உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆஜராகாவிட்டால் ஆதரவாளருக்கு ஜெயில்; எம்.பி., கதிர் ஆனந்தை வறுத்தெடுத்த நீதிபதி

ஆஜராகாவிட்டால் ஆதரவாளருக்கு ஜெயில்; எம்.பி., கதிர் ஆனந்தை வறுத்தெடுத்த நீதிபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலுார்: தேர்தல் பண பட்டுவாடா தொடர்பான வழக்கில், கோர்ட்டில் ஆஜரான வேலுார் தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்திடம், 'உங்கள் ஆதரவாளர்கள் இன்று மாலைக்குள் ஆஜராகாவிட்டால், வாரன்ட் பிறப்பித்து சிறையில் அடைக்க நேரிடும்' என நீதிபதி கண்டித்தார்.எச்சரிக்கையை மீறி கோர்ட்டில் ஆஜராகாத எம்.பி.,யின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, வேலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளரான கதிர் ஆனந்த், வாக்காளர் களுக்கு பணம் பட்டுவாடா செய்ய உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, அதிகாரிகள் சோதனை நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hhhw98bv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0காட்பாடியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமென்ட் கிடங்கில் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கோடி ரூபாய் மற்றும் வாக்காளர் பட்டியல் விபரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர் .இதனால், அந்த தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு, பின்னர் நடத்தப்பட்டது. கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். இது தொடர்பாக, கதிர் ஆனந்த் எம்.பி.,யின் ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகிய மூவர் மீதும் காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு, வேலுார் நீதித்துறை நடுவர் முதலாவது நீதிமன்றத்தில் நடக்கிறது. கதிர் ஆனந்த் நேற்று காலை கோர்ட்டில் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி, 'இந்த வழக்கில் இரண்டு மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் இன்று மாலை 4:00 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்; இல்லையெனில், அவர்களை பிடித்து சிறையில் அடைக்கும் சூழல் உருவா கும்' என நீதிபதி கண்டித்தார் .இதனால், நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து, நேற்று மாலை 4:00 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கதிர் ஆனந்த் மற்றும் தாமோதரன் ஆகியோர் ஆஜராகினர்; பூஞ்சோலை சீனிவாசன் ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவ., 17க்கு ஒத்தி வைத்தார்.

வந்தார்; ஆஜராகாமல் சென்றார் கதிர் ஆனந்த்

ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன், வேலுார் நீதிமன்றத்திற்கு தனி காரில் வந்துள்ளார். முகக் கவசம் அணிந்தபடி வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல், தன் காரில் வேகமாக திரும்பி சென்றுள்ளார். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Nagarajan D
நவ 14, 2025 18:00

2019 வழக்குக்கே இன்னும் தீர்ப்பு வரல இன்னும் எத்தனை வாய்த்த கொடுப்பீங்க ஆப்பீசர்... இவனுங்க ஆஜராகவில்லை என்றால் சுட்டு பிடிக்க உத்தரவு போடுங்க... தான வருவானுங்க


naranam
நவ 14, 2025 14:42

ஹும் 2019 இல் நடந்த ஊழலுக்கு இப்போதுதான் நடவடிக்கையா! அடுத்த தேர்தலே வந்து விட்டது!


Barakat Ali
நவ 14, 2025 10:53

இதற்கும் முட்டுக்கொடுக்கும் ஆதரவாளர்கள் ......


kjpkh
நவ 14, 2025 10:51

எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சிங்க.எங்களுக்கு கோர்ட் கட்டணம் இதெல்லாம் சர்வ சாதாரணமுங்க.


Saran
நவ 14, 2025 10:48

Our politicians remain in the field with the help of rowdies and advocates. We must choose a person who don’t have the both.


மொட்டை தாசன்...
நவ 14, 2025 10:21

ஆறுவருடம் முடிந்தும் இந்த வழக்கு முடிந்தபாடில்லை . இத்துப்போன இந்த சட்டமும் நடைமுறையும் மாறாதவரை இப்படிப்பட்ட குற்றங்கள் தொடரத்தான் செய்யும் . நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பது நீதிமன்றமும் அதன் நடைமுறையும் தான் .


ரஹிம் பாய், வேலூர்
நவ 14, 2025 10:05

இவனுங்க தான் யோக்கியன்...திருட்டை பற்றி வகுப்பு எடுக்கும் இழி பிறவிகள்


sankaranarayanan
நவ 14, 2025 09:46

இவர்களிடமிருந்து இன்றைய தேதிவரை வட்டியுடன் பதினொன்று கோடிக்கு பணம் வசூல் செய்யுங்கள் அது தான் நீதி மன்றத்தின் நியாயம் இல்லையேல் அது அநியாயம் அவர்களையும் உள்ளே தள்ளுங்கள் பதைவையைம் பரியுங்கள் அடுத்தது பத்து ஆண்டுகளுக்கு அவர்கள் எந்த தேர்தலிலும் நிற்க அருகதை அற்றவர்கள்கள் என்றே உத்திரவு இடுங்கள் அதுதா நியாயம் நீதி மன்றத்தின் வேலை


R. SUKUMAR CHEZHIAN
நவ 14, 2025 09:26

இந்த திராவிட கும்பல்கள் ஈனமானம் சூடு சொரனை தன்மானம் அற்றவர்கள் எவ்வளவு திட்டினாலும் வறுத்தெடுத்தாலும் துடைத்து போட்டு விட்டு போக்கோண்டே இருப்பார்கள். சட்டத்தை பற்றியோ தமிழகத்தை பற்றியோ இவர்களுக்கு கவலை இல்லை. தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும்.


தியாகு
நவ 14, 2025 09:23

ஊழல்கள் மூலம் சொத்து சேர்த்தாலும் இப்படி அழகாக சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்க கட்டுமர திருட்டு திமுகவினரால் மட்டும்தான் முடியும். இதையெல்லாம் பார்த்து சகித்துக்கொண்டு இருக்கவேண்டுமென்பது டுமிழர்களின் தலையெழுத்து.