உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை - நீலகிரியில் 3 நாட்களுக்கு கனமழை

கோவை - நீலகிரியில் 3 நாட்களுக்கு கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சேலம் மாவட்டம் ஏற்காடில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், கீழ் கோதையார்; கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறை; திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் தலா, 2 செ.மீ., மழை பெய்துள்ளது. வங்கக்கடலில், மியான்மர் கடலோர பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மியான்மரை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்றும், நாளையும், இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில், சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு, இம்மாவட்டங்களிலும், அதை ஒட்டிய மாவட்டங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ