| ADDED : டிச 03, 2025 05:42 AM
தமிழகத்தில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை அளித்ததன் வாயிலாக, சமீபத்திய விபத்துகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு எதிராகவே, கவர்னர் ரவி தன் முழு அதிகாரத்தையும் அரசியல் சாசனத்திற்கு எதிராக பயன்படுத்தி வருகிறார். பா.ஜ.,வை தமிழகத்தில் எதிர்ப்பதற்காகவே தி.மு.க.,வுடன் கைகோர்த்துள்ளோம். அதனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம். அமலாக்கத்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட வற்றை வைத்து, எதிரிகளைக்கூட நண்பர்களாக கொண்டு வர, அதிக ரெய்டுகள் தமிழகத்தில் நடக்க வாய்ப்பு ள்ளன. - சண்முகம், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,