உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமர்சனங்களை எதிர்கொள்வோம்; அவதூறுகளைப் புறம் தள்ளுவோம்; சொல்கிறார் திருமா!

விமர்சனங்களை எதிர்கொள்வோம்; அவதூறுகளைப் புறம் தள்ளுவோம்; சொல்கிறார் திருமா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்வோம், ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம் தள்ளுவோம் என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.அவரது அறிக்கை: களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அதன்படியே கருத்தியல் தளங்களிலும் செயற்பாட்டுக் களங்களிலும் தொடர்ந்து மக்களோடு நின்று பாடாற்றிவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. விமர்சனங்கள் எவ்வாறாயினும் அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் பொறுமையையும் பின்னர் அவற்றினடிப்படையில் சுய விமர்சனம் செய்துகொள்கிற துணிவையும் பெறுவதுதான் வெற்றிகரமான அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் முற்போக்கான வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும்.

விமர்சனங்கள்

அப்படியே நாம், நம் மீதான விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அவை நேர்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இருந்தால், அவற்றிலிருந்து நம்மை நாமே சுய விமர்சனங்களுக்கு உட்படுத்திக் கொள்வதை நடைமுறையாகக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கேற்ப தேவையான மாற்றங்களையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், நம்மைப் பற்றிய விமர்சனங்கள் எத்தகையவையாக உள்ளன? அவை, பெரும்பாலும் திட்டமிட்ட பொய்யுரைகளாகவும் ஆதாரமற்ற அவதூறுகளாகவுமே அள்ளி இறைக்கப்படுகின்றன. நமக்கு எதிரானவர்கள் விமர்சனங்கள் என்னும் பெயரால் மிகவும் அப்பட்டமான அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

விமர்சனம் vs அவதூறு

விமர்சனம் என்பது வேறு! அவதூறு என்பது வேறு! விமர்சனம் என்பது ஒருவரின் அல்லது ஒரு இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் களப்பணிகள் ஆகியவற்றில் காணும் நிறை, குறைகளை மதிப்பீடு செய்வதாகும். குறைபாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் நிறைகளையும் வரவேற்றுப் பாராட்டுவதும்தான் விமர்சனமாகும். ஆனால், அவ்வாறின்றி வாய்க்கு வந்தபடி வன்மத்தைக் கக்குவது விமர்சனமல்ல; அவதூறாகும்! நம்மை விமர்சிப்பவர்களில் இருவகை உண்டு. நம் மீது நம்பிக்கையும், நமது வளர்ச்சியில் அக்கறையும் கொண்டவர்கள் ஒருவகை.நம்மை ஏற்க மனமில்லாத, நம் வளர்ச்சியை முற்றிலும் விரும்பாத, நம்மை வீழ்த்தி மகிழ்ந்தாட காத்திருக்கும் சதிகாரர்கள் இன்னொரு வகை.

நீதி, நேர்மை

நாகரிகம் என்பது அவர்கள் அறியாத ஒன்று. அண்டப் புளுகுகளே அவர்களுக்கான தொழில் முதலீடு. நீதி, நேர்மை போன்ற அறம்சார் பண்புகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பிருக்காது. அவதூறு பரப்புதலே அவர்களின் சாதனைகள். அவர்கள் அமைப்புசாரா உதிரிகள். ஏதேனும் அமைப்பைச் சார்ந்திருந்தாலும் அவ்வமைப்புக்கு எவ்வகையிலும் கட்டுப்படாத தான்தோன்றிகள். அவர்கள் தனிநபராயினும் அல்லது ஓர் அமைப்பைச் சார்ந்தவராயினும் அவர்களிடம் கருத்தியல் தெளிவில்லையேல்; களமாடும் திறமில்லையேல்; அவர்களால் எவரோடும் எதனோடும் இணைந்தோ இணங்கியோ இயங்கிட இயலாது.

நமது எதிரிகள்?

விமர்சனங்களை நாம் புறம்தள்ள இயலாது. அவர்கள் கொள்கை அடிப்படையில் நம் எதிரிகள் என்னும் நிலையில், அவர்களின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு. அது தவிர்க்கமுடியாதது. ஆனால், எதிலும் உறுதியில்லா உதிரிகளா நமது எதிரிகள்? ஆதாரம் ஏதுமின்றி இவர்கள் பரப்பும் அவதூறுகளா நம்மை அசைக்கும் ஆயுதங்கள் ? காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரைக் கண்டும் காணாமல் கடந்து செல்வோம்! காலமெல்லாம் மக்களுக்காகக் கடமையாற்றுவதில் கவனம் குவிப்போம்! ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்வோம்! ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம் தள்ளுவோம்! இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

theruvasagan
நவ 21, 2024 17:43

ஒவ்வொரு ஊரிலேயும் தன்னை வெளுத்து வாங்கினதை மறைத்து ஒரு ஊரில் வாங்கின மிதிக்கு வயிறடைப்பு சரியானதாகவும் இன்னொரு ஊரில் வாங்கின குத்தில் உடம்பு வலி சரியானதாகவும் தன் நண்பர்களிடம் வடிவேலு அளந்து விடுவாரே அந்த மாதிரி இருக்கிறது. என்ன வாய்ச்சவடால் விட்டாலும் உடைந்த பிளாஸ்டிக் நாற்காலிதான் அதற்கு மேலே எதுவும் கிடைக்காது.


விஜய்
நவ 21, 2024 17:26

செத்த பாம்பை அடிப்பங்களா


duruvasar
நவ 21, 2024 15:52

சரக்கு, மிடுக்கு இவை இரண்டியும் தொலைத்து விட்டு பரிதாபமாக நிற்கிறார் அன்னான் திருமாவளவன் . பரிதாபம்.


RAMAKRISHNAN NATESAN
நவ 21, 2024 14:11

உன்னை எவன் விமர்சிப்பான் ????


SUBRAMANIAN P
நவ 21, 2024 13:47

மொத்தத்துல சூடு சொரணை வெட்கம் மானம் பார்க்காம அரசியல் பண்ணுவோம். அப்போதான் பொழப்பு ஓடும்.


sankar
நவ 21, 2024 13:30

நடத்துவது சாதிக்கட்சி - இதில் பேச்சை பாரு


Ramesh Sargam
நவ 21, 2024 13:15

உனக்கு வருவதெல்லாம் அவதூறுகள்தான். விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு நீ ஒன்னும் பெரிய ஆளு இல்ல.


sankar
நவ 21, 2024 12:55

வாய்ச்சொல் வீரர்


Ramalingam Shanmugam
நவ 21, 2024 12:27

துடைத்து கொள்வோம் பிளாஸ்டிக் chair போதும்


சசிக்குமார் திருப்பூர்
நவ 21, 2024 12:21

நீ அறிவாளய வாசலில் மண்டிபோட்டு ஓசி சோத்துக்கு தொண்டர்கள் அடிவாங்கனும் இல்லையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை