உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் பிரதமரின் வாகன அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்

கோவையில் பிரதமரின் வாகன அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை: கோவையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட வாகன அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்த்து பாஜ., சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அணிவகுப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.கோவை, நீலகிரி, பொள்ளாச்சி லோக்சபா தொகுதிகளை மையப்படுத்தி பிரதமர் மோடி, கோவையில் பிரமாண்ட வாகன அணிவகுப்பு நிகழ்ச்சி வரும் 18 ம் தேதி மாலை 4 மணிக்கு துவங்கி 6:00 மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=049yqteq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 கோவை மேட்டுப்பாளையம் சாலை கண்ணப்ப நகர் பிரிவில் இருந்து புறப்படும் பிரதமரின் வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் சாலையின் இருமருங்கிலும் பொது மக்கள், கட்சியினருடன், மாணவர்கள், இன்ஜினியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஏராளமானோர் திரண்டு, மலர்தூவி மரியாதை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த வாகன அணிவகுப்பு பேரணிக்கு கோவை போலீசார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.இது தொடர்பாக, போலீசார் அளித்த விளக்கம்: பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், அனுமதி வழங்கப்படவில்லை. பிரதமருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பயங்கரவாத அமைப்புகளால் அச்சுறுத்தல் உள்ளது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி என்றால், அங்கு வரும் ஒவ்வொருவரையும் நுழைவு வாயிலில் சோதனை செய்ய முடியும். ஆனால், சாலையில் 4 கி.மீ., தூரத்திற்கு பேரணி நடக்கும் போது ஒவ்வொரு தனி நபரையும் சோதனை செய்வது கடினம். எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படுவது இல்லை. இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.இதனை எதிர்த்து பா.ஜ., தரப்பில் , சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை மாவட்ட பா.ஜ.,தலைவர் ரமேஷ்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்கும்படி வலியுறுத்தப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் பங்கேற்கும் வாகன அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

ram
மார் 16, 2024 11:02

இவர்கள் முதலில் தடை என்று சொல்லி நீதிமன்றம் மூலம் நடத்தலாம் என்று தீர்ப்பு, இதன் மூலம் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம், மத்திய துணை ராணுவத்தை காவலுக்கு வைத்தால் நன்றாக இருக்கும். தமிழக காவல் துறையை நம்புவதர்கு இப்போது வழி இல்லை. எதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் ஏற்கனவேய சொன்னோமே என்று நழுவி விடுவார்கள்.


surya krishna
மார் 16, 2024 09:35

தேர்தலில் தோல்வியை திராவிட கட்சிகளுக்கு பரிசளிப்பார்


surya krishna
மார் 16, 2024 09:35

தேர்தலில் தோல்வியை திராவிட கட்சிகளுக்கு பரிசளிப்பார்


PalaniSamy Kumar
மார் 16, 2024 08:58

இப்பதான் இந்த காக்கிச்சட்டைக்காரருக்கு பிளஸ் டூ மாணவர்கள் தேர்வு பற்றி சிந்தனை வருதா எங்கெல்லாம் சிறுபான்மையினர் இருக்கிறார்களோ அந்த கிராமத்தில் எல்லாம் போய் பாருங்க பிளஸ் டூ மாணவர்கள் அந்த கிராமத்தில் எல்லாம் படிக்கிறது கோர்ட் பரிந்துரைக்கும் அளவுக்கு மூன்று மடங்கு நான்கு மடங்கு சத்தம் எழுப்பும் அளவுக்கு நிலைமை உள்ளது அதை கேட்க துப்பில்லை


sankaranarayanan
மார் 16, 2024 07:43

பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட வாகன அணிவகுப்புக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என்ற செய்தி தமிழகத்தில் இதுவரை எந்த முதல்வரும் இதுபோன்ற செயலை செய்ததே இல்லை..


Ramesh Sargam
மார் 15, 2024 23:49

"தமிழகம் ஒரு அமைதி பூங்கா" என்று அடிக்கடி சொல்வாரே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அப்படி இருக்கும்போது பிரதமரின் பேரணிக்கு என்ன அச்சுறுத்தல்? அட நீங்க ஒன்னு, முதல்வரின் பேரணிக்கே ஊரில் உள்ள அனைத்து போலீசாரும் பாதுகாப்பு கொடுப்பார்கள். "அமைதி பூங்கா" என்று சொல்வது ஒரு பேச்சுக்கு, அவ்வளவுதான்.


Anantharaman Srinivasan
மார் 15, 2024 23:16

மோடி ஊர்வலத்தை பாதுகாப்பு காரணங்களைச்சொல்லி திமுக தடைசெய்ய முயன்றிக்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் 1972/1976 ல் காமராஜர் ராஜாஜி க்கு சேர்ந்த கூட்டத்தைப்பார்த்து தமிழ்நாடே ஏமார்ந்தது.


suresh
மார் 16, 2024 13:16

எப்படி ? திராவிடத்தை பார்த்து தமிழர்கள் ஏமார்ந்தது போலவா ?


M S RAGHUNATHAN
மார் 15, 2024 20:32

I.N.D.I கட்சி தலைவர்களிடம் பயம் தெரிகிறது. வங்காளத்தில் புலி தலையில் அடிபட்டு வீட்டில் இருக்கிறார். எப்படி அடி பட்டது, யார் தாக்கினார்கள், தள்ளி விட்டார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இரண்டு நாள் முன்னதாக, அவர் சகோதரரை தள்ளி வைத்து விட்டார் என்ற செய்தி. அதுபோல் பீகாரில் லாலு யாதவ் முதல் மகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவ மனையில்.அனுமதி. கூடிய சீக்கிரம் அரவிந்த் ஃபோர்ஜெரிவால் கைதாவர் என்று தெரிகிறது. AIIMS மருத்துவ மனையில் ஒரு சூட் ரிசர்வ் செய்யப் பட்டு இருக்கலாம்.


சிவம்
மார் 15, 2024 20:22

ஒரு நாட்டின் பிரதமருக்கு உள்நாட்டிலேயே அச்சுறுத்தல் இருக்கிறது என்று அனுமதி மறுக்கப்படுவது மகா கேவலம். குறுகிய கால நேரமின்மை, போதுமான துறை சார்ந்த அலுவலர்கள் இல்லை என்ற காரணம் ஏற்றுகொள்ள முடியும். மத்திய உள்துறை, ராணுவம் நினைத்தால், ஒரு ஈ கூட நுழைய முடியாதபடி பாதுகாப்பு அளிக்க முடியும்.


M.S.Jayagopal
மார் 15, 2024 20:00

தமிழ் நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு காவல்துறையை கண்டோ நீதிமன்றத்தை கண்டோ பயமே இல்லையோ?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை