வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நடப்பது அவர்களின் ஆட்சி , அப்புறம் எப்படி சிக்கல் , சிக்கல் வந்தால் அவருக்கு அண்ணா நகர் ரமேஷ் போன்று தான் நடக்கும்
ஸ்டாலினின் பொறுப்பிலுள்ள போலீஸ்துறை இவ்வழக்கை திடீரென முடித்து வைத்தது சந்தேகத்துக்குரியது. இதுமாதிரி குட்டுக்கு பிறகு அவர் இப்பதவியில் நீடிப்பது நீதிக்கு எதிரானது. தேர்தல் பத்திரம் பெற்றதற்கு நன்றிக் கடனா?
காருண்யா உள்ளத்தை கொண்ட ஸ்டாலின் என்ன செய்வார் ?
நீதித்துறையில் ஊழல் புரையோடிக்கிடக்கிறது... திராவிட மாடலுக்கு நன்றி... சட்டமேதை அம்பேத்கருக்கு நன்றி .....
இதே ஆளின் மீது கேரள அரசு வழக்கு நடந்த போது மார்ட்டினுக்கு ஆதரவாக ஆஜராக அப்போதைய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை முதல்வர் கருணாநிதி அனுப்ப முயன்றது வெளியானது. திமுக இருக்கும் வரை இவர் மீது இங்கு நியாயமான விசாரணைக்கு வாய்பில்லை.
திமுக வுக்கு 550 கோடி தே.பத்திர தட்சணை கொடுத்தவுடன் நிரபராதியாகிவிட்டாரா? இனி இந்த வழக்கை தமிழக போலீஸ் கையில் விடக்கூடாது.
நீதிமன்றம் அந்த மாஜிஸ்திரேட் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? என்பதுதான் இப்போது பிரதான கேள்வி இதேபோன்று ஒரு அப்பாவி வழக்காக இருந்திருந்தால் அரசு என்னபாடு அவரை படுத்தியிருக்கும் ஏன் இன்னும் தாமத செய்யாமல் அந்த குற்றப் பின்னணியில் இருக்கும் அந்த மாஜிஸ்திரேட் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதி மன்றமே தயங்குகிறது இதற்கு ஒரு பாடம் கற்பிக்கவில்லை யென்றால் இதேபோன்று இனி பல வழக்குகள் தானாகவே முடிக்கப் பட்டு கேட்டப்பிரில்லாமல் போயிடும் நீதி செத்துவிட்டது என்றுதான் அர்த்தம் உச்ச நீதிமன்றம் முன் வந்து நீதிக்கு உயர் கொடுக்குமா
நீதிமன்றம் அந்த மாஜிஸ்திரேட் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது ? இது போன்றவர்கள் உயர் மற்றும் உச்சநீதிமன்றம் நீதிபதிகளானால் நீதி என்னவாகும்? மாஜிஸ்திரேட் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படாதது போன்றவற்றை காரணம் கட்டி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ....
இப்படியேதான் பல்வேறு நபர்களுக்கு ஆதரவாக போலீஸ் நடந்துகொண்டு பல்வேறு வழக்குகளிலிருந்து விடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழக ஆளும் தரப்புக்கு மிக வேண்டிய நபர்களுக்கு இப்படிப்பட்ட சலுகைகள் கிடைத்துள்ளன. குறிப்பாக பொன்முடி வழக்கை சொல்லலாம். மீண்டும் விசாரணைக்கு வந்தபின்னர்தான் அவருக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மூன்றாண்டு தண்டனையை கொடுக்க முடிந்தது. அதேபோல பெரியசாமி கே கே எஸ் எஸ் ஆர் கருப்பன் போன்றோரும் சர்வசாதாரணமாக விடுவிக்கப்பட்டனர். பின்னர் உயர்நீதிமன்றம் தலையிட்டு மீண்டும் வழக்கை விசாரிக்க சொன்னது. இப்படி நீண்டுகொண்டே போகும் வழக்கில் இப்போ மாட்டிக்கொண்டது கருணாநிதியின் குடும்பத்துக்கு மிக நெருக்கமான மார்ட்டின். இதனால் கோபம் கொள்ளுகின்ற திராவிட மாடல் அரசு, சட்டமன்றத்தில் அமலாக்கத்துறையை தமிழ்நாட்டுக்குள் வரவிடாமல் தடுக்க சிறப்பு சட்டம் கூட போடுவார்கள். எப்படி சிபிஐ தமிழகத்தில் நுழையக்கூடாது என்று சட்டம் போட்டார்களா அதே போன்று அமலாக்கத்துறையும் நுழையாமலிருக்க மார்ட்டினுக்காக செய்தாலும் செய்வார்கள் சட்டத்தில் ஓட்டை ஏதுமிருந்தால். இதுபோன்ற ஒரு ஆளும் கட்சியை இதுவரை இந்தியாவே கொண்டிருக்காது. இவ்வளவு வந்தடைந்து கூட இந்த அரசின் நடவடிக்கையை பற்றி பேச எந்த ஊடகமும் இல்லாமலே போயிற்று. என்னமோ தினமலர் மட்டுமே இந்த செய்தியை கொண்டுவந்துள்ளது. தினமலரும் இல்லைன்னா பல விஷயங்களை தமிழக மக்கள் காதுகளில் விழ சந்தர்ப்பமே இருந்திருக்காது. மார்ட்டின் வழக்கு விசாரணையால் கோபம் கொள்ளும் தமிழக ஆளும் தரப்பு இன்னும் மோசமாக விமர்சிக்கும் மத்திய ஆளும் அரசை.
மொத்தத்தில் மாநில அளவில் நீதித்துறை அழுகிப்போய் இருப்பதை இது போன்ற பல வழக்குகள் காட்டுகின்றன.