வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்திற்கு விடும் தண்ணீர் கடலுக்கு விடுவதே. அதனால் தடுப்பு அணைகள் கட்டாதவரை தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தேவை இல்லை என்று சுப்ரிம் கோர்ட் சொல்வது நல்லது.
என்ன பிரயோஜனம்? நாம நேரா கடலுக்கு விட்டுட்டு மறுபடி ஜனவரி மாசத்துல "கர்நாடகா எங்களுக்கு தண்ணி விடவில்லை"ன்னு கூவுவோம். The vidiyal திராவிட ஆட்சியை தேர்ந்தெடுத்ததற்கு நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்
இதனை சொன்னா நம்மை சாங்கி என்பானுங்க பகுத்தறிவு புலிகள்
கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிறைய நீர்நிலைகளை உருவாக்கி சேமிக்கப்படுகிறது. இங்கு கடைமடைப் பகுதிகளில் இன்னும் நீர்வரத்து இல்லை. நூற்றுக்கணக்கான டிஎம்சி நீர் கடலுக்குச் செல்கிறது. உபரி நீரைப் பயன்படுத்தி பாசன நிலங்களை அதிகரிக்க அனுமதி கேட்டு நெடுங்காலமாக கோர்ட்டில் நிற்கிறார்கள். ஆளும்கட்சி ஆட்கள் ஆற்று மணலை சுரண்டி விட்டதால் ஆற்றில் வெள்ளம் ஓடினாலும் நிலத்தடி நீர்மட்டம் ஏறவில்லை. இந்த அழகில் காவிரித் தீர்ப்பில் தமிழகம் 15 டிஎம்சி நிலத்தடி நீரை பயன்படுத்த உத்தரவிடபட்டதாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் வேறு ஆலை வேலைவாய்ப்புகளும் கிடையாது. ஆக டெல்டா நாசமாகி விட்டது.
தமிழகத்துல மேலும் அணைகள் கட்ட சாத்தியமான பூக்க அமைப்பு கிடையாது, சாத்தியமல்லை. வெட்டி அரசியல் வித்தைகளை ஓரமாக வைத்து விட்டு கர்நாடகாவை பல பெரிய அணைகள் கட்ட அனுமதிக்கனும். அதன் கட்டுப்பாட்டை ராணுவத்திடம் கொடுக்கலாம். நீர் வீணாக கடலில் கலப்பதை விட யாரேனும் உபயோகிக்கலாமே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று மார்தட்டுவதில் என்ன பெருமை?