உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு, தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு: சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்

சிறுபான்மையினர் பிரச்னை என்றால் ‛‛ஆக்டிவ் மோடு, தமிழக பிரச்னைனா ‛‛கோமா மோடு: சினிமா போராளிகளின் ‛‛டபுள் ஆக்ட் பாலிடிக்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது தமிழ் சினிமா உலகில் சிலர் இருக்கிறார்கள். உலகில் எங்கோ நடக்கும் பிரச்னைகளுக்கு இந்தியாவை குறை சொல்வார்கள். அதே பிரச்னை தமிழ்நாட்டில் நடந்தால் கண்ணை மூடிக்கொண்டு ‛‛கோமா'' நிலைக்கு சென்று விடுவார்கள். அப்போது மட்டும் அவர்களது ஐம்புலன்களும் அடங்கி, ஒடுங்கி அமைதியாகிவிடும்.அப்படித்தான் சமீபத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரில் மூக்கை நீட்டி கருத்து கந்தசாமிகளாகி உள்ளனர் சில சினிமாக்காரர்கள். நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர் ஆகியோர் தான் அந்த பிரகஸ்பதிகள்.சில நாட்களுக்கு முன் சென்னையில் பாலஸ்தீன இனப் படுகொலையை தடுக்க கோரி பேரணி மற்றும் நடந்த ஒரு கூட்டத்தில் இவர்கள், இனப்படுகொலை எங்கு நடந்தாலும் அங்கு குரல் கொடுக்க வேண்டும் என்றார்கள். அதோடு பிரகாஷ்ராஜ், அமீர் ஆகியோர் பேசும்போது, காஸா போருக்கு அமெரிக்க துணை போகிறது என்றவர்கள், பிரதமர் மோடியும் அதற்கு துணை நிற்கிறார் என்று பேசினார்கள்.

உண்மை என்ன:

உண்மையில் போரை நிறுத்த வேண்டும் என்று தான் பிரதமர் மோடியும் வலியுறுத்துகிறார். ஏதோ இந்தியா இஸ்ரேலுக்கு துணை போவது போன்றும், பாலஸ்தீன நாட்டுக்கு துரோகம் செய்வது போன்றும் இவர்களின் பேச்சு இருந்தது. பிரதமராக மோடி பதவியேற்ற இத்தனை ஆண்டுகளில் பாலஸ்தீன நாட்டிற்கு நிதி உதவி, உள் கட்டமைப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அதிகம் உதவி செய்யப்பட்டுள்ளன.

அதிக நிதி

கடந்த ஓராண்டுகளில் மட்டும் இந்தியா சார்பில் அந்நாட்டிற்கு உள் கட்டமைப்பு, ஐடி டெக் பார்க், மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு 141 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளித்துள்ளது. மேலும் பாலஸ்தீனத்திற்கு உதவும் ஐக்கிய நாடுகளின் நிதி அமைப்பிற்கு ஆண்டுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை 2018 முதல் இந்தியா வழங்கி வருகிறது.

மோடிக்கு கவுரவம்

1980ல் இந்தியாவில் பாலஸ்தீன நாட்டிற்கு டில்லியில் தூதரகம் துவங்கப்பட்டது. அதன்பின் இந்தியாவில் பல பிரதமர்கள் பதவி வகித்தனர். அவர்கள் யாருக்கும் கிடைக்காத பாலஸ்தீன நாட்டின் உயரிய விருது 2018ல் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசு வழங்கி கவுரவித்தது. இந்த விருதை வென்ற முதல் இந்திய பிரதமர் மற்றும் அந்நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மோடியின் உதவியை பாராட்டி அந்நாட்டு அரசு கவுரவித்த நிலையில் அது கூட தெரியாமல் மோடியை குற்றம் சொல்கிறார்கள் பிராஷ்ராஜ், அமீர் போன்றோர். இப்படிப்பட்டவர்களை அழைத்து மேடையில் பேச வைத்திருக்கின்றனர். கொடைக்கானலில் வனத்திற்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக வீடு கட்டியவர் இந்த பிரகாஷ்ராஜ். அவர் ஏதோ உத்தமர் போல பேசுகிறார்.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் குரல் கொடுக்க வேண்டும் என இந்த நான்கு சினிமா பிரபலங்களும் பேசுகிறார்கள். ஏதோ ஒரு நாட்டில் நடக்கும் இனப்படுகொலை பற்றி பேசியவர்கள் தமிழகத்தில் நடந்த பல அநீதிகளுக்கு என்றாவது குரல் கொடுத்துள்ளார்களா. லாக்கப் மரணம் பற்றி படம் எடுத்து கல்லா கட்டினார் வெற்றிமாறன். ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் மட்டும் 25 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. அதுபற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை.அதேபோல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம், வேங்கைவயல் பிரச்னை, பல ஆணவ படுக்கொலைகள் உள்ளிட்ட எதற்கும் இவர்கள் வாயை திறக்கவில்லை. ஒரு கண்டன கூட்டம் கூட நடத்தவில்லை. அவ்வளவு ஏன், ஒரு அறிக்கை கூட விட்டதில்லை.இஸ்லாமியர்கள் என்பதற்காக அல்ல நாங்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு குரல் கொடுக்கிறோம். எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, கொல்லப்படுகிறார்களோ அங்கு ஒரு கலைஞனாய், மனிதனாய் குரல் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.நிஜத்தில் இவர்கள் அப்படி செய்தார்களா. நம் அண்டை நாடான வங்க தேசத்தில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடந்தேறின. அப்போதொல்லாம் இவர்கள் வாயை பசை போட்டு ஒட்டிக்கொண்டது ஏன்.இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னையை வைத்து பேரணி, கண்டன கூட்டம் நடத்தியவர்கள் பல ஆண்டுகளாக ஏமன் நாட்டில் நடந்து வரும் போர் பற்றி ஏன் பேசவில்லை. அங்கு நடப்பது இனப்படுகொலையாக தெரியவில்லை.இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் பல ஆண்டுகளாக நடக்கிறது. அப்போது எல்லாம் குரல் கொடுக்காத இவர்கள் இப்போது மட்டும் ஏன் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணமும் உள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதில் சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை கவர இப்படியொரு கண்டன கூட்டம், ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். அந்தக்கூட்டத்தில் இருந்த அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எந்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதே அதற்கு சாட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 153 )

Saravanan
செப் 25, 2025 17:38

கோவலன், போர்டு நந்தினி அவங்களை எல்லாம் மறந்துட்டீங்களே


Keshavan.J
செப் 25, 2025 17:08

கலையிலே மிக கேவலமான கலை இங்கு அமர்ந்திருக்கும் எச்சக்கலைகள்.


Madras Madra
செப் 25, 2025 12:52

இஸ்ரேல் , மொஸாட் வரலாறு படித்து தெளியுங்கள் படிக்க தெரியா விட்டால் நிறைய படம் வந்து இருக்கிறது அதையாவது பாருங்கள்


பெரிய குத்தூசி
செப் 23, 2025 19:30

சமீபத்தில் எனது திருச்சி நண்பர் ஒருவர் வாங்கிய நிலத்தில் வீடுகட்ட பட்டா மாற்றம் செய்ய கார்த்திகேயன் என்ற VAO வை நாடியுள்ளார். அவர் 15000 ருபாய் கேட்டுள்ளார். ஒரு நயாபைசா குறைக்கமுடியாது என கூறியுள்ளார், முதலிலேயே முழு பணத்தையும் செலுத்த கூறியுள்ளார். பணத்துடன் சமயபுரம் பஸ் ஸ்டாண்டில் நின்று போன் அடித்தால் ஒரு ஆட்டோக்காரர் வந்து வாங்கிக்கொள்வார் என கூறியுள்ளார். . நண்பர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாடி இதுபற்றி கூறியுள்ளார். நண்பரை 2-3 தடவை அலைக்கழித்து போலீசார் அலையவிட்டுள்ளார்கள். கடைசியில் கொடுக்கும் லஞ்சப்பணத்தை சொந்தமாக தயார் செய்து போலீசிடம் கொடுத்து கைரேகை மாவை தடவி வாங்கி செல்ல சொல்லியுள்ளார்கள். VAO பணம் கொடுக்கற ஸ்பாட் ல இல்லேன்னா கேஸ் நிக்காது எனவும் கூறி பீதியேற்றியுள்ளார். நண்பர் தலை சுற்றி வெளியே டி குடிக்க வந்துள்ளார். அப்போது அந்த VAO விடமிருந்து போன் வந்துள்ளது. நீங்கள் போலீசில் புகார் செய்தீர்களா என கேட்டுள்ளார். நண்பர் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் சமாளித்து பேசி போலீஸ் வேண்டாம் என முடிவு எய்து VAO கேட்ட காசை கொடுத்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்துள்ளார். பின்னர் தெரிய வந்ததாம், அந்த VAO கார்த்திகேயன் என்பவர் திருச்சி ஏரியா மந்திரி நேருவுக்கு நெருக்கமாம். என்னத்த சொல்வது.


rama adhavan
செப் 24, 2025 05:09

பாவிகள். நல்ல இறப்பு கடினம்.


கத்தரிக்காய் வியாபாரி
செப் 23, 2025 15:31

இவனுகளை கூவ வைக்க ஒரு கூட்டம் இருக்குது


மாபாதகன்
செப் 24, 2025 16:03

நாம மதத்துக்காக கூவின மாதிரியா??


ram
செப் 23, 2025 11:17

காசா ஆட்களுக்கு பொங்கும் இங்கு இருக்கும் சில கூத்தாடி அறிவு ஜீவிகள் அங்கு இஸ்ரேல் அப்பாவி மக்களை அந்த மக்களை சார்ந்த தீவிரவாதிகளால் கொல்லும் போது இவர்கள் அனைத்தயும் மூடி கொண்டு, இஸ்ரேல் திருப்பி அடிக்கும் பொது ஐயோ அம்மா என்று இங்கு கூச்சல் போட்டு என்னாவது, அப்படியே நீங்கள் அந்த மக்களுக்கு எதாவது உதவி செய்வதை இருந்தால் நீங்கள் சேர்த்து வைத்து பணத்தை அவர்களுக்கு அனுப்ப வேண்டியதுதானே. முஸ்லீம் மக்களை பகடைகளாக வைத்துக்கொண்டு இங்கு அசிங்கமான அரசியல் செய்யும் திருட்டு திமுக திக ஒழிந்தால் தான் அனைவர்க்கும் நல்லது நடக்கும். திருட்டு திமுகவில் இருக்கும் ஹிந்துக்கள் இதை உணரவேண்டும்.


venugopal s
செப் 23, 2025 10:43

நமது மத்திய பாஜக அரசு பாலஸ்தீன பிரச்சினையில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று டபுள் ஸ்டாண்ட் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது உண்டா? ஒரு பக்கம் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு மற்றொரு பக்கம் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகாரம் செய்வது என்பது மட்டும் என்னவாம்?


rama adhavan
செப் 24, 2025 05:23

இது தான் மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டா ட்சி கான்செப்ட்.


surya krishna
செப் 23, 2025 10:38

தமிழ்நாட்டு சமூகத்தின் விஷசெடிகள், தி மு க வின் கொத்தடிமைகள்


Madras Madra
செப் 23, 2025 10:33

காசாவில் இருப்பவர்கள் மட்டும்தான் மனிதர்கள் ஈழம் வங்கம் காஷ்மீரம் இங்கு கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேவையற்ற மனிதர்கள் செத்தால் பரவாயில்லை


மாபாதகன்
செப் 24, 2025 16:07

காசா , காஷ்மீர் , ஈழம் , பங்களாதேஷ் எல்லோரும் மனிதர்கள்தான் நீங்கள் குரல் கொடுங்கள்?? இல்லையெனில் மூடிக்கிட்டு இருங்கள்?? குரல் கொடுப்பவர்கள் குரல் வளையை நெரிக்க முயலாதீர்கள்?? ஏன் இத்தாலியில் கூட இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலைக்கு எதிராக பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது அவர்கள் என்ன திமுகவிற்கா இத்தாலியில் வாக்கு கேட்கிறார்கள்.??


Mettai* Tamil
செப் 23, 2025 10:06

நடிப்பு அரக்கர்கள் ....


முக்கிய வீடியோ