உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவிலில் முதல் மரியாதை நிறுத்த ஐகோர்ட் அறிவுறுத்தல்

கோவிலில் முதல் மரியாதை நிறுத்த ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை : 'கோவில் விழாக்களில், முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவில் மகா பெரிய குண்டம் விழாவில், முதல் மரியாதை வழங்கக்கோரி, தேவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், 'கோவில் வழக்கப்படி, தன் குடும்பத்தினர் தலைமையில், சுவாமி ஊர்வலம் நடத்தப்படும். தங்கள் குடும்பத்தினருக்கு தான் முதல் மரியாதை வழங்கப்படும். அதன்படி, தனக்கு முதல் மரியாதை வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'பல கோவில் விழாக்களில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட காரணமே, முதல் மரியாதை தான். கோவில்களில் முதல் மரியாதை கேட்பதன் வாயிலாக, கடவுளை விட தங்களை மேலானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். இது, விழாக்கள் நடத்தும் நோக்கத்தையே வீழ்த்தி விடுகிறது.'இது போன்ற மரபுகள், சமத்துவத்துக்கு எதிரானது. கடவுள் முன் அனைவரும் சமம். கோவில் விழாக்களில், முதல் மரியாதை போன்ற நடைமுறைகளை நிறுத்த வேண்டும்' என தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M S RAGHUNATHAN
ஜூன் 28, 2025 11:01

உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் முதலில் அவர்களுக்கு கோயிலில் அளிக்கப் படும் மரியாதைகளை ஏற்க மாட்டோம், நாங்கள் மற்ற பக்தர்களை போலவே வந்து வழிபாடு செய்து செல்வோம் என்று சொல்லட்டும். இதை முதலில் அனைத்து நீதிபதிகளிடமும் சொல்லி அமல் படுத்துங்கள். அடுத்து ஏன் டோல் பிளாசாவில் கட்சிக் கொடி கட்டி வரும் வாகனங்களுக்கு toll ges வாங்குவதில்லை என்று கேளுங்கள். அதே போல் சொந்த காரணங்களுக்காக வெளியூர் செல்லும் அரசு அதிகாரிகள், நீதிபதிகள் ஆகியோர் அரசு வாகனங்களை உபயோகப் படுத்தும் போது toll fees கட்ட வேண்டும் என்று உத்தரவிடுங்கள். அடுத்து எந்த ஒரு அரசு வாகனமும் குடும்பத்தாரின் சொந்த உபயோகத்திற்காக பயன் படுத்தக் கூடாது என்று உத்தரவிடுங்கள். இந்த மாதிரி சலுகைகளை abuse செய்வது ஒரு விதமான " மரியாதை " தான் என்று புரிய வையுங்கள்.


M S RAGHUNATHAN
ஜூன் 28, 2025 10:50

There is always something called protocol. The high fly politicians, ministers, bureaucrats, High Court Judges, District Judges, top ranking police officials every where get priority treatment citing "PROTOCOL" . THEY GET FREE PASSAGE EVERYWHERE. THEY ARE NOT SUBJECTED TO WAIT AND SUFFER LIKE ORDINARY CITIZENS BECAUSE OF THIS SO CALLED "PROTOCOL". Example, these " important Citizens" are not expected to pay even toll fees, which the ordinary citizens pay. If they visit temples in personal capacity, the important officials and trustees and archagars line up with poorna kumbham and escorted to the Sanctum Sanctorum making the ordinary wait and sweat in queue. Let the judges set an example first by denying any special privilege accorded to them before preaching to others. If they are honoured, it is because of their position. In the same light if some persons are honoured , it is due some valid reasons. Ascertain the reason for this. They would have d some endowment otherwise called " kattalai " for performing some uthsavams. Hence it is only appropriate they are honoured. When HRCE officials who are responsible for loot of temple funds and abetting encroachment of temple assets are honoured why not these Ubhayadhaars who are only practising the dharma kaaryam. I beseech the honourable High Court Judge to ponder over this according of " mudhal mariyaadhai "


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை