வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அகரம், உகரம், மகரம் - அ உ ம - என்ற எழுத்துக்களின் கூட்டு - ஓம் என்னும் பிரணவ சொல். இதுவே உலக ஆரம்பத்தில் ஒலியாக இருந்ததாக கூறுவர். மந்திரங்களில் எல்லாம் சிறந்த மந்திரம் இதுவே. இதற்கு அதிபதி பிள்ளையார் என்னும் கணபதி. பார்வதி தேவியின் உடலில் இருந்த மஞ்சளினால் உண்டானவர். சிவ பெருமானின் கணங்களில் தலைவர். குழந்தையான பிள்ளையாரை சமாதானப்படுத்தவும் கோபத்தை தணிக்கவும் திருமால் தோப்புக்கரணம் இட்டார். இது யோகத்தின் ஒரு முக்கிய அம்சம். ரத்த மண்டலத்தை மற்றும் மூளை செயல்பட அதிகரிக்க போடப்படும் ஒரு யோககரணி இது. புத்திக்கு பிரதானமானவர். கல்விக்கும் ஞானத்திற்கும் அதிபதி. அகஸ்தியருக்கு ஞானம் அளித்தவர். தமிழ்நாட்டில் ஒவையாருக்கு ஞானத்தை அளித்தவர். குண்டலி சக்தியையும், பிரணவ தத்துவத்தையும் உபதேசித்தவர். தமிழ்நாட்டு 18 சித்தர்களில் ஒருவரான கும்பை சித்தருக்கு உபதேசம் செய்தவர். அவர் மாயவரம் சிவன் கோவில் பிள்ளையார் சன்னதியில் சித்தி அடைந்தார்.
தினமலர் வாசகர்கள், தொழிலாளிகள், அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்