உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீர் நிலைகளில் அலுவலகங்கள் கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

நீர் நிலைகளில் அலுவலகங்கள் கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நீர் நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அதனால் அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் வசூலிக்கப்படும்' என சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் உள்ள, நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நீர் நிலை என பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில், ஆரம்ப சுகாதார நிலையம், பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்படுகிறது' என, குற்றம் சாட்டியிருந்தார்.இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'ஆரம்ப சுகாதார நிலையம், குறிப்பிட்ட அந்த நிலத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது; அது, சேதமடைந்ததால், புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரிகுளம் என்ற பெயரில், நீர்நிலை என பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில், ஆறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதாக, அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சுட்டி காட்டப்பட்டு உள்ளது. இந்த அலுவலகங்களை, வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து, அரசு எட்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பல்வேறு அரசு அலுவலகங்கள், நீர் நிலைகளில் தான் அமைந்துள்ளன. ஆவணங்களை சரி பார்க்காமல், அந்த கட்டடங்களுக்கு அரசு அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். எனவே, 'நீர் நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட,அனுமதி வழங்கியது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பும் வசூலிக்கப்படும்' என, தமிழக அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். விசாரணை, டிச., 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

U.ARMUGHAM
நவ 05, 2025 14:29

நீர் நிலைகள் கட்டடம் அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மதுரையில் ஹார்வி நகர் பொது இடத்தை ஆக்ரமிப்பு செய்த மருத்துவமனைக்கு அனுமதி வழங்கிய கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


veeramani
அக் 19, 2025 12:25

தென் பாண்டி நாடு சீமையிலிருந்து ஒருவரின் குமுறல் தொன்மை நகரம் மதுரையில் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் தல்லாகுளம் கண்மையையில் நிறுவப்பட்டுள்ளது. அதேபோல் வஃத்ஹபோர்டு கல்லூரி கண்மாயில் உள்ளது. மேலும் மதுரை மாநகராட்சி கட்டிடம் தல்லாகுளம் கண்மாயில் அமைந்துள்ளது. அமெரிக்கன் கல்லூரி செல்லூர் கண்மையை மழுங்கில் தூர்த்து கட்டப்பட்டுள்ளது இதேபோல பல. ஒரு வேண்டுகோள். இனிமேல் நீர்நிலைகளில் எந்த ஒரு கட்டிடம் அரசு அலுவலகம் வராமல் பார்த்துக்கொண்டால்போதும் அன்றைய பாண்டிய சோழ மன்னர்கள் நீர்நிலைகளுக்கு மானியம் அளித்துள்ளனர்


MUTHU
அக் 11, 2025 16:48

நாட்டாமை தீர்ப்ப டிசம்பர் 32 ன்னு மாத்தினா நாங்க எளிதாக புரிந்து கொள்வோம் இது என்றும் நடக்காதுன்னு.


Sridhar
அக் 11, 2025 15:34

அதிகாரி அரசியல்வாதி / அமைச்சரின் உத்தரவை செயல்படுத்தி இருந்தால் தண்டனை பெறுவது பரிதாபம். உயர் அதிகாரிகளும் தண்டனைக்கு உறியவர்தானே?


M S RAGHUNATHAN
அக் 11, 2025 14:52

சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீர் நிலையில்.கட்டப் பட்டு இருப்பதாக தகவல் உலா வந்தது. அது உண்மையா அல்லது வதந்தியா என்று உயர் நீதி மன்றமோ அல்லது அரசோ உறுதி செய்ய வேண்டும்.


அப்பாவி
அக் 11, 2025 14:05

ஒரு காலத்தில் கம்மியாக இருந்திருக்கும். அதுக்கு ராபர்ட் கிளைவ் ஐ கைது பண்ண முடியுமா?


Santhakumar Srinivasalu
அக் 11, 2025 13:21

கோவை உக்கடத்தில் போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், போக்குவரத்து டெப்போ, துணை மின்நிலையம், சுங்கம் டெப்போ எல்லாமே நீர் நிலையில் தான் உள்ளது?


Santhakumar Srinivasalu
அக் 11, 2025 13:08

நல்ல அருமையான தீர்ப்பு!


Gajageswari
அக் 11, 2025 12:06

DTCP அதிகாரிகள் பணி நீக்கம் செய்ய வேண்டும்.


C.RAMESH REDDY
அக் 11, 2025 11:15

நீதிமன்றம் நீர்நிலைகள் மற்றும் ஏரி கால்வாய் உள்ளிட்ட நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எத்தனை உத்தரவு போட்டாலும் அரசு அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு துணை போகிறார்கள். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் கெருகம்பாக்கம் கிராமத்தில்.. நடிகர் அர்ஜுன் அவர்கள் ஏரி கால்வாயை ஆக்கிரமித்து ஆஞ்சநேயர் கோவில் கட்டியுள்ளார். அதைப் போலவே பிரேமவாசம் என்னும் கிறிஸ்துவ ஆசிரமம் ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டியுள்ளனர்.இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேறாமல் வெள்ளம் பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் கெருகம்பாக்கம் ஊராட்சி மற்றும் குன்றத்தூர் ஒன்றியம் நிர்வாகிகள் துணை போகிறார்கள். இதைப் பார்த்து தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை