உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இன்று 21 மாவட்டங்கள், நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (செப் 18) 21 மாவட்டங்களிலும்ல நாளை (செப் 19) 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:* கிருஷ்ணகிரி, * தருமபுரி, * சேலம், * திருவண்ணாமலை, * திருப்பத்தூர், * வேலூர், * ராணிப்பேட்டை, * செங்கல்பட்டு, * காஞ்சிபுரம், * கள்ளக்குறிச்சி, * விழுப்புரம், * கடலூர், * பெரம்பலூர், * அரியலூர், * திருச்சி, * சிவகங்கை, * புதுக்கோட்டை, * மயிலாடுதுறை, * தஞ்சாவூர், * திருவாரூர், * நாகப்பட்டினம் ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.செப்., 20ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* ஈரோடுசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை