உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயிர் கடனுக்கு ஜாமின்தாரர் உத்தரவாதம்; வேளாண் கூட்டுறவு வங்கிகள் நெருக்கடி

பயிர் கடனுக்கு ஜாமின்தாரர் உத்தரவாதம்; வேளாண் கூட்டுறவு வங்கிகள் நெருக்கடி

சென்னை: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், பயிர்க்கடன் வாங்க செல்லும் விவசாயிகளிடம், ஜாமின்தாரர் உத்தரவாதம் கேட்டு நெருக்கடி தரப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கியுள்ளது. சாகுபடிக்கு தேவையான செலவுகளுக்கு, தேசிய வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில், பயிர்க் கடன் பெறும் முயற்சிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

அலைக்கழிப்பு

ஆனால், பல்வேறு ஆவணங்கள், ஜாமின்தாரர் கையெழுத்து கேட்டு, விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில், பயிர்க்கடன் பெற வேண்டுமானால், ஒரிஜினல் சிட்டா அடங்கல், கணினி சிட்டா, ஆதார் நகல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி சேமிப்பு புத்தகம் முதல் பக்கம், வங்கி கடன் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்றவற்றை, இரண்டு, 'செட்' சமர்ப்பிக்க வேண்டும் என்கின்றனர்.மேலும், ஜாமின்தாரர் புகைப்படம் இணைக்க வேண்டும். தேவைப்படும் போது, அவரை நேரில் அழைத்துச் செல்ல வேண்டும் என்கின்றனர்.

கொடுமை

இதுகுறித்து கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி ஆவணங்கள் பெறப்பட்டு, கடன் வழங்குவதாக விளக்கம் தருகின்றனர். இதனால், பலருக்கு வங்கி கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அரசின் விவசாய விரோத கொள்கைகளில், இது மிக கொடுமையானதாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லாமல் பயிர்க்கடன் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

raji durai
ஜூன் 28, 2025 10:00

அனைவருக்கும் அனைவருக்கும் ஜாமீன் தர யாரும் முன் வர மாட்டார்கள் சிற்றாடங்கள் மற்ற ஆவணங்களை பெற்றுக் கொண்டு உத்திரவாத கையொப்ப பெற்று அவர் நிலம் அவருடைய நிலம் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொண்டு அவருக்கு விவசாய கடன் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் அழைக்க வைக்காமல் கேட்டுக்கொள்கிறேன்


சுந்தர்
ஜூன் 24, 2025 09:04

அப்பாவி அண்ணன் அறிவுஜீவியா இருக்காரே...!!!


தமிழ் மைந்தன்
ஜூன் 24, 2025 08:35

ஊழல் திமுகாவின் சாதனைகளில் இதுவும் ஒன்று


அப்பாவி
ஜூன் 24, 2025 07:39

ஒருத்தருக்கொருத்தர் ஜாமீன் கையெழுத்து போடுங்க. பணம் கைக்கு வந்தவுடன் சொத்தை மனைவி பேருக்கு மாத்திடுங்க. சேந்தாப்போல கையை விரிச்சுடலாம்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 24, 2025 06:59

ஜமீன்தார் இல்லாத ஊரில் விவசாயமே செய்யக்கூடாதா ?


raja
ஜூன் 24, 2025 08:41

அய்யா படிச்சது கட்டுமர சமசீரலையா ... ஜாமீன்தாரருக்கும் ஜமீன்தாருக்கும் வித்தியாசம் தெரியலையே....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை