உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வாக்காளர் பெயர் சேர்த்தல் கட்சிகளின் ஒப்புதல் அவசியமா?

 வாக்காளர் பெயர் சேர்த்தல் கட்சிகளின் ஒப்புதல் அவசியமா?

சென்னை: தற்காலிக முகவரி மாற்றம் ஒரே தொகுதிக்குள் இருந்தால், அரசியல்வாதிகளின் ஒப்புதலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடந்து வருகிறது. இதற்காக, வீடு வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 80 சதவீதத்திற்கு மேல், கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கணக்கீட்டு படிவத்தை ஏற்கும் ஓட்டுச்சாவடி நிலைஅலுவலர்களுக்கு, மறைமுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, தற்காலிகமாக ஒரே தொகுதிக்குள் வாக்காளர் இடம் மாறி இருந்தால், அவரது பெயரை, அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் கட்சிக்காரர்கள் ஒப்புதலில் சேர்க்கலாம். அதேபோல, வேறு தொகுதியில் இருந்தாலும், இந்த நடைமுறையை பின்பற்றி, வாக்காளர் பட்டியலில் அவரது பெயரை சேர்த்து கொள்ளலாம். நிரந்தரமாக இடம் மாறி இருந்தால், அரசியல் கட்சியின் ஒப்புதலின்படி, அத்தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கலாம். குறிப்பாக, உள்ளூர் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:

அரசியல் கட்சிகளின் ஒப்புதல்படி வாக்காளர் பெயர், நீக்கம், சேர்த்தல் என்பது கிடையாது. அதேநேரம், அதிகாரிகளை விட, அந்தந்த உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு தான், வாக்காளர்கள் குறித்த விபரம் முழுமையாக தெரியும். எனவே தான், அவர்கள்ஆதரவுடன் ஓட்டுச்சாவடிநிலை அலுவலர்கள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு கட்சி சொல்வதை தான் கேட்க வேண்டியதில்லை. அனைத்து கட்சிகளின் ஒப்புதலின்படி, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sundar R
நவ 14, 2025 10:20

SIR-ஐ தமிழக மக்கள் எதிர்க்கவில்லை. திமுக தான் எதிர்க்கிறது. SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த திமுக தன்னுடைய கட்சிப் பணத்தை தான் செலவிட வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தை அல்ல. எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மீடியாக்கள், தமிழக மக்களின் வரிப்பணத்தை செலவிடும் திமுகவை கடுமையாக கண்டித்து, இதுபோன்ற தவறுகள் தமிழகத்தில் நடைபெறா வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும்.


sankaranarayanan
நவ 14, 2025 09:50

சாத்திரத்து சோத்துக்கு தாத்தையங்கார் உத்திரவு எதற்கய்யா வேண்டும் தேர்தல் அலுவலக வேலையில் கட்சிகளுக்கு என்ன வேலை கட்சிகளின் தலையீடு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் கொள்ளுப்பாட்டறையில் ஈக்கு என்ன வேலை என்றாற்போலத்தானேய்யா


GMM
நவ 14, 2025 07:40

முன்பு ஒரு முறை பட்டா விவரம் ஒரு ஊரில் சரி பார்க்க வருவாய் அதிகாரிகள் உள்ளூர் மூத்த குடிமக்களிடம் விவரம் சேகரித்தார்கள். அப்போது கட்சியினர் யாரும் இல்லை. கட்சி தன் ஆதரவு வாக்காளர்கள் அதிகம் அறியும். பொது மக்கள் அதிகம் அறிய மாட்டார்கள். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் , திருத்தம் போன்றவை ஆதாரம் அடிப்படையில் இருக்க வேண்டும். அரசியல் கட்சி, சாதி, மத, இன சங்கம் தலையிட்டால், குழப்பம் தான் மிச்சம்.


oviya vijay
நவ 14, 2025 07:32

ஓட்டு திருட்டு போய் ஓட்டு கொள்ளை...அரசியல் வியாதிகள் கள்ள ஓட்டு சேர்ப்பதற்காக இந்த sir...


Raj
நவ 14, 2025 06:46

கட்சிகளின் ஒப்புதல் வேண்டுமென்றால் அதற்கு அரிசி மூட்டை கோடௌன்லே இருந்திருக்கலாமே எதற்கு சார்


Subramanian
நவ 14, 2025 06:30

They are giving forms only for those who are EPIC cards already. Those who have shifted from other states are ignored. They should add new voters also. What is the point in scrutinising only the existing voters


D.Ambujavalli
நவ 14, 2025 06:14

உள்ளூர் நிலவரம் என்றால், 200கும் இலவசத்துக்கும் இணங்காத நடுநிலை வாக்காளர்களை தவிர்க்க ஆலோசனை வழங்கப்படும் சாதி சங்கங்கள், மத தலைவர்கள் என்று பழைய குருடி நிலைதான் மிஞ்சும்.


Kanakala Subbudu
நவ 14, 2025 05:54

கட்சிக்காரர்கள் தலையீடு இருந்தால் உருப்படாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை