உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?

 கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?

திருப்பரங்குன்றம் தீபம் குறித்த வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த விசாரணையின்போது, சில வழக்கறிஞர்கள், 'முருகனுக்கு இரண்டு மனைவியர் இருக்கலாம். ஆனால் இரண்டு இடங்களில் தீபம் ஏற்ற முடியாது' என வாதங்களை முன்வைத்தனர். அதன் தத்துவத்தை அறியாமல், நீதிமன்றத்தில் பேசுகின்றனர். தீபத்துாணை சர்வே கல் என்று கூறினர். பின், சமணர்கள் கால துாண் என்று கூறுகின்றனர். சமணர்களின் வாழ்க்கை முறையை, முறையாக கற்காமல், கற்பனை கதைகளை நீதிமன்றத்தில் வாதங்களாக முன்வைத்துள்ளனர். இந்த வழக்கில், ஹிந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் நியமித்துள்ள வழக்கறிஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவிலுக்கு எதிராக வாதாட, அரசுப் பணத்தை இஷ்டத்துக்கும் செலவிடுவதா? முருக பக்தர்களும், மக்களும் இதற்கு தகுந்த பதிலடி கொடுப்பர். -ராஜேஷ் ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Gajageswari
டிச 19, 2025 08:47

லட்ச கணக்கில் அதிகாரிகள் அவர்களுக்கு சம்பளம் லட்ச கணக்கில். அவர்களுக்கு எதற்கு வழக்குரைஞர்கள். தேவைப்பட்டால் சொந்த பணத்தில் வைத்து கொள்ளட்டும்


Rajesh Krishna
டிச 18, 2025 10:10

இந்து மத விரோத அரசு என்பது இந்த மக்கள் அறிய வேண்டும்


visu
டிச 17, 2025 16:22

வக்ப் போல ஹிந்து சமய துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் அல்லது அறங்காவலர் மூலம் நடத்தப்படவேண்டும் அரசு கண்காணிப்பு மட்டும் செய்யவேண்டும்


Ramesh Sargam
டிச 17, 2025 11:57

காபிர்களின், அதாவது முஸ்லிம்கள் அல்லாதவர்களின் வரிப்பணத்தில், முஸ்லிம்களின் வாக்குகளுக்காக திருட்டு திமுக அரசு அவர்களுக்கு ஹஜ் பயணியர்கள் தங்க கட்டும் கட்டிடத்தில் மானமுள்ள இஸ்லாமியர்கள் அங்கு தங்கினால், அவர்கள் ஹஜ் பயணம் புனிதமற்றது ஆகி விடும். அவர்களின் கடவுளே அவர்களை மன்னிக்கமாட்டார். தமிழகத்தில் மானம், மரியாதை உள்ள முஸ்லிம்கள் உள்ளனரா...?


வெங்கடேசன்
டிச 17, 2025 11:38

இந்திய அளவில் இந்து சமய அறநலத்துறை ஏற்பட்டுத்தபட்டு நமது சமுதாய பெரியோர்களால் நிர்வகிக்க வேண்டும்.


M S RAGHUNATHAN
டிச 17, 2025 10:09

இதை விட special news கீழே தருகிறேன். சிதம்பரம் சபாநாயகர் கோயில் வழக்கில் தோற்றுப் போன்ற உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வடக்கன் வக்கீல்களுக்கு fees கபாலீஸ்வரர் கோயில் நிதி, அறநிலையத்துறை Koil common Good fund இல் இருந்து தரப் பட்டு இருக்கிறது. கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து ரூபாய் 5 லக்ஷம் எடுக்கப் பட்டிருப்பதாக கேள்வி. இது ஹிந்து அறநிலையத் துறை சட்டப் படி சட்ட விரோதமானது. RTI இல் கேட்டால் பதில் வருவதில்லை. உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஏன் சுயமாகவே வழக்கு பதிவு செய்து விசாரிக்கக் கூடாது. ஹிந்துக்கள் வரிப்பணத்தில் ஹஜ் இல்லம் கட்டப் போகிறார்கள். மானமுள்ள இஸ்லாமியர்கள் அங்கு தங்கினால், அவர்கள் ஹஜ் பயணம் புனிதமற்றது ஆகி விடும். ஏனெனில் காஃபிர்களின் பணத்தில் கட்டப் பட்டது. இந்த அரசாங்கம் மத சார்பற்றத்தாம். வெட்கக்கேடு.


Ramesh Sargam
டிச 17, 2025 11:53

அருமையான கருத்து. வாழ்த்துக்கள்.


VENKATASUBRAMANIAN
டிச 17, 2025 08:17

உன் கையை எடுத்து கண்ணில் குத்தும் திமுக அரசு. அட்டூழியம். மக்கள் புரிந்து கொண்டால் சரி


நிக்கோல்தாம்சன்
டிச 17, 2025 08:03

இவ்வளவு நக்கல் நையாண்டி என்று ஹிந்து மதத்தை அவர்கள் கீழ்த்தரமாக நடத்தும் திமிர் உங்களுள் ஒற்றுமை இல்லாமையால் தான் வந்துள்ளது என்பது கூட உணரமுடியா டூங்குமூஞ்சி மதமாகி விட்டது தான் அவல நிலை


சமீபத்திய செய்தி