உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.8 கோடியில் வைர கிரீடங்கள் வழங்கிய இளையராஜா

ரூ.8 கோடியில் வைர கிரீடங்கள் வழங்கிய இளையராஜா

உடுப்பி:கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு, 8 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடங்கள், தங்க வாளை இசை அமைப்பாளர் இளையராஜா அன்பளிப்பாக வழங்கினார். பிரபல இசை அமைப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா, தன் மகன் கார்த்திக் ராஜாவுடன், உடுப்பியின் கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின், கொல்லுார் மூகாம்பிகைக்கு இரண்டு வைர கிரீடங்கள், நெக்லஸ், வீரபத்ர சுவாமிக்கு தங்க வாளை அன்பளிப்பாக கொடுத்தார். 'இதன் மதிப்பு, 8 கோடி ரூபாய் வரை இருக்கும்' என, கோவில் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Nedumaran Krishnamoorthy
செப் 13, 2025 15:50

எளிமையான மக்களுக்கு படிப்புக்கான உதவிகள் செய்யலாம் மருத்துவ உதவி செய்யலாம்.


Ravi Shankar
செப் 13, 2025 09:31

திரு இளையராஜா அவர்கள், தன் சுய உழைப்பில் கிடைத்த வருமானத்தை அவர் விரும்பும் வழியில் செலவு செய்கிறார். இதில் கமெண்ட் இட , நமக்கு என்ன உரிமை இருக்கிறது.


mani raj
செப் 12, 2025 17:00

,கடவுளுக்கு பணம் தேவையா????


Padmanabhan.R
செப் 12, 2025 12:36

இன்று 12-9-25 மூகாம்பிகையிடம் வேண்டினேன், மருத்துவமனையில் இருக்கும் என் அப்பாவின் மருத்துவசெலவுக்கு பணம் வேண்டி, ஆனால் எனக்கு இது வரை கிடைக்கவில்லை, மூகாம்பிகைக்கு கிடைத்ததில் எனக்கு 50,000 கொடுப்பாள் என்றுகூட நினைக்கிறேன். வணங்குகிறேன்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 12, 2025 07:33

ராஜ்யசபா எம்.பி.,யுமான இளையராஜா … ஓ, ஆமால்லே? அவரே மறந்திருப்பார்


Naagarazan Ramaswamy
செப் 12, 2025 05:42

நீளாயுளுடன் இளையராஜா மற்றும் அவர் குடும்பம், தொண்டு சிறக்க வாழ்க வளமுடன். நன்றி


ஜெய்ஹிந்த்புரம்
செப் 12, 2025 02:00

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறி வித்தல்.


anandaraj periyasamy
செப் 11, 2025 18:24

தமிழ்நாட்டுக்காரன் கிட்ட பணத்தை சம்பாரிச்சி கன்னடக்காரன் கிட்ட குடுக்குறாரு,ஏன் தமிழ்நாட்டுல கோயில் இல்லையா ,இல்ல கஷ்ட படுறவன் இல்லையா ?...


RRR
செப் 11, 2025 19:08

தமிழ்நாட்டுக் கோவிலுக்கு குடுத்தா மறுநிமிஷமே அறங்கெட்ட கொள்ளையடிக்கும் துறை அந்த ஆபரணங்களையெல்லாம் திருடித் தின்னுடுவாங்கன்னு அவருக்குத் தெரியாதா...


Lucky Srinivasan
செப் 11, 2025 17:55

கன்னட இசையமைப்பாளர் ஜி கே வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றும்போது ஒரு சமயம் பெங்களூர் சென்றிருந்தார். அப்போது அவர் ஒரு இசையமைப்பாளர் ஆக கடுமையாக முயற்சி செய்து ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் மனம் நொந்து போய் இருந்தார். அப்போது அவரிடம் ஒருவர் கொல்லூர் மூகாம்பிகை அம்மனை தரிசனம் செய்து வேண்டிக் கொள்ளும்படி கூற, அவர் அங்கே சென்று தனக்கு அருள் புரிய மனமுருகி வேண்டிக் கொண்டார். பிறகு தான் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து வாழ்க்கையில் உயர்ந்தார். அது முதல் அவர் கொல்லூர் மூகாம்பிகை இன் பக்தரானார்.


Kumar AEE PALANI
செப் 11, 2025 17:44

God bless you


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை