உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் புதியதாக 13 நகராட்சிகள் உருவாக்கம்!

தமிழகத்தில் புதியதாக 13 நகராட்சிகள் உருவாக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கன்னியாகுமரி, அரூர் உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் வருமாறு; தமிழகம் நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின், பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன.இப்பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியம் ஆகிறது. இதன் மூலம் தொடர்புடைய பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை சுற்றி அமைந்துள்ள பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுக்கு சமமாக வளர்ந்து வருகின்றன. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது, சமுதாய பயன்பாட்டுக்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.இவற்றோடு, வேகமாக நகரமயமாகிவரும், வளச்சியடைந்து வரும் பெரும்பாலான சிறிய உள்ளாட்சி அமைப்புகளால் மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி மற்றும் இடப்பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுதல் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிப் பணிகள், சேவைகளுக்கான விரைவான, திறம்பட்ட செயலாக்கத்துக்கான பொறியாளர்கள் உள்ளிட்ட தேவையான பணியமைப்பு குறைந்த அளவிலேயே உள்ளது போன்றவற்றை களையவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது.இதன்மூலம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்க ஏதுவாகும். இம்மேம்பாட்டினால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழிலகங்கள் ஏற்படவும், வேலைவாய்ப்பு உருவாகவும், வருவாய் பெருகவும், அனைத்து தரப்பு வளர்ச்சிக்கும் ஏதுவாகும்.அரசு, நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இதன்படி, கடந்த 2021ம் ஆண்டு 6 புதிய மாநகராட்சிகள் மற்றும் 28 நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதே போன்று,10.08.2024 அன்று திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாநகராட்சிகள் அருகிலுள்ள 2 பேரூராட்சிகள் மற்றும் 46 ஊராட்சிகளை இணைத்து, அனைத்து சட்ட நடைமுறைகளை பின்பற்றி மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கியுள்ளது. மேலும், 12.08.2024 அன்று மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக அமைத்துருவாக்க உத்தேச முடிவினை அறிவித்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில், அரசு, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழு அளவிலும் வழங்குதல் (comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, தகுதியான மேலும் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பை மேற்கொள்வதென முடிவு செய்துள்ளது.தற்போது, 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் 2025, ஜன.5ம் தேதி நிறைவடைகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புறத்தன்மை வாய்ந்த ஊராட்சிகளை அருகிலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுடன் இணைக்கவும். பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக அமைத்துருவாக்கம் செய்திடவும் உள்ளாட்சி அமைப்புகளின் மறு சீரமைப்பு தொடர்பான உயர்நிலைக்குழு, மாவட்ட ஆட்சியர்களுடன் மேற்கொண்ட தொடர் ஆலோசனைகளின் அடிப்படையில், உரிய செயற்குறிப்புகள் பெறப்பட்டுள்ளன.அரசு, இச்செயற்குறிப்புகளை பரிசீலித்து, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்து உருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொண்டுள்ளது.இது தொடர்பாக தக்க சட்டவகை முறைகளின் கீழ் ஆணைகள் வெளியிடப்பட்டு, உரிய நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான தரமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அளித்திடும் நோக்கத்தை சிறப்பான முறையில் எய்திடும் வகையில், தொடர்ச்சியாக அமைந்துள்ள பகுதிகளை (contiguous areas) ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்கள் உள்ளிட்ட வளர்ச்சிக்கான அனைத்து ஆதாரங்களும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையில் உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கான ஒட்டுமொத்த திட்டமிடுதலை மேற்கொள்ளவும், இடஞ்சார்ந்த திட்டமிடல் (spatial planning) உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்தல், திறம்பட செயலாக்குதல் மூலம் திட்டமிடப்பட்ட நகர்ப்புர வளர்ச்சியை நெறிமுறைப்படுத்தவும் ஏதுவாகும்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுள்ள தமிழக அரசு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையின் பேரில் ஐந்து அரசாணைகளை வெளியிட்டுள்ளது. இவ்வரசாணைகள் தமிழக அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.அரசு,நகரமயமாக்கலின் சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் வகையில், சீரான நகர்ப்புற வளர்ச்சி, செம்மையான நிர்வாகம் ஆகியவற்றை உறுதிசெய்ய தேவையான இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் 25 பேரூராட்சிகளின் பட்டியல்1.முகாசி பிடாரியூர்2.கணியூர்3.அரசூர்4.பேரூர் செட்டிபாளையம்5.அத்திப்பட்டு6.பாடியநல்லுார்7.விராலிமலை8.காளையார்கோவில்9.ஏற்காடு10.மணிவிழுந்தான்11.பாகலுார்12.பட்டணம்13.கூத்தப்பாடி14.ராயக்கோட்டை15.சூளகிரி16.திருமயம்17.தேவிபட்டினம்18.ஏர்வாடி19.தலைவாசல்20.புதியம்புத்துார்21.இருங்களூர்22.நத்தக்காடையூர்23.கடம்பத்துார்24.கொள்ளிடம்25.தோக்கவாடிதமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள 13 நகராட்சிகள் தமிழகத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியாக தமிழக அரசு உத்தரவு. அதன்படி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட ஊர்கள் விபரம். சங்ககிரிகோத்தகிரிஅவிநாசிபெருந்துறைகவுந்தம்பாடிபோளூர்செங்கம்கன்னியாகுமரிஅரூர்சூலூர்மோகனூர்நார வாரி குப்பம்வேப்பம்பட்டுஇதில் கன்னியாகுமரி நகராட்சியாக தரம் உயர்வு அறிவிப்பை திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

R MUTHUKUMARA SAMY
ஜன 02, 2025 12:34

வேப்பம் பட்டு நகராட்சி நான்கு ஊராட்சிகளை இனைத்து உருவாக்க படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் வேப்பம் பட்டு ரயில் நிலையத்தில் ரயில் பாதையை கடக்க ஒரு நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை இல்லை. வாகனப் போக்குவரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலம் பதினைந்து வருடங்களாக வேலை முடிக்காமல் உள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்ட வேலையும் ஆமை வேகத்தில் கூட செல்லவில்லை. பழைய ஊராட்சி தலைவர்கள் அவர்கள் சொந்தக்காரர்கள் மற்றும் அவர்களது ரியல் எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே சாலை அமைத்துள்ளனர். 26 வேப்பம் பட்டு கொஞ்சம் பரவாயில்லை 25 வேப்பம் பட்டு மிக மோசம். திருவள்ளூர் மெயின் ரோட்டில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகள் நிறைந்த பகுதிகளில் கூட நல்ல சாலை வசதி இல்லை.இப்படி மக்களின் சராசரி வாழ்க்கைக்கு தேவையான எந்த வசதிகளும் இல்லாத நிலையில் நகராட்சி என்பது வேடிக்கையான விஷயம். போதுமான நிதி ஒதுக்கி ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்து பின்னர் நகராட்சி ஆக்கினால் மக்கள் பயன்பெற முடியும். இப்போது ரியல் எஸ்டேட் மட்டுமே வளரும்.


தமிழ்வேள்
ஜன 01, 2025 20:33

இந்த லிஸ்டில் இறுதியில் உள்ள வேப்பம்பட்டு அதிக பேருந்து வசதிகள் இன்றி சென்னைக்கு அருகில் இருந்தாலும் கிராமம் போலத்தான் உள்ளது...பஸ் இயங்காத பஸ் நிலையம் கொண்ட ஊர்...மா.போ.க பணிமனை அமைத்து பஸ் போக்குவரத்து அதிகரித்தால் தான் நகராட்சிக்கு உண்டான மேலதிக வளர்ச்சி கிடைக்கும்.... இல்லை என்றால் வரி கூடுதல் மட்டுமே இருக்கும்


M Ramachandran
ஜன 01, 2025 19:36

பிரித்தாளும் கொள்கை .காசு பார்க்கத்தான்...


raja
ஜன 01, 2025 19:33

அதாவது இப்படி எந்த வசதியும் செய்யாமல் தரம் உயர்த்தி சொத்து வரி, குடிநீர் வரி குப்பை வரி, தொழில் வரியிலிருந்து அனைத்து வரியையும் உயர்த்தி கொள்ளை அடிக்கலாம் அல்லவா அதான்....


சாண்டில்யன்
ஜன 01, 2025 19:59

பலவிதமான வரிகளையும் செலுத்திவிட்டு டில்லியிடம் கையேந்தினாலும் அழுதுபுரண்டு கெஞ்சினாலும் பைசா தராத நடுவண் அரசின் அடாவடித்தனத்தை காண்கிறோம் அதைகூட புரிந்து கொள்ளாமலே இங்கே கிளிப்பிள்ளைகளாய் சிலர் இந்த நிலைமையில் சிறு நகரங்களை மேம்படுத்த பப்ளிக் பண்டிங் தேவை அங்கே சில வரிகளை உயர்த்தி கிடைப்பதைக் கொண்டும் மாநில அரசின் பணத்தைக் கொண்டும் அங்கேயே செலவிட்டு மேம்படுத்தலாம் உதாரணத்துக்கு பாதாள சாக்கடை திட்டத்துக்கெல்லாம் இந்த முறையில்தான் பணம் வசூலிப்பது பல காலமாக நடை பெறுகிறது என்பது இவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை


புதிய வீடியோ