties bybtaking ₹ 200/=, Tasmac, Freebies


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை