உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தி.மு.க., அரசு தடுப்பது வேதனை: பிரகாஷ் காரத் அதிருப்தி

தொழிற்சங்கத்தை பதிவு செய்ய தி.மு.க., அரசு தடுப்பது வேதனை: பிரகாஷ் காரத் அதிருப்தி

விழுப்புரம்: தமிழகத்தில் தொழிலாளர்கள் சங்கம் வைத்து பதிவு செய்வதை, தி.மு.க., அரசு மறுப்பது வேதனையாக உள்ளதாக பிரகாஷ் காரத் தெரிவித்தார்.விழுப்புரத்தில் நேற்று துவங்கிய மாநில மாநட்டில் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியதாவது: நாட்டில் இந்துத்துவா, வகுப்புவாத சித்தாந்தத்தை பதிவு செய்யும் நோக்கமாகவே பா.ஜ., வினர் செயல்படுகிறார்கள். மத்திய அரசும், வகுப்புவாத, மதவெறி கொண்ட நடவடிக்கையில் உள்ளது. மத அடிப்படையில் மக்களை பிரித்து, மதவெறி அரசியலை செய்யும் மத்திய பா.ஜ., அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால், சமத்துவமில்லாத, பொருளாதரா ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது. அம்பானி, அதானி, டாடா, பிர்லா, குழுமங்களுக்கு ஆதாயமாக மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ., வை தனிமைபடுத்த வேண்டும், அதனை தோற்கடிக்கவே மா.கம்யூ., கட்சி, கூட்டணியாக இணைந்து செயல்படுகிறது.தமிழகத்தில் காலுன்ற பா.ஜ., தீவிரமாக செயல்படுகிறது. நம் இந்தியா கூட்டணி பலமாக இருப்பதால், அவர்களால் நுழைய முடியாது.இந்து, முஸ்லிம்கள் என மத அடிப்படையில் அரசியலை நகர்த்துகிறார்கள். அதனால் தான் உத்தரபிரதேசத்தில் பா.ஜ., பின்னடைவை சந்தித்தது. நாம், மதச்சார்பற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.தமிழகத்தில் சாம்சங் நிறுவன தொழிலாளிகள், அடிப்படை உரிமைக்காக போராடினர். முத்திரை பதித்த போராட்டம்.தொழிலாளர் சங்கம் வைத்து பதிவு செய்ய தி.மு.க., அரசு மறுத்து வருவது வேதனையாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

CHELLAKRISHNAN S
ஜன 04, 2025 13:48

already it is no more in India except in Kerala. there also it will disappear shortly.


seshadri
ஜன 04, 2025 10:54

கம்யூனிஸ்ட் அவர்களின் சித்தாந்தம் என்ன என்றல் ஏழையை பணக்காரன் ஆக்குவது என்பது கிடையாது. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து கம்பெனி வைத்து நடத்தினால் அவனை எதாவது குறை கூறி அல்லது சங்கம் ஆரம்பித்து அந்த பணக்காரனையும் ஏழையாக்கி இவர்கள் மாதிரி உண்டியல் குலுக்கி ஆக்கி viduvarkal.


Velayutham rajeswaran
ஜன 04, 2025 09:42

Foxconn கம்பெனியை ஒரு வழி பண்ணியது போதாதா ஊரைக் கெடுத்து வயிறு வளர்ப்பது இதெல்லாம் ஒரு பிழைப்பு


கல்யாணராமன் சு.
ஜன 04, 2025 08:34

கம்மிகளின் சித்தாந்தம் ஒன்றே ஒன்றுதான் . .... தாங்கள் மட்டுமே சரி, மற்றவர்கள் அனைவரும் தவறானவர்கள் ... பதவிக்கு நேரடியாக ஆசைப்பட மாட்டோம் , .... ஆனால் பின்னணியில் இருந்து இயக்க ஆசைப்படுவோம் ... நாட்டை பற்றி கவலைப் படமாட்டோம் ... வெளிநாட்டு கைக்கூலிகளாகத்தான் இருப்போம் . ... கார்ப்பரேட்டை திட்டுவோம் , அனால் அவர்களுக்குத்தான் எங்களுடைய இடத்தை வாடகைக்கு கொடுப்போம் . ... பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்போம் . ... ஆனால் நாங்கள் சிறுபான்மையினர் ஆதரவு என்ற போர்வையில் , மற்ற மதங்களுக்கு ஆதரவு கொடுப்போம் . ... மதவாதத்தை வேறு வழியில் ஆதரிப்போம் . ..... only reason for the demise of communism th world over is this inconsistent stance ... end of communism in India is not too far off and i am looking forward to that golden day


Bala
ஜன 04, 2025 08:22

கிறிஸ்த்துவர்களுக்கும், இஸ்லாமிய ஊர்களுக்கும் ஜால்ரா போட்டால் மட்டும் அத மதச்சார்பின்மையா? என்னடா ஒங்க ஓட்டு வங்கி ஞாயம்.


கோமாளி
ஜன 04, 2025 08:01

கரடியே காரி துப்பிவிட்டதா?? இன்னொரு போஸ்க்கோன் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்


சம்பர
ஜன 04, 2025 07:04

கைநீட்டி காசு வாங்குணர அடங்கி தான் போகனும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை