உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்

நீதிபதியை விமர்சித்தவருக்கு கிடைத்தது ஜாமின்

சென்னை: கரூர் சம்பவம் குறித்த வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர், சமூக வலைதளத்தில் கருத்துகளை வெளியிட்டதாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அக்., 7ல் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை உயர் நீதி மன்றத்தில், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'சமூக வலைதளத்தில் பதிவிட்டதை நீக்க வேண்டும்; மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன், இரண்டு வாரங்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்' என்ற நிபந்தனைகளுடன், ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Abdul Rahim
அக் 28, 2025 17:08

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலனி வீசியவனை இன்னும் கைது செய்யவில்லையே ஏன் ஓஹோ சங்கி அரசின் ஆதரவாளன் என்பதாலா ,நாட்டின் தலைமை நீதிபதி மீது காலனி வீசியதை சங்கிகளின் அரசின் பிரதமரோ மற்ற எந்த அமைச்சனோ ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை த்தூ மானகெட்டவனுங்களா.


Thiagaraja boopathi.s
அக் 28, 2025 15:09

அவர் கேட்ட கேள்விகளை தான் உச்ச நீதிமன்றம் கேட்டது


c.k.sundar rao
அக் 28, 2025 10:28

Judge who gave judgement in the case filed by DMK supporter was criticised of his action in supreme court, so FIR filed by police in this case should be quashed and set vardarajan free.


நிக்கோல்தாம்சன்
அக் 28, 2025 10:03

இங்கே எது சர்வாதிகாரம் என்பது உணர முடிகிறது . சட்டம் பல மாற்றப்பட வேண்டிய காலமிது


Ramesh Sargam
அக் 28, 2025 09:51

இன்று பல நீதிபதிகளின் செயல்கள், தீர்ப்புக்கள் மிகவும் விமர்சிக்கப்படுகின்றன. மக்கள் அந்த அளவுக்கு ஒரு சில தவறான தீர்ப்புக்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்படுகின்றனர். அந்த வெறுப்பில் நீதிமான்களையே விமர்சிக்க துணிகின்றனர். ஆக தவறு யாருடையது?