உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்கம்: தமிழக ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் பங்கேற்பு

ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்கம்: தமிழக ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பகவத் ராமானுஜரின் பீடங்களை ஒருங்கிணைத்து, தென்னாச் சாரியார் சம்பிரதாய சபை நேற்று சென்னையில் துவக்கப்பட்டது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஜீயர்கள், ஆச்சாரியா புருஷர்கள் ஒரே மேடையில் பங்கேற்றனர். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர், வானமாமலை, திருக்கோஷ்டியூர் நம்பி, திருக்கோவிலுார், ஆழ்வார்திருநகரி பிள்ளான், தொட்டாசார், எம்பார், ஆளவந்தார் உள்ளிட்ட 74 பீடங்களை நியமித்தார். அந்த சிம்மாசனாதி பதிகளின் வம்சத்தில், பல பீடங்களில் ஜீயராகவும், பல பீடங்களில் ஆச்சாரிய புருஷர்களாகவும் உள்ளனர். ஆலோசனை கூட்டம் இந்த 74 பீடங்கள், துவங்கிய காலகட்டத்தில் இருந்தே ஒருங்கிணைக்கப்படாமல் இருந்தன. பல்வேறு காலகட்டங்களில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல ஜீயர்கள் ஈடுபட்டனர். அவர்களின் ஆசிர்வாதத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்கை நாராயணனும் ஈடுபட்டார். ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும் புதுார், காஞ்சிபுரம், ஆழ்வார்திருநகரி போன்ற பல இடங்களில் இதற்காக ஆச்சாரியார்களின் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் வழிநடத்தலின்படி, தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ஆச்சாரியா புருஷர்கள், ஜீயர்களுடன் கலந்தாலோசித்தனர். பலரின் பெருமுயற்சியால், தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. சிறப்பு மலர் நேற்று காலை 8:00 மணிக்கு டாக்டர் வெங்கடேஷின் உபன்யாசத்துடன் விழா துவங்கியது. ஒரே மேடையில் வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள், காஞ்சி பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸாச்சாரிய சுவாமிகள், திருமலை அநந்தாண்பிள்ளை அக்கா ரக்கனி ராமானுஜாசாரியார் சுவாமிகள்... ஸ்ரீபெரும்புதுார் ஆசூரி அரவிந்தாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீரங்கம் கோவில் கந்தாடை சுத்தஸத்வம் திருவாழி அண்ணன் சிறுபுலியூர் சுவாமிகள், இளையவில்லி கண்ணன் சுவாமி உட்பட 50க்கும் மேற்பட்ட ஆச்சாரியார்களும், ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் உட்பட 13க்கும் மேற்பட்ட ஜீயர்களும் பங்கேற்றனர். விழா சிறப்பு மலரை, திருக்கோவிலுார் எம்பெருமானார் ஜீயர் வெளியிட, திருவெள்ளறை மேலத்திருமாளிகை அம்மாள் ஸ்ரீ விஷ்ணுசித்தன் சுவாமிகள் பெற்றுக் கொண்டார். ஆசிர்வாதம் சிறப்பு மலரில், திருமாளிகை எனும் ஒவ்வொரு பீடத்தை பற்றிய குறிப்பு, யார் தற்போதைய ஜீயர், ஆச்சாரியா புருஷர்கள் தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்களுடன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, விழாவில் பங்கேற்ற 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, ஜீயர்களும், ஆச்சாரியா புருஷர்களும் அக்ஷதை ஆசிர்வாதம் செய்தனர். பிற்பகல், ஜீயர்கள் மற்றும் ஆச்சாரியா புருஷர்கள் ஒருங்கிணைந்து, தென்னாச்சாரியார் சம்பிரதாய சபையை வழிநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் அமெரிக்கை நாராயணன் மற்றும் விழாக் குழுவினர்களான கல்யாணி நாராயணன், மல்லி சதீஷ்குமார், சவுரிராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

theruvasagan
நவ 03, 2025 15:43

நல்ல முயற்சி. எல்லா பிரிவுகளும் ஒருங்கிணைந்து இந்து மதத்தை தழைத்தோங்கச்.செய்ய வேண்டும்.


jss
நவ 03, 2025 15:40

அமெரிக்க நாராயணன் ஏன் இதற்க்கு ராகுல்கானை கூப்புடவில்லை.


அப்பாவி
நவ 03, 2025 15:38

சமஸ்கிருதம் உண்டா?


vivek
நவ 03, 2025 16:47

உனக்கு டாஸ்மாக் உண்டு ஹைன்


vbs manian
நவ 03, 2025 11:52

இந்த ஒற்றுமை முயற்சி தொடர வேண்டும். சைவமும் வைணவமும் கூட இணைந்து செயல் படவேண்டும். பக்தி நன்னெறி நேர்மை சமுதாயத்தில் ஓங்கும். ஹிந்து ஒற்றுமை மேலும் துளிர் விட்டு ஆலமரமாய் வளர வேண்டும்.


Ramanujadasan
நவ 03, 2025 11:29

பகவான் என்றால் அது நாராயணனே, ஆழ்வார் என்றால் அது நம்மாழவாரே, ஆச்சார்யர் என்றால் அது ராமனுஜரே, வைஷ்ணவ சம்ப்ரதாயம் என்றால் அது தென்னாசார்ய சம்ப்ரதாயம் ஒன்றே, வேத மார்க்கம் என்றால் அது ஸ்ரீ வைஷ்ண ஸம்ப்ரதாயம் ஒன்றே


jss
நவ 03, 2025 15:48

அப்போது வடகலை சம்பரதாயம் வைணவம் இல்லையா? தேசிகர் வைணவர் இல்லையா? எப்போது சைவம் வைணவம், மாத்வம் மூன்றும் ஒன்றாக சேருகிறதோ அப்போதுதன் உண்மையான ஒற்றுமை ஏற்ப்படும். மூன்றுமே பகவானை அடையும் வழியையும் முக்தி அடையும் வழியையும் தான் கூறுகின்றன.


Ramanujadasan
நவ 04, 2025 15:38

கங்கை நதியில் இருந்து பிரிந்து ஓடும் சில சிற்றாறுகள் கங்கை எனப்படுவதில்லை . அது போல ஸ்ரீ வைணவத்தில் இருந்து பிரிந்துள்ள சில பிரிவுகள் சில வேற்றுமைகள் காரணமாக ஸ்ரீ வைஷ்ணவம் எனப்படுவதில்லை . நீங்கள் சொன்ன மாதிரி சைவம் , மாத்வம் இரண்டும் வைணவம் ஆகாது. சைவம் வேத மார்க்கமே இல்லை . அதன் மூலம் திரு முறைகள் தாம் திரு மறைகள் அல்ல . எனவே தான் அட்வைதம் வேறு சைவம் வேறு . அத்வைதம் சில மாறுபட்ட வேத கருத்துக்கள் உடையது . சைவத்தில் வேதமே கிடையாது . அது முழுதும் உண்மைக்கு புறம்பு . மாத்வம் ஸ்ரீ வைணவத்தில் பெரும்பாலும் ஒன்று பட்டு இருந்தாலும் , வேதத்தை அதன் உண்மையான அர்த்தத்தை விளக்குவதில்லை வைணவத்தை போல .


Ramanujadasan
நவ 03, 2025 11:22

மிக நன்று , ஆச்சார்யர்களையும் ஸ்ரீ வைஷ்ணவ அடியார்களையும் ஒரே இடத்தில காண என்ன பாக்யம் செய்தோமோ ? மிக சிறப்பு.


V RAMASWAMY
நவ 03, 2025 10:40

ஒருங்கிணையா பல அமைப்புகள் ஒன்று சேர்ந்த இந்த வைணவ சம்பிரதாய சபை வரவேற்கத்தக்கது, வாழ்த்துக்கள். இதே மாதிரி பல இந்து மத மதங்களும் ஒன்றிணைந்து ஒரு சபை அமைய இறையருளவி வேண்டுகிறோம். அதற்கு எல்லா சங்கர மட ஆச்சாரியார்களும், மற்ற இந்து மத மடங்களும் அமைப்புகளும் ஒன்றிணையவேண்டும்.


Srinivasan Narasimhan
நவ 03, 2025 07:34

ராமானுஜரின் சீர்திருத்தங்களை பரப்பாமல் கடைபிடிக்காமல் அவரை ஒரு வகுப்போடு அடையாளம் செய்வது துரதிரிக்ஷ்டம்


Ramanujadasan
நவ 03, 2025 11:25

நல்லது நடந்தால் அதை வரவேற்க கூட வேண்டாம், குறைந்தது குறை சொல்லாமல் இருக்கலாமே? அது சரி நீங்கள் சொல்லுவதை நீங்கள் செய்கிறீர்களா? அல்லது ஊருக்கு உபதேசமா?


Indhuindian
நவ 03, 2025 06:56

சங்கம் துவங்க ஆரம்பகட்டமோ


vivek
நவ 03, 2025 08:29

உன்னை சேர்த்துக்க மாட்டாங்க


Modisha
நவ 03, 2025 04:51

ஹ்ம்ம், ஒரு காலத்தில் நெல்லை , தூத்துக்குடியில் சைவம் , வைணவம் தழைத்த்தோங்கி இருந்தது . இப்போது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை