உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை: பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபசாகுமா?

அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை: பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபசாகுமா?

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சருடன் இன்று(ஜன.,8) பேச்சு நடத்த உள்ளன. இதில், உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளன.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம், 19ம் தேதி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 26 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின.வேலை நிறுத்தத்தை தவிர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, இதுவரை மூன்று கட்ட பேச்சு நடந்துள்ளது. இருப்பினும், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நேற்று பேசுவதாக இருந்தது. ஆனால், உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று துவங்கியதால், அமைச்சருடன் இன்று பேச்சு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது.ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வு, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத அகவிலைப்படி உயர்வு, ஊதிய ஒப்பந்த பேச்சு தேதி அறிவித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mohan
ஜன 08, 2024 13:20

எப்போவும் போல தி மு க வோட பார்முலாவை கையில் எடுங்கள் அந்த தொழிற்சங்க தலைவருக்கு படியுரமாதிரி எதாவது குடுங்க இல்லாட்டி மிரட்டி பாருங்க ...அப்படித்தானா விக்ரம ராஜாவை பண்ணுனீங்க ...அவ்ளோ தான் மேட்டர் கிளோஸ்


கருத்து சுந்தரம்
ஜன 08, 2024 11:39

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் தனியார் பேருந்துக்கு மவுசு ஜாஸ்தி ஆயிடுமே! ???????????? அப்போ அங்கேயும் ஏதாவது ஆட்டைய போடலாமா ????


R. Vidya Sagar
ஜன 08, 2024 11:01

அப்பன் வீட்டு காசை வச்சு சரிக்கட்டி விடுவார்கள்.


முருகன்
ஜன 08, 2024 07:45

அனைத்து அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்கள் செய்யும் வேலை , பெறும் சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து செயல்பட வேண்டும்


Ramesh Sargam
ஜன 08, 2024 07:28

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சரின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். அமைச்சர் எந்த வாக்குறுதி அளித்தாலும், அதை ஒரு பாண்ட் பேப்பரில் எழுதி கையொப்பமிட்டு கொடுக்குமாறு நிர்பந்தியுங்கள். அது நடைமுறை இல்லை என்று பலர் கருத்து தெரிவிக்கலாம். புதிய நடைமுறைக்கு மாறுவோம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை