உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் கூட்டணி தான் பெருசு; மாநாட்டில் அறிவிக்கிறேன் என சீமான் சூசகம்!

என் கூட்டணி தான் பெருசு; மாநாட்டில் அறிவிக்கிறேன் என சீமான் சூசகம்!

சென்னை: ''தமிழகத்தில் பெரிய கூட்டணி என்னுடையது தான். 8 மாதங்கள் பொறுத்திருங்கள். மாநாட்டில் அறிவிக்கிறேன்'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் நிருபர்கள் சந்திப்பில், சீமான் கூறியதாவது: தி.மு.க.,வை எதிர்க்கும் ஒரே அணி நாம் தமிழர் கட்சி தான். எல்லாத்தையும் வீழ்த்த வேண்டும் என்று இருக்கிறோம். எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. ஒரு தீமைக்கு மாற்று ஒரு தீமை அல்ல. நெருப்பை, நெருப்பால் அணைக்க முடியாது. நெருப்பை அணைக்கு நீர் யார் என்று இருக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9zq56vpb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாங்கள் நீராக இருப்போம். இந்திய கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகின்றனர். இந்த மண்ணிற்கும், மக்களுக்குமான தேவைகளை அதிகாரத்தில் இருப்பவர்கள் நிறைவேற்றி இருந்தால், அந்த கட்சிகள் இந்த நிலத்திற்கு வர வேண்டிய, உருவாக வேண்டிய நிலை ஏன் உருவாகிறது. வலிமை மிக்க காவல்படையை வைத்திருக்கும் நாம், சி.பி.ஐ., விசாரணை கேட்கும் போது, நம்மிடம் இருக்கும் போலீசாரை விட மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்களிடம் உள்ள சி.பி.ஐ., சிறப்பாக விசாரிக்கும். நீதியை நிலைநாட்டும், உண்மையை வெளி கொண்டு வரும் என்றால், அரசே, ஆட்சியாளர்களே கேட்பதே எப்படி எடுத்து கொள்ள முடியும். இந்திய கட்சிகள் தமிழகத்திற்கு ஏன்? தேவை ஏன் என்று சொல்லுங்கள். காவிரி நதி நீரில் எனக்காக நிற்குமா? கர்நாடகாவில் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று சொல்வது காங்கிரசும், பா.ஜ.,வும் தான். தமிழ்மொழி மீட்சி, வீழ்ச்சி, நிலத்தின் வளத்தை காக்க நிற்குமா? தமிழகத்தில் பெரிய கூட்டணி என்னுடையது தான். 8 மாதங்கள் பொறுத்திருங்கள்; மாநாட்டில் அறிவிக்கிறேன்; நான் பா.ஜ.,வின் B டீம் என்றால், A டீம் என்று ஒன்று இருக்கும் தானே? அது தான் தி.மு.க., இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vel1954 Palani
ஜூலை 22, 2025 20:05

பொழுதுபோக்கு வெட்டி பேச்சு. கால்நடைகள் மாநாட்டுக்கு பின் பாப்போம் . கொல்லான் புலாலை மருதானை எல்லா உயிரும் தொழும் . ஓம் திருவள்ளுவாயா நமஹ


joe
ஜூலை 22, 2025 19:07

welcome .......good


theruvasagan
ஜூலை 22, 2025 17:40

இந்தாளு சொல்றது தும்பிகளுக்கே புரியாது. மக்களுக்கு எங்கே புரியப் போகிறது. அது சரி. அவ்வளவு விவரமா இருக்கறவனாக இருந்தால் இவருகிட்ட எதுக்கு தும்பியாக இருக்கப் போகிறான்.


Karthik Madeshwaran
ஜூலை 22, 2025 17:20

Seeman is simply a waste of time. We only expect serious jokes from him—nothing more. He should try harder


T.sthivinayagam
ஜூலை 22, 2025 17:11

பாஜாகா அண்ணாமலை சார் விசயத்தில் நீங்கள் சொன்னது தான் நடந்து உள்ளது என்று மக்கள் பேசுகின்றனர்


என்றும் இந்தியன்
ஜூலை 22, 2025 17:01

என் கூமூட்டையணி தான் பெருசு இப்படி சீமான் சொன்னதாக படித்தால் அதன் உண்மை அர்த்தம் விளங்கும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 22, 2025 16:31

நாட்டை பிரிக்க நினைக்கும் பிரிவினை வாதி. மிகவும் ஆபத்தானவர். உளவு அமைப்புகள் எப்போதும் இவர் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


Anbuselvan
ஜூலை 22, 2025 16:24

கேட்டால் நான் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளேன் என்பார். அதுதானே பெருசு. :


கல்யாணராமன்
ஜூலை 22, 2025 16:12

திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி கேட்கத்தான் தெரியும் சீமானுக்கு பதில் தெரியாது. எதிர் கட்சியாக இருக்கும்போது கேள்வி கேட்கலாம் ஆளும் கட்சியாக ஆகிவிட்டால் அதற்கு கேள்வி கேட்டவரே பதில் சொல்ல முடியாது.


Suppan
ஜூலை 22, 2025 16:06

எங்களுடைய கூட்டணியில் ஆடுகள், மாடுகள் , கோழிகள் மீன்கள் ஆகியவை சேரும். அதனால்தான் அவைகளுக்காக மாநாடுகள் நடத்தினேன். ஆகவே எங்களுடைய கூட்டணிதான் மிகப் பெரியதாக இருக்கும் புகா புக ஹா


சமீபத்திய செய்தி