உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர் விபரம் பதிவேற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு 11ம் தேதி கடைசி நாள்

மாணவர் விபரம் பதிவேற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு 11ம் தேதி கடைசி நாள்

சென்னை:பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் பெயர் பட்டியலை வழங்க, வரும் 11ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் விபரங்களை, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பதிவேற்றும்படி, இணைப்பு பள்ளி களுக்கு இதுவரை எட்டு சுற்றறிக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன. கடைசி வாய்ப்பாக நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களின் பண்டிகை விடுமுறையால், பல பள்ளிகள் இன்னும் மாணவர்களின் பெயர் பட்டியலை பதிவேற்றவில்லை. இதையடுத்து, வரும் 8ம் தேதிக்குள், ரசீது வழியாக மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்தலாம்; மற்ற பரிவர்த்தனைகளின் வாயிலாக, வரும் 11ம் தேதி வரை தேர்வு கட்டணம் செலுத்தலாம். இது, இணைப்பு பள்ளிகளுக்கான கடைசி வாய்ப்பு. அதன்பின், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் பட்டியலை பதிவேற்றவும், பணம் செலுத்தவும் உள்ள வசதி முடக்கப்படும் என சி.பி.எஸ்.இ., தெரிவித்து உ ள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை