உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அண்ணாதுரையை மறந்ததால் வெளியேறினேன்

 அண்ணாதுரையை மறந்ததால் வெளியேறினேன்

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரை வைத்து கட்சி நடத்தும் அ.திமு.க.,வினர், அவரை முழுமையாக மறந்து விட்டனர். அது எனக்கு பிடிக்கவில்லை. அதனாலேயே, அக்கட்சியில் இருந்து வெளியேறினேன்.நடிகர் விஜய், ஊழல் கட்சிகளை விமர்சித்ததால், 'செங்கோட்டையனை அருகில் வைத்துக் கொண்டு ஊழல் குறித்து எப்படி பேசலாம்?' என கேட்டு என்னை வம்புக்கிழுக்கின்றனர். என் மீதான காழ்ப்புணர்ச்சியால், ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது. நான் தவறு செய்ததற்கான முகாந்திரம் இல்லை என, வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது. இந்த வழக்கால், சில ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. வழக்கின் நிலை தெரியாமல், என்னை வைத்து, யாரேனும் விமர்சித்தால், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வேன். அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், த.வெ.க., கூட்டணிக்கு வராதது, எங்கள் கட்சிக்கு நஷ்டமில்லை. ராமதாஸ் எங்கள் கூட்டணிக்கு வந்தால் மகிழ்வேன். - செங்கோட்டையன், மூத்த தலைவர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

sankaranarayanan
ஜன 29, 2026 00:45

அப்போ நீ ஜெயலலிதாவை மறந்து விட்டாயா உனக்கு ஜெயலலிதா தானையா தெய்வம் அதை புறக்கணிதடுத்துவிட்டாயே அப்போ நீ புகுந்த இடத்தில்மட்டும் அண்ணாத்துறை இருக்கிறாரா எங்குமே இல்லாத அண்ணாத்துரையைப்பற்றி பேச உனக்கு துப்பு இல்லை திறனும் இல்லை எதோ பொழைப்புக்கு ஒரு புதிய கட்சியில் சேர்ந்தால் கொஞ்சமாவது கொள்ளை அடிக்கலாம். பழைய கட்சியில் கொள்ளை அடிக்க இனி அங்கே ஒன்றுமே இல்லை அங்கே சூன்யமாகிவிட்டது


SRIDHAAR.R
ஜன 28, 2026 17:04

மக்கள் சொல்கிறார்கள் அம்மா மறந்தவனை அரசியலில் இருந்து விரட்ட


sundarsvpr
ஜன 28, 2026 13:27

அண்ணாதுரை யார் என்பதனை கூறாமல் மறந்து விட்டதால் வெளியேறினேன் என்பது கேலிக்குரிய நகைப்புக்குரிய பேச்சு.


Gurumurthy Kalyanaraman
ஜன 28, 2026 13:11

ஏதோ ஒரு சப்பை கட்டு. இருந்தாலும் ஒரு காலத்தில் அம்மா அவரகள் மானத்தை சட்ட சபையில் காப்பாற்றியவர் என்பதால் இவர் மேல் மக்களுக்கு இருக்கும் மரியாதை குறையாது.


JANA VEL
ஜன 28, 2026 13:08

அடடடா ...


A.Kennedy
ஜன 28, 2026 13:05

செங்கோட்டையன் மீதிருந்த அபிப்ராயங்கள் குறைகின்றன, ஏன் இதே போல் பேசுகிறார் என்று தெரியவில்லை, இப்போது இவர் தினமும் அண்ணாதுரை அவர்களை நினைத்துக்கொண்டு தான் இருக்கிறாரா? அப்ப, டி.டி.வி. தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததால் இவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை? இவரது பேச்சு சுத்த பிதற்றலாக இருக்கிறது.


Rathna
ஜன 28, 2026 12:58

எப்படியெல்லாம் யோசிக்கறார் அரசியல்வாதி? ரூம் போட்டு யோசிப்பாங்க போல? அண்ணாதுரையை அவர் இறந்து போது, 1969 லேய மறந்து விட்டார்கள்.


Rajarajan
ஜன 28, 2026 12:42

இன்னும் எங்களை பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல நீ ?


Rajarajan
ஜன 28, 2026 12:32

செம காமெடி. ஆனா சிரிப்பு தான் வரல. மன்னிக்கவும்.


sankar
ஜன 28, 2026 12:09

ரூம் போட்டு யோசிக்கிறார் - குட்


சமீபத்திய செய்தி