உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாசனத்திற்கு நீரின்றி கடைமடையில் தரிசாகும் நிலங்கள்

பாசனத்திற்கு நீரின்றி கடைமடையில் தரிசாகும் நிலங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மயிலாடுதுறை: டெல்டாவின் கடைமடை பகுதியில் பாசனத்திற்கு தண்ணீரின்றி விளை நிலங்கள் தரிசாக கிடக்கும் நிலையில், பெருக்கெடுத்து வரும் காவிரி நீர், கொள்ளிடம் வழியே வீணாக கடலில் கலப்பது வேதனையாக உள்ளது.சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் சாகுபடி செய்யப்படும் காவிரி டெல்டா மற்றும் கடைமடை பகுதியில், ஒவ்வொரு போக சாகுபடியின் போதும், கர்நாடகத்திடம் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வாயிலாக வாதாடி, போராடி தண்ணீரை பெறும் நிலை உள்ளது.இவ்வாண்டும் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் கை விரித்த நிலையில், இயற்கையின் வரமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து, கர்நாடக அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.இதையடுத்து, கடந்த 28ம் தேதி மேட்டூர் அணையும், 31ம் தேதி கல்லணையும் திறக்கப்பட்டு, நேற்று முன்தினம் கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில், வினாடிக்கு 81,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நேற்று மாலை வராத நிலையில், கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று முன்தினம் மதியம், மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது.

கானல் நீரானது

கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட, 2 லட்சம் கன அடிக்கு மேலான நீர் பழையாறு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.உபரி நீரை பாசனத்திற்கு ஆறு மற்றும் வாய்க்கால்கள் வழியே திருப்பி விட முடியாததால், மாவட்டத்தில் உள்ள வீரசோழன் ஆறு, நண்டலாறு, மகிமலையாறு, அய்யாவையனாறு, மஞ்சள் ஆறு, புது மண்ணியாறு உள்ளிட்ட ஆறுகளும், வாய்க்கால்களும் வறண்டு கிடக்கின்றன.கடைமடை பகுதியில் பம்ப் செட் வாயிலாக, 93,000 ஏக்கரில் நெல்லும், 15,000 ஏக்கரில் பருத்தியும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், பெரும்பாலான விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டு, விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.கொள்ளிடம் ஆற்றில் வரும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, ஆதனுார்- - குமாரமங்கலம் இடையே அமைக்கப்பட்டுள்ள கதவணை போல ஒவ்வொரு 3 கி.மீ., துாரத்திலும் அணைகளை கட்டி, தண்ணீரை தேக்கி விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என்ற விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கை கானல் நீராகவே உள்ளது.

ஆடிப்பெருக்கு

தமிழகத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழா, காவிரி மற்றும் கிளை நதிகள், வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், கலையிழந்து காணப்பட்டது. மக்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடும் நிலைக்குதள்ளப்பட்டனர்.மயிலாடுதுறை நகர் பகுதி மக்கள், காவிரி துலா கட்டத்தில் நகராட்சி சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்ட புஷ்கர தொட்டியில் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.முன்கூட்டியே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடு திட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பல நுாறு ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி, பருத்தி, கீரை தோட்டக்கலை பயிர்கள் முற்றிலுமாக நாசமாகின.வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதியில் உள்ள மக்களையும், கால்நடைகளையும் மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு படை மற்றும் போலீசார் இணைந்து தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 05, 2024 22:43

ஒருபுறம் ஆற்றில் வெள்ளம். நீர் கடலில் வீணாக சென்று சேர்கிறது. மறுபுறம், பாசனத்திற்கு நீர் இல்லை. இந்த நிலைமைக்கு காரணம், இலவசங்களை பெற்றுக்கொண்டு நாம் தேர்ந்தெடுத்த அரசுதான். மழைக்காலத்தில் கிடைக்கும் தண்ணீரை முறையாக அணைகள் கட்டி சேமித்திருந்தால், ஏரி குளங்களை அழிக்காமல் அவற்றில் சேமித்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா? தன்னுடைய வாரிசை அடுத்த முதல்வராகும் ஒரே எண்ணத்தில் இப்பொழுதுள்ள முதல்வர் செயல்பட்டுகொண்டு இருக்கிறார். நாட்டு நடப்பு பற்றி அவருக்கு கவலையில்லை. பின் நாடு எப்படி உருப்படும்?


Apposthalan samlin
ஆக 05, 2024 12:13

எவனாவது காவேரி தண்ணீர் பத்தி பேசட்டும் கடலில் வீண்ணா கொள்கிற தண்ணீரை விவசாயிகளை கேட்டு செம்மிங்கடா


Ms Mahadevan Mahadevan
ஆக 05, 2024 09:47

நீர் பாசன அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? நாற்காலியை தேய்த்து கொண்டு சம்பளம் வாங்கினால் போதாது . உடனே செயல் பட வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் நீதி மன்றத்தை நாட வேண்டும்


Kasimani Baskaran
ஆக 05, 2024 05:44

அதுதான் திராவிட மாடலில் கட்டப்பட்ட தடுப்பணையை தண்ணீர் அடித்துபக்கொண்டு போய்விட்டதே. ஆற்று மணலில் கட்டியிருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.


Mani . V
ஆக 05, 2024 05:05

நாங்கள் கடலில் கொண்டுபோய் சேமித்து வைத்துள்ளோமாக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை