உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கர்நாடகா அணைகளில் இருந்து 95,000 கனஅடி நீர் திறப்பு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா அணைகளில் இருந்து 95,000 கனஅடி நீர் திறப்பு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, கேஆர்எஸ் அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீரும் என மொத்தம் 95,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7t79b77z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது 14,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேட்டூர் அணை நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 117.5 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவு 120 அடி. அணைக்கு வினாடிக்கு 7382 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தாமரை மலர்கிறது
ஆக 18, 2025 20:26

தமிழகத்திற்கு விடும் தண்ணீர் கடலுக்கு விடுவதே. அதனால் தடுப்பு அணைகள் கட்டாதவரை தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தேவை இல்லை என்று சுப்ரிம் கோர்ட் சொல்வது நல்லது.


Tiruchanur
ஆக 18, 2025 15:56

என்ன பிரயோஜனம்? நாம நேரா கடலுக்கு விட்டுட்டு மறுபடி ஜனவரி மாசத்துல "கர்நாடகா எங்களுக்கு தண்ணி விடவில்லை"ன்னு கூவுவோம். The vidiyal திராவிட ஆட்சியை தேர்ந்தெடுத்ததற்கு நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2025 18:01

இதனை சொன்னா நம்மை சாங்கி என்பானுங்க பகுத்தறிவு புலிகள்


ஆரூர் ரங்
ஆக 18, 2025 15:00

கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிறைய நீர்நிலைகளை உருவாக்கி சேமிக்கப்படுகிறது. இங்கு கடைமடைப் பகுதிகளில் இன்னும் நீர்வரத்து இல்லை. நூற்றுக்கணக்கான டிஎம்சி நீர் கடலுக்குச் செல்கிறது. உபரி நீரைப் பயன்படுத்தி பாசன நிலங்களை அதிகரிக்க அனுமதி கேட்டு நெடுங்காலமாக கோர்ட்டில் நிற்கிறார்கள். ஆளும்கட்சி ஆட்கள் ஆற்று மணலை சுரண்டி விட்டதால் ஆற்றில் வெள்ளம் ஓடினாலும் நிலத்தடி நீர்மட்டம் ஏறவில்லை. இந்த அழகில் காவிரித் தீர்ப்பில் தமிழகம் 15 டிஎம்சி நிலத்தடி நீரை பயன்படுத்த உத்தரவிடபட்டதாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் வேறு ஆலை வேலைவாய்ப்புகளும் கிடையாது. ஆக டெல்டா நாசமாகி விட்டது.


ஜெகதீசன்
ஆக 18, 2025 14:35

தமிழகத்துல மேலும் அணைகள் கட்ட சாத்தியமான பூக்க அமைப்பு கிடையாது, சாத்தியமல்லை. வெட்டி அரசியல் வித்தைகளை ஓரமாக வைத்து விட்டு கர்நாடகாவை பல பெரிய அணைகள் கட்ட அனுமதிக்கனும். அதன் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் கொடுக்கலாம். நீர் வீணாக கடலில் கலப்பதை விட யாரேனும் உபயோகிக்கலாமே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மார்தட்டுவதில் என்ன பெருமை?


சமீபத்திய செய்தி