உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்வி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

கல்வி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

சென்னை:'உயர் கல்வி நிறுவனங்கள், பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்' என, அமைச்சர் கோவி.செழியன் அறிவுறுத்தி உள்ளார்.பல்கலை பதிவாளர்களுடனான, ஆலோசனை கூட்டத்தில், அவர் கூறியதாவது:* சென்னை அண்ணா பல்கலையில் நடந்தது போன்ற விரும்பத்தகாத சம்பவம், வேறு எங்கும் நடக்காமல் இருக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் * கல்வி நிறுவனங்களில், இரவு நேரங்களில் அனைத்து பகுதிகளிலும், மின் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் * கல்வி நிறுவன வளாகத்துக்குள் வருவோர், வெளியில் செல்வோர் குறித்த விபரங்களை, பதிவேடில் பராமரிக்க வேண்டும் *வளாகத்துக்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும், அடையாள அட்டை அணிந்து இருக்க வேண்டும்* அவசர காலங்களில் உதவ, காவல் துறை உருவாக்கி உள்ள, 'காவல் உதவி' செயலி குறித்து, மாணவர்கள், மாணவியருக்கு எடுத்துரைக்க வேண்டும்* கல்வி நிறுவனங்களில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள் இரவு நேரத்தில், தொடர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் * பாதுகாப்பு நடவடிக்கைகளில், மாணவ, மாணவியரின் ஆலோசனையை பெற்று, அதன் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை