உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழர்கள் மீது வெறுப்பு பேச்சு: சீமான் ஆவேசம்

தமிழர்கள் மீது வெறுப்பு பேச்சு: சீமான் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தையும், தமிழர்களையும் பிரதமர் மோடி கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசாவில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, புரி ஜெகன்நாதர் கோயிலின் கருவூலத் திறவுகோல் தமிழகத்தில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தமிழத்தை கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் தமிழ்மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒடிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்?

எதிர் விளைவுகள்

தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய நரேந்திரமோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையெனில், இதற்கான எதிர்விளைவுகளை வருங்காலத்தில் பா.ஜ., தமிழகத்தில் எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 52 )

tmranganathan
மே 25, 2024 08:33

சீமானின் அரசியல் எஸ்பிஐரி தேதி குறித்தாகிவிட்டது. தன தம்பிகளுக்கு அறிவு வந்துவிடக்கூடாது என மூளை சலவை செயகிறார். இது திமுக பாணியில் நடக்கிறது. இந்த போர்ஜ்ர்ட் ஆட்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சீரழிந்துவிடும் யாழ்ப்பாணம் போல.


Minimole P C
மே 24, 2024 08:36

TN politicians have become third rated because of their looted money and want to loot more besides to safe guard the looted money For this they talk all non sence and mislead people Seeman is the best among that lot Inconsistency man somehow understood to make money in politics


tmranganathan
மே 24, 2024 07:50

மோடி ஒரிஸ்ஸாவில் சொன்னது சரியே


tmranganathan
மே 24, 2024 07:46

சீமான் இளைஞர்களை தவறாக கொண்டு செல்கிறான் தான் மட்டும் கொள்ளை அடித்து கட்டப்பஞ்சாயத் செய்து பல நூறு கொடிகளை சுருட்டிவிட்டான் ஸ்டாலினுக்கு ஜால்ராவா?


தத்வமசி
மே 23, 2024 23:29

ஆமைக்குஞ்சுக்கு மிகவும் கோவம் வந்து விட்டது சீறுகிறார், கத்துகிறார், கதறுகிறார் அந்த காங்கிரஸ்காரர் இரண்டு நாளைக்கு முன்பு தமிழர்களைப் பற்றி எதோ கூறினாரே அது பற்றி தெரியுமா ஆமைக்குஞ்சு அண்ணே தெரியாது உனக்கு கொடுத்துள்ள அசைன்மென்ட் இது அப்பத்தான் பெட்டி வரும் ஜாலியாக இருக்கலாம் கட்சி நடத்துகிறேன் என்று நல்லா கல்லா கட்டலாம்


திண்டுக்கல் சரவணன்
மே 23, 2024 20:08

தமிழர்கள் தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும் என சீமான் கூறுவது போல ஒரு ஓடியாகாரர் ஒடிஸாவை ஆளவேண்டும் என மோடி கூறுகிறார் இதில் தவறு என்ன இருக்கிறது தனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினி


Muralidharan raghavan
மே 24, 2024 09:57

கரெக்ட்


sundaran manogaran
மே 23, 2024 15:50

பிரதமரின் பேச்சை சரியாக புரிந்து க்கொள்ளும் பகுத்தறிவு இல்லாதவர்களா தமிழர்கள். இவர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.


Narayanan
மே 23, 2024 13:08

தமிழரை ஒரு தெலுங்கர் கருணாநிதி சொற்ற்றால் அடித்த பிண்டம் தமிழர்கள் என்று சொன்னபோதும், தமிழனை தமிழன் தான் ஆளவேண்டும் என்று சொல்லும்போதெல்லாம் வராத வேகம் இப்போ எங்கிருந்து வருகிறது மோடிஜியை இழந்து பேசினால் மீதம் இருக்கிற தேர்தல் தேதிகளில் எப்படியாவது வெற்றி வாய்ப்பை இழக்க செய்யலாம் என்பது இங்குள்ள அரசியல் வீரர்களின் எண்ணம் தேர்தல் நடக்கவிருக்கிற தொகுதிகள் வடக்கு மாநிலலங்களில் அங்கெல்லாம் அவர்களை பிஜேபியை ஒன்றும் செய்யமுடியாது இது புரியாமல் தொடர்ந்து மோடிஜியை அவதூறாக பேசுகிறார்கள் இந்த பைத்தியக்காரர்களிடம் மக்கள் மாட்டிக்கொண்டு படும் அவஸ்த்தை கொஞ்ச நஞ்சமல்ல


karthik
மே 23, 2024 10:33

ஏண் நீ வடக்கன் வந்தேறி என்று நீ பேசாத வெறுப்பு பேச்சா?


kulandai kannan
மே 23, 2024 10:27

சாத்தான் வேதம் ஓதுகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை