உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலை முயற்சி வழக்கில் முன் ஜாமின் வழங்கிய நீதிபதி: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் முன் ஜாமின் வழங்கிய நீதிபதி: நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமின் வழங்கியது குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிபாலா. இவர், சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில், கடந்த மாதம் அளித்த புகாரில், 'எங்களுக்கு சொந்தமான 5 சென்ட் நிலத்தில், ச.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடு கட்ட முயற்சித்தனர்.'அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜூன், 24ம் தேதி இரவு வீட்டுக்குள் நுழைந்து, என்னையும், என் கணவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.இப்புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமிபாலா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜராகி, ''தாக்குதலில் காயமடைந்த மனுதாரர், மருத்துவமனையில் இருந்து, ஜூலை, 3ல் 'டிஸ்சார்ஜ்' ஆனதாக, அரசு தரப்பு கூறியதால், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உள்ளது.ஆனால், புகார்தாரர் லட்சுமி பாலா, ஜூலை, 9ல் தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்,'' என்றார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, நேரில் ஆஜரான குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குனர், 'வழக்கின் விசாரணை அதிகாரி அளித்த தகவலின்படியே, புகார்தாரர் ஜூலை 3ல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் விசாரணை நீதிமன்றத்தில் கூறினார்' என்றார்.இதையடுத்து நீதிபதி, 'இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, முன் ஜாமின் வழங்கியது குறித்து, ஜூலை 28ம் தேதி ஆவணங்களுடன் ஆஜராகி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M S RAGHUNATHAN
ஜூலை 25, 2025 10:40

கீழமை நீதி மன்றம் அப்படி சொல்வது தவறு. மாவட்ட நீதி மன்றம் என்று சொல்ல வேண்டும் - District judiciary எப்படி ஜாமின் கொடுக்கலாம். உயர் நீதி மன்றம் விற்க முடியாமல் போய்விட்டதே ?


SP
ஜூலை 25, 2025 10:14

மத்திய அரசு அவசர சட்டம் மூலம் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில்உள்ள நீதிபதிகளின் பின்னணியை விசாரிக்க வேண்டும்.


Barakat Ali
ஜூலை 25, 2025 09:19

கர்நாடக செய்தி ....... கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்கியதற்கு சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது ........


Kanns
ஜூலை 25, 2025 08:56

Courts Esp Higher Courts Must Not Question Lower Judges Unless Grave InJustice & Misuse of Lwgal Powers are there None of Vested False Complainants are Punished by Any Judges Despite 50% Complaints being False. Here its only Bail on Sureties for Simpler Offences Unless Medical Damages are there all serious offences are cookedup by CaseHungry Complainants &police


VENKATASUBRAMANIAN
ஜூலை 25, 2025 07:55

நீதிபதிகள் விமர்சனத்திற்கு ஆளாக கூடாது. இதில்தான் நீதி உள்ளது


Thravisham
ஜூலை 25, 2025 07:38

கீழமை நீதிமன்றங்களில் ஊழல்/லஞ்சம்/ஒரு தலை பட்சமான தீர்ப்பு ஊஞ்சலாடுகிறது. கொலீஜ் கலீஜ்.


அப்பாவி
ஜூலை 25, 2025 10:06

அங்கே சுப்ரிம் கோர்ட் நீதிபதி ரூவா நோட்டை எரிச்சு குளிர் காஞ்சாரு. அது என்ப கீழமைவு நீதிமன்றமா? அவரை பேர் சொல்லி அழைத்தால் தப்பாம். வெளங்குமா நாடு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை