பிளஸ் 1 தேர்வில் கருணை மதிப்பெண்
சென்னை:'பிளஸ் 1 கணினி அறிவியல் தேர்வில், 24வது கேள்விக்கு பதில் எழுதிய மாணவர்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களி, விடைத்தாள்களை திருத்தும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில், பிளஸ் 1 கணினி அறிவியல் பாட வினாத்தாளில் இடம் பெற்ற, 24வது கேள்வி தவறானது என, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று தெரிவித்தனர். இதை ஏற்ற தேர்வுத்துறை, அந்த கேள்விக்கு பதில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும், கருணை அடிப்படையில் 2 மதிப்பெண் வழங்க அனுமதி அளித்தது.