உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பீர் குடித்த இளையராஜா ஆட்டம்: ரஜினி பேச்சுக்கு காங்., கண்டனம்

பீர் குடித்த இளையராஜா ஆட்டம்: ரஜினி பேச்சுக்கு காங்., கண்டனம்

சென்னை: நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா பேச்சுக்கு, தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.இசையமைப்பாளர் இளையராஜாவின், 50 ஆண்டு கால இசைப்பயணத்தை போற்றும் வகையில், அவருக்கு தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.விழாவில் ரஜினி பேசுகையில், ஜானி படத்தின் ரெக்கார்டிங்கின் போது, இளையராஜா அரை பாட்டில் பீர் அடித்து ஆட்டம் போட்டது, நடிகையர் குறித்த கிசுகிசுக்களை கேட்டது பற்றி கலகலப்பாக குறிப்பிட்டார். இதற்கு, தமிழக காங்., துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் அரசு விழாவில், மதுவுக்கு மிகப்பெரிய விளம்பரம் கொடுத்துள்ளனர். ஒரு மாநிலத்தின் முதல்வர், தனக்காக ஒரு விழா எடுக்கிறார்.அதில் பெருமையாக பேசுவதை விட்டுவிட்டு, இளையராஜா, 'சொல்லிடவா சொல்லிடவா' என கேட்பதும், 'கூறுங்கள் கூறுங்கள்' என ரஜினி சொல்வதும் கொடுமை. 'ரஜினி மைக்கை பிடித்து, இளையராஜாவின் மரியாதையை காற்றில் பறக்கவிட்டு விட்டார்.நானும், மகேந்திரனும் மது அருந்தினோம். அங்கு வந்த இளையராஜாவிடம், நீங்களும் போடுகிறீர்களா என கேட்டேன். அரை பாட்டில் பீர் குடித்த இளையராஜா, விடியற்காலை 3:00 மணி வரை, பெரிய அலம்பல் ஆட்டம் ஆடினார்.சினிமா நடிகையரின் கிசுகிசுக்களை பற்றி கேட்பார். அந்த பேச்சுகள் தான் அவருடைய பாட்டுகள் என ரஜினி கூறினார்.அவர்கள் இருவர் மீதும் மக்கள் வைத்திருந்த மரியாதையை அவர்களே தாழ்த்திக் கொண்டனர்.மேடை நாகரிகம் என ஒன்று இருக்கிறது என்பதை மறந்து, திரளாகக் கூடியிருந்த இடத்தில் இப்படி பேசுவது, சினிமா துறையில் உள்ளவர்கள் மீது மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 89 )

Velu Mandhimuthiriyar
செப் 21, 2025 21:34

பொதுத் தளத்தில் யோசித்து பேசவேண்டும், கைத்தட்டலுக்காக பேசக் கூடாது...


Ramalingam Shanmugam
செப் 17, 2025 16:15

இப்புடி தான் லூசுத்தனமா பெரிசுங்க பேசிவிடும் மன்னிச்சு விடுங்க கான் என்ன சொல்ல வாரான் பப்பு


Sriniv
செப் 16, 2025 23:30

Sir please remember that it was Raaja who started that topic. He said that Rajini came to his studio 2 days earlier and asked him if he could speak about that incident. What was the need for Raaja to introduce this point ? After that, Rajini wanted to say it and said it to the audience. The mistake is fully Raajas, because he ed that topic.


pakalavan
செப் 16, 2025 20:28

அப்படி பாத்தா, குஷ்பூ என்ற நடிகை, கல்யானத்துக்கு முன்னாடி பென்கள் உடளுறவு வச்சிக்கலாம் என்று சொன்னாலே அப்புரம் ஏன் காங்கிரஸ் கட்சில சேத்தீங்க ?


Padmasridharan
செப் 16, 2025 10:25

கண்டனத்துக்குரியதுதான் சாமி. சினிமாக்காரர்கள் குடிப்பது நாகரிகமென்று ஜெமினி கணேசன் மகள், நடிகர் நாகார்ஜூனா இதற்க்கு முன்பே பொது மக்களிடையில் பேசியிருக்கின்றனர். இப்பொழுது இவர். இவர்கள் கோடிகளை சம்பாதிக்கும் ஆட்கள். ஆனால் நூறு, ஆயிரம் என்று சம்பாதிக்கும் சாதாரண ஆட்கள் இதனை நல்வழியென்று நினைத்து ஒப்பிடுவர். அவங்களுக்கு ஏதானும் ஒண்ணு உடல் நிலை பாதிக்கப்பட்டால் தனியார் மருத்துவர்களிடம் செல்வர் ஆனால் சாதாரண மக்களுக்கு அரசு மருத்துவமனை தானே என்பதை மறப்பர். கள்ளச்சாராயம் குடித்து இறப்போருக்கும் இப்பொழுது இந்நாட்டு அரசு லட்சங்களை கொடுக்கின்றது. பள்ளியில் இலவச சாப்பாடு சாப்பிடறவங்க வேலை செஞ்சா கூட சம்பாதிக்க முடியாத அளவுக்கு .


visu
செப் 16, 2025 08:04

அவர் ஒன்றும் இன்று குடித்துவிட்டு ஆடவில்லை ஆரம்ப காலங்களில் செய்ததை சொல்கிறார்கள் தேவையற்ற ஒன்று என்றாலும் பழையதை வெளிப்படையாக சொல்லி தாழ்த்தி கொள்கின்றனர் வயதானால் ஏதாவது பேசி கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும் அப்ப இப்படி தேவையின்றி பேசி விடுகின்றனர் பொன்முடி பேசியதை விட இதெல்லாம் கேவலம் இல்லை


Venkatesan Ramasamay
செப் 15, 2025 18:06

நானும் ..பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்.. இங்கு பல பேர் பலவிதமா கருத்து போடுறாங்க.. அதனால் என்ன பிரயோஜனம் ..இந்த அரை கிறுக்கன் ...இன்னும் இரண்டு அல்லது ஒரு மாசத்துல அடுத்த படம் நடிக்கிறதுக்கு ரெடியாயிடுவான் .. 200 கோடி சம்பளம் வாங்குறவன் ...இதையெல்லாம் பத்தி கவலைப்படபோறானா.. வீணாப்போன ரசிகர்கள் இருக்கும்வரை இந்த நரி காட்டுல மழைதான் இவனை மாதிரியான ஆட்களையெல்லாம் அந்த ஆண்டவன்தான் தீராத வியாதியா கொடுத்து தண்டனை தருவான். இவனை வச்சும் டைரக்ட் பண்றங்களே ... அந்த இயக்குனருக்கு எங்க போச்சி புத்தி.. அதுசரி எல்லாம் காசுவாந்தா எல்லாம் பறந்து போகும்..


மாபாதகன்
செப் 18, 2025 16:01

வயித்தெரிச்சல் பிடித்தவர்களுக்கு ஜெலுசில் எல்லாம் மருந்தில்லை ??


Vasan
செப் 15, 2025 15:42

தமிழ்நாடு அரசு மற்ற இசையமைப்பரார்களை புறக்கணித்தது போல், ரஜினிகாந்தையும் புறக்கணிக்க வேண்டும். இல்லையேல் அவர் மீண்டும் துரைமுருகன் ஓல்ட் ஸ்டுடென்ட், இளையராஜா பீர் குடித்தார், அவர் பெப்சி குடித்தார் என்று கேவலப்படுத்துவார்.


Vasan
செப் 15, 2025 15:30

Is there any section under which Rajnikanth can be arrested for his hatred speech against Ilayaraja Sir, in a Tamilnadu Government function? At least one month in jail. Then only he will come to terms. Last year he spoke sarically about our beloved leader Thiru.Duraimurugan, who has several decades of political experience with Arignar Anna, Kamarajar, MGR and Kalignar Karunanidhi.


Vijay D Ratnam
செப் 15, 2025 13:58

இளையராஜா ஒரு சாமியார் போல யோகி போன்ற தவ வாழ்க்கையை மேற்கொண்டு இருக்கிறார். சென்ற வாரம் கூட 5 கோடி ரூபாய் பெறுமானமுள்ள நன்கொடையை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வழங்கி இருக்கிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கும் அவர் ஆற்றிய தொண்டு வழங்கிய நன்கொடைகள் ஏராளம். ஏட்டளவில் இருந்த திருவாசகம், ஆண்டாள் பாசுரம் இன்று உலகளவில் இசைவடிவில் போய் சேர்ந்திருக்கிறது. பகவத் கீதையை இசைவடிவில் பல மொழிகளில் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். அப்படி பட்ட ஒரு மாமனிதரை, ஒரு யோகியை நடிகர் ரஜினிகாந்த், திராவிட மாடல் அரசு நடத்திய விழா மேடையில் வைத்து அவமானப்படுத்தி இருக்கிறார். கேவலப்படுத்தி இருக்கிறார். இது பச்சை அயோக்கியத்தனம். இளையராஜாவின் நற்பெயருக்கு புகழுக்கு களங்கம் விளைவித்து இருக்கிறார் ரஜினிகாந்த். இது துரோகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை